இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, December 28, 2005

பெங்களூரில் இன்னொரு சோகம் :(

பெங்களூரில் விஞ்ஞானி சுட்டுக்கொலை * காரில் வந்த தீவிரவாதிகள் அட்டூழியம்

பெங்களூர்: பெங்களூரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) நிறுவனத்தில் நேற்று மாலை நடந்த தீவிரவாதிகளின் பயங்கர துப்பாக்கிச் சூட்டில் விஞ்ஞானி ஒருவர் பலியானார். மற்றொரு விஞ்ஞானி உட்பட ஆறு பேர் பேர் படுகாயம் அடைந்தனர்.


இதுதொடர்பாக பெங்களூர் போலீசார் கூறியதாவது:
பெங்களூரில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஜே.என்.டாடா ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை சர்வதேச அளவிலான மாநாட்டு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஐந்து பேர் அடங்கிய கும்பல் அம்பாசிடர் கார் ஒன்றில் வேகமாக வந்தது.
ஐ.ஐ.எஸ்.சி., வளாகத்திற்குள் வந்த அவர்கள் மாநாடு நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியம் அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி உள்ளே வந்தனர்.

உள்ளே வந்தவர்கள் ஏ.கே.47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் மேடையில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். மாலை 7.00 மணி அளவில் இந்தப் பயங்கரச் சம்பவம் நடந்தது.

இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் விஞ்ஞானி ஒருவர் பலியானார். மற்றொரு விஞ்ஞானி உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலையில் நடந்த இச்சம்பவத்தால் பெங்களூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



சுட்டுக்கொல்லப்பட்ட விஞ்ஞானியின் பெயர் பேராசிரியர் எல்.என்.பூரி. இவர் டில்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி., )யில் பணிபுரிபவர். காயமடைந்த விஞ்ஞானி விஜய்சந்துரு என்பவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சங்கீதா, படேல் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.

விஞ்ஞானிகளை சுட்டவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்ததும் போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

இந்தியன் இன்ஸ்டியூன் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்இதோய்பா தீவிரவாத அமைப்புகள் உட்பட பல தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் பட்டியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் அஜய் குமார் கூறுகையில், ""இது தீவிரவாதிகள் தாக்குதலா இல்லையா என்பதை தற்போதைய நிலையில் எதுவும் தெரிவிக்க முடியாது. சம்பவத்தில் தானியங்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் எப்படி வந்தனர் அவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை,'' என்று கூறினார்.

மாநாட்டு நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரிய நிர்வாகி கூறுகையில், ""மாலை 7.00 மணி அளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த நான்கு பேர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்,'' என்றார்.

இதுமட்டுமின்றி, ஐ.ஐ.எஸ்.சி.,வளாகத்தில் வெடிகுண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூர் தலைமைச் செயலகம் உள்ள பகுதி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடும் வேட்டையும் குவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்.காம்
type="text/javascript">&cmt=0&postid=113584990934472864&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 22, 2005

காதல் வலை - பகுதி 9



"யார் அது மாது ? என் கிட்ட சொல்லலாமா? "
"எதுக்கு ஈஸ்வர் அதெல்லாம் இப்ப? "
"அது முடிஞ்சு போன ஒன்னு"
"இல்ல மாது, என்னோட காதல் ஆரம்பிச்சதில இருந்து இன்னைக்கு இருக்கற நெலமை வரைக்கும் உனக்குத்தெரியும், அது மாதிரி

உன்னோட கதையும் தெரிஞ்சுக்கலாம்னு ஒரு ஆவல்லதான் கேட்கறேன், சொல்லலாம்னா சொல்லு, இல்ல சொல்லப்பிடிக்கலைன்னா

வேண்டாம்"
"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல ஈஸ்வர், அப்படி சொல்லறதுக்கு அது ஒன்னும் பெரிய லைலா மஜ்னுகதையும் இல்ல"
"பரவாயில்ல மாது, சொல்லேன், எனக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும்"
"சரி சொல்லறேன், ஆனா அப்புறம் நீ என்கிட்ட ஏன் இப்படி பண்ண? அவர் ஏன் இப்படி பண்ணார்னுல்லாம் குறுக்கு கேள்விகள்

கேட்கக்கூடாது, அப்படின்னா சொல்லறேன்"
"சரி மாது நான் எதுவும் கேட்கல, போதுமா? சொல்லேன் ப்ளீஸ்"
"சொல்லறேன்,அவர் பேர் சூர்யா, அவரும் உன்னைப்போல் ஒரு ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்தான்"
"வாவ், அப்படியா? உன்னோட கிளாஸ்மேட்டா? யூஜி, பீஜி ல? "
"ஏய், நான் படிச்சது எல்லாம் மகளிர் கல்லூரிலப்பா, அப்புறம் எப்படி கிளாஸ்மேட்?"
"எனக்குத்தெரியாது இல்ல? அதுதான் கேட்டேன், அப்புறம் எப்படித்தெரியும் அவரை?,இப்போ என்ன பண்றார் அவர்? "
"வேண்டாம் ஈஸ், அதெல்லாம் இப்ப வேண்டாமே? "
"அப்போ ஏன் போனமுறை உன்னைப்பார்த்தப்ப சொல்லல?"
"இல்ல, நீயே சோகத்தில இருந்த, இதை வேற எதுக்கு சொல்லி உன்னோட சோகத்தை அதிகமாக்கனும்னுதான்........."
மனம் சிறிதே கனிந்தது, தன் சோகம் கூட என்னைத்தாக்கக்கூடாது என எவ்வளவு கனிவாக என்னுடன் இருந்திருக்கின்றாள்?

ஹ்ம்ம்ம்...மீண்டும் பலமுறை கேட்டு அவளிடம் அறிந்துகொண்ட தகவல்கள் ஒன்றும் அவ்வளவு சுவையானவையாக இல்லை, அவர் இப்பொழுது, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப்பணியாற்றுகின்றாராம், அவர்களும் எங்களைப்போல் மின்னஞ்சல் மூலம் நட்புகொண்டவர்கள் தானாம்.
"அப்புறம் ஏன் பிரிஞ்சீங்க? "
"ஒத்து வரல,ரெண்டுபேரும் நேர்ல பார்த்து பேசிப்பிரிஞ்சிட்டோம் ஈஸ்"
மனம் சிறிதே வலித்தது.
அதன் பின்பு அதிகம் அவளைப்பற்றி பேசினோம். அதிகம் அவள் வாயைத்திறக்கவில்லை என்றாலும் எப்படியோ வார்த்தையை பிடுங்கி தெரிந்துக்கொண்டேன். பின்பு நிறைய பேசினோம். ஏன் அவளுக்கு அந்த காதலில் விருப்பமில்லை என்று. ஒருமுறை கேட்டேன் அவளை,

"என்ன உனக்கு பிரச்சனை? ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிற? "
"பிடிக்கல ஈஸ்வர், எனக்கு பிடிக்கல, வேண்டாம்னு சொல்லறதுக்கு பல காரணம் சொல்லலாம்"
"ஏண்டா பிடிக்கல?"
"பிடிக்கல ஈஸ்வர், அதுதான்"
"சரி , கல்யாணமாச்சும் செய்துக்கலாம் தானே?"
"அதுதான் பிடிக்கல ஈஸ்வர்"
"ஏண்டா எதுனா பிரச்சனையா? ****சீரியல்ல வர்ற மாதிரி?? ;) "
"ஐயோ, எப்படிடா தெரியும்?"
"ஹேய், நெஜம்மாவா சொல்லற?"
"ஆமாம்டா" என்றவளின் கண்களின் நீர் எனக்கு இங்கே தொலைபேசியில் தெரிந்தது....:(

தொடர்வேன்...
type="text/javascript">&cmt=2&postid=113526641938747816&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 19, 2005

குறுந்தகவலில் சில பெருந்தகவல்கள் ...:)



என் தம்பி டாக்டர்.ஸ்ரீதர் முதலான பலரிடம் இருந்து எனக்கு வந்த சில குறுந்தகவல்கள் எனக்கு எத்தனையோ தாழ்வான நேரங்களில் மனதைத்திடப்படுத்த உதவி இருக்கின்றன, அவற்றில் சிலவற்றினை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்....


* எப்பொழுதும் தங்களை மேலாகவே எண்ணுங்கள்
ஒவ்வொருவரிடமும் , ஒவ்வொரு சூழ்நிலையிலும்
ஏதேனும் ஒரு மேன்மை இருக்கவே செய்கின்றது
நின்றுபோன கடிகாரம் கூட
ஒரு நாளைக்கு இருமுறை சரியாக
மணி காட்டுகின்றது,
நல்ல காலை வணக்கம்....:)

*ஒரு சிறு ஒற்றை மெழுகு
மொத்த அறைக்கும் ஒளி கொடுக்கிறது,
ஆனால் உன்னைப்போன்ற ஒரு
இனிமையான சகோதரன் என்
வாழ்வு முழுதும் ஒளி கொடுப்பானே?
நன்றிகள் அண்ணா, தங்கள்
ஒளிபொருந்திய அன்பிற்கு...
நல்ல இரவு...

*தவறுகள் என்பவை
எப்பொழுதுமே வலி மிகுந்தவை,
ஆனால், சில வருடங்களுக்குப்பின்
அதே தவறுகளின் ஒரு தொகுப்பே
அனுபவம் என்று அழைக்கப்படுகின்றது
எனவே, தொடர்ந்து தவறு செய்யுங்கள்...:)

*உன்னை உண்மையில் அறிந்த
உன்மீது அன்பு செலுத்தும் ஒரு மனிதன்
யார் என்றால், உலகமே உன் முகத்தில் இருக்கும்
சிரிப்பைக்காணும் பொழுதில்
உன் கண்ணில் உள்ள வலியைக்கண்டு ஆறுதல் சொல்பவன்....

*சமுத்திரத்தைப்போல் ஆழமானது
உனக்கான என் அன்பு,
வானத்தைப்போல் அகன்றது
உன் மேல் நான் வைத்த நம்பிக்கை,
பனியைப்போல் வெண்மையானது
உன் இதயத்தின் தூய்மை,
இருளைப்போல் கருமையானது
நான் உன்னைப்பிரிந்திருக்கும் வலி,
உன்னை விரும்புகின்றேன் என்
இனிய அன்பே....:)

ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=6&postid=113502031120615027&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 15, 2005

மறவாதே கண்மணீ....



பசுமையான புல்வெளிகள்
பாய்ந்தோடும் புனலாய் நதி
பால் போன்ற வெண்ணிலா
பஞ்சனை போல் உன் மடி
மலர்ந்த உன் முகம்
மதியை பழித்துக்காட்ட
கண்ணின் பாவைகளோ
கண்மணி உன்னில் தேட,

விரைந்தோடும் அந்த காற்று
வெப்பமாய் என்னைத்தொட்டுச்செல்ல
அமர்ந்திருக்கும் உன் முகத்தில்
ஆயிரம் கவலைகள் ஏனடி?

உன் வீட்டில் பழிப்பாரோ?
என் வீட்டில் பழிப்பாரோ?
உலகம்தான் என்சொல்லுமோ?
ஊமத்தை மலரை விடையாக்குமோ?

ஆயிரம் கேள்விகள் உன் நெஞ்சில் இருந்தாலும்
அன்பான உன் தலைகோதலில்
அயர்கின்றேன் கண்கள் நான்
அனைத்தையும் மறந்தேயடி.

ஒவ்வொரு நாள் விடியலிலும்
உன் முகம்தான் சூரியனே
என்ன இந்த அதிசயமே?
சூரியனும் குளிருதடி.

அஞ்சல் பெட்டி காலம் மாறி
அழைக்கும் தொலைபேசி மாறி
மின்னலென எதிர்பார்ப்பேன்
உன்னஞ்சலை என் மின்னஞ்சல் பெட்டியில்.

உன்னஞ்சல் காணாத இன்னாளில்
இப்போதும் கண் துஞ்ச மறந்தேனடி
கண்மணியே கண் திறவாய்.
கடைவாயில் எச்சிலூற
அம்மாவரும் வழிபார்த்து
காத்திருந்த காலங்கள்
கடந்து சென்று நாளாச்சு,

காதலியின் வரவுக்காய்
கணங்களுமே வருடங்களாய்
காத்திருந்த காலங்களும்
கற்காலம் ஆயாச்சு.

மனைவி என்றே உனை நினைத்து
மனதால் உடலால் உருகி
மருங்கி மருங்கி மாய்ந்த காலங்கள்
மறுமுறைதான் வந்திடுமோ?

தொன்னூறின் அனுபவங்கள்
முப்பதிலே வந்துவிட்டால்
முன்னூறின் அனுபவத்தை
தொன்னூறில் அனுபவிக்க
இருப்பேனா இல்லை இறப்பேனா?

மறவாதே கண்மணி என
மருங்கி நின்ற நாட்கள்!
பிரியாத வரம் வேண்டி
புலம்பித்திரிந்த நாட்கள்.
உறவாக வராவிடினும்
பிரிவாக நினைக்காதே
கண்மூடிப்பார்த்திடினும்
கயல்போன்ற உன்விழிகள்
கண்முன்னே நிற்குதடி,
கண்ணகியே கண்தாடி.....
என்றும் அன்புடன்
ஸ்ரீஷிவ்,....
type="text/javascript">&cmt=5&postid=113465961168815814&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 14, 2005

மாற்றினாய்...



உன்னை இழந்த பின்புதான்
எனக்குத்தெரிந்தது நான்
எவ்வளவு பெற்றிருக்கின்றேன் என்று..

புகைபோக்கியாக இருந்த என்னை
புல்லாங்குழலாக மாற்றி இருக்கின்றாய்
விறகு கட்டையாக இருந்த என்னை
வைரமாக மாற்றி இருக்கின்றாய்
அடுப்புக்கரியாக இருந்த என்னை
அனலாக மாற்றி இருக்கின்றாய்

பொறுப்பற்று இருந்த என்னை
புதியவனாக மாற்றி இருக்கின்றாய்
பேதையாக இருந்த என்னை
மேதையாக மாற்றி இருக்கின்றாய்
கடுகு போல் இருந்த என்னை
களிறு போல் மாற்றி இருக்கின்றாய்

இறுதியான மாற்றமாய்
கலைஞனாய் இருந்த என்னை
கவிஞனாய் மாற்றி இருக்கின்றாய்
உன் இதயத்தில் சிறிது நாள் நான்
இருந்து போனதாக நீ எண்ணினாலும்
இறந்துபோகும் நாளிலும் நான்
உன்னை மறந்து போகிலேன்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=113459123173408901&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காதல் வலை - பகுதி 8



மாது சொன்னது,
"கவலப்படாத ஈஸ்வர், அவங்க இப்போ குழப்பத்துல இருக்காங்க, நான் பேசி அவங்ககிட்ட சம்மதம் வாங்கறேன், அவங்க சம்மதிப்பாங்க"அடுத்த சில மாதங்கள், மாது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஒன்று எனக்குப்பைத்தியம் பிடித்திருக்கும், இல்லையேல் அன்றே சுய கழிவிரக்கத்தில் தற்கொலையில் முடிந்திருக்கும் என் வாழ்வு. தினமும் என்னிடம் குறைந்தபட்சம் ஒரு 30 நிமிடங்களாவது அரட்டை (ச்சேட்) அடிப்பாள், சிறிது சிறிதாக மனதும் தேறிவந்தேன். ஆயினும் அந்த நினைவுகள் என்னை மிகவும் வதைத்ததென்னவோ மறுக்கமுடியாத உண்மை. அந்த சமயம் தான் அழகி திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. எப்படி இந்த விசயம் என் வீட்டில் தெரிந்ததென்று எனக்குத்தெரியாது, ஆனால் சரியாக என் தம்பி அந்த படத்தின் ஒளித்தகட்டை வாங்கி எனக்கு அனுப்பி வைத்தான். பார்த்ததும் ரொம்ப அழுகையாக வந்தது, மீண்டும் விடுதியில் அமர்ந்து மனம் குமுறி அழுதேன். அந்த சமயங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தவள் மாதுதான்,வாரம் ஒருமுறை அவளுக்கு தொலைபேசியில் அழைத்துப்பேசுவேன், வெள்ளி இரவுகள் 9.30 முதல் 10.30 வரை அவளின் விடுதி தொலைபேசி எனக்காக ஒதுக்கப்பட்டது, செல் தொலைபேசி எல்லாம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம் அது. எவ்வளவோ ஆறுதல்கள் கூறி இருக்கின்றாள் எனக்கு மாது. வாழ்வில் மீண்டும் ஒரு பிடிப்பு வந்ததென்றால் சந்தேகமே இல்லாமல் அந்த நன்றிகள் மாதுவையே சாரும்.

இடையில் மின்னஞ்சல்கள் அரட்டைகளில் நண்பர்கள் பலர் கிட்டினும், என் மனதில் அமர்ந்தவர்கள் சிலரே, தாரா, திசோ, வில்லிஜாய்ஸ்(அமெரிக்கா), மஹா, துர்கா, இப்ராகிம், இப்படி பலர் புதிதாக என் நட்பு வளையத்தில் நுழைந்தாலும், அவர்களுள் என்றும் முதலிடத்தில் இருந்தவள் மாது மட்டுமே. சென்றன ஆறுமாதங்கள், அடுத்த மே மாதமும் வந்தது. சென்றேன் தமிழகத்திற்கு மீண்டும், இந்த முறை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன், ஆனாலும் அந்த முறை ஏனோ மாதுவை நேரில் சந்திக்கவேண்டும் போல் இருந்தது. அவளை சந்திக்க வீட்டிலிருந்து கிளம்பி பாண்டிச்சேரி சென்றடைந்தேன். அது ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதின் துவக்கம், 10.30 மணி இருக்கலாம், நேராக அவள் விடுதிக்குச்சென்றேன், சிறிதே சிரமப்பட்டாலும் தொலைபேசியில் அழைத்து அவளின் இருப்பை சரி பார்த்துக்கொண்டு நேரே சென்றேன், மாடியில் அவள் ஜாகை இருந்ததால் கீழே இருந்து அழைப்பு விடுத்தனர், ஒரு குட்டிதேவதை மிதந்து வருவதுபோல் இறங்கி ஓடி வந்தாள் மாது. இரவு உடையில் இருந்தவள், என்னைக்கண்டதும் ஒன்றும் புரியாமல் உடனே வந்த வழியே மேலே ஏறி ஓடினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை சற்று நேரம், ஏற்கனவே தொலைபேசியிலும் மின்னரட்டையிலும் மணிக்கணக்கில் அவளிடம் பேசி இருந்தாலும் முதன்முறை நேரில் பார்த்தபோது சிறிது பதட்டம் இருந்தது, ஒரு பெண்ணை முதன்முறை வெளியில் சந்திக்கின்றேன் என் வாழ்நாளிலேயே. பதட்டத்துடன் சில நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு அவள் வரவில்லை என்றால் வீடு திரும்பிவிடலாம் என்று எண்ணி ஒரு 5 நிமிடம் காத்திருந்தேன்.

உடை மாற்றிக்கொண்டு, அழகிய வான்நீல சுடிதாரில் ஒரு வானிலிருந்து வந்த தேவதை போலவே இறங்கி வந்தாள் மாது. இறங்கி வந்தவள், ஈஸ்வர்? போலாமா? என்று கேட்க, என்னவோ ரொம்ப வருசம் ஒன்னா படிச்சி ஒரே வீட்டில் ஓடிப்பிடிச்சி விளையாடியமாதிரி சாதாரணமா அவளோட கைல இருந்த பையை வாங்கிக்கிட்டு, நான்வாங்கி வந்திருந்த பழங்களைக்கொடுத்தேன், அதற்கு , அதெல்லாம் போற வழில கொடுன்னு சொல்லிட்டு நடந்தாள். பின் சென்றேன்,என்னவோ ரொம்ப பழகிய ஒரு பெண்ணுடன் ( என்னதான் நேரில் பார்த்ததே இல்லை என்றாலும்) செல்லும் ஒரு உணர்வு. ஒரு ஆட்டோ பிடித்து ஹோட்டல் பரமகுரு என்று நினைக்கின்றேன், ஆனந்த் திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ளது, அங்கே சென்று முதலில் மதிய உணவு உண்டு பின் வேறு எங்கேனும் செல்லலாம் என்று அவள் சொல்ல, பாண்டிச்சேரி அதிகம் அறியாத நான் அவளுடனே சென்றேன். "என்ன சாப்பிடலாம் ஈஸ்?" , "நீயே சொல்லு மாது, எனக்குஎதுவாயிருந்தாலும் பரவாயில்ல, சைவமாக இருந்தால் நல்லது", இரண்டு முழு உணவிற்கும் இரண்டு தயிர் சாதத்திற்கும் சொல்லிவிட்டு பேசத்தொடங்கினோம். உணவும் வந்தது, சாப்பிட்டு முடித்து, வேறு எங்கு செல்லலாம் என நான் கேட்க, நுணாகுப்பம் செல்லலாம் என்று அவர் கூற, சரி என்றபடி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு நகரப்பேருந்தைப்பிடித்து நுணாகுப்பம் படகுக்குழாமிற்குச்சென்றோம், அங்கிருந்த ஒரு பூங்காவில் புல்வெளியில் அமர்ந்து பேசத்தொடங்கினோம்.

"தனம் மறுபடியும் பேசினாங்களா ஈஸ்?" என்றென்னை அவள் கேட்க, இல்லை என்ற பதில் கேட்டு அவள் முகமும் வாடியது, சிறிது நேரம் ஏதும் பேசவில்லை, நிறைய ஆறுதல் சொன்னாள், பின்னர் மாலை ஒரு 4.30மணிக்கு மீண்டும் கிளம்பி பாண்டிக்கு வந்து அவளை அவளின் விடுதியில் விட்டுவிட்டு பேருந்து பிடித்து என் வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் கிளம்பி தலைநகர் வந்து சேர்ந்தேன்...மனதில் ஒரு புத்துணர்ச்சி, அந்த வெற்றிடத்தினை சிறிது நிரப்பியே இருந்தாள் மாது. வழக்கம் போல் தொலைபேசியிலும் மின்னரட்டையிலும் எங்கள் நட்பு தொடர, அவளின் ஒன்றுவிட்ட சகோதரியையும் அரட்டையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். திடீரென்று ஒரு நாள் கேட்டேன் எங்கள் அரட்டையில் அவளிடம் , "மாது, நீ யாரையாச்சும் காதலிச்சிருக்கியா?" "காதலிச்சிருக்கேன் ஈஸ்வர்", அவளின் பதில் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, "யார் அது மாது? என் கிட்ட சொல்லலாமா? "
தொடர்வேன்....
type="text/javascript">&cmt=3&postid=113459024027973988&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 12, 2005

காலத்தை வென்றவன் நீ...


இனிய இணைய இதயங்களுக்கு வணக்கம் வாழிய நலம்,
இன்று சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் புகழ்ந்துபாராட்டப்படும் ஒரு மனிதனுக்கு பிறந்தநாள், மண்ணில் உதித்தநாள், எவ்வளவோ பேதங்கள் வேறுபாடுகள் கூறப்படலாம், அவர் கன்னடர், மகாராட்டிரர் இதுபோல, ஆயினும் அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர். அதுவே இன்றும் என்னை அவரின் ரசிகனாக வைத்து ஒரு பதிவு போடும் அளவிற்கு கொண்டுவந்திருக்கின்றது.

ஒரு 12 வருடங்களுக்கு முன் என் எண்ணக்குதிரையை ஓட்டுகின்றேன், 1993ஆம் வருடம், நான் மூன்றாம் ஆண்டு இயந்திரப்பொறியியல் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்துவந்த சமயம், டிசம்பர் 12, தலைவரின் பிறந்தநாள் வந்தது, என் வகுப்புத்தோழர்கள் அனைவருக்கும், மற்றும் என் வகுப்பு ஆசிரியருக்கும், எங்கள் கல்லூரி கேண்டீனில் தேனீர் மற்றும் கேக் வாங்கிக்கொடுத்தது நினைவில் இன்றும் நிற்கின்றது, என் அப்போதைய கணினி ஆசிரியரான திரு.ஜவஹர் என்னிடம் கேட்டார், இந்த வயசுலயும் எப்படிப்பா சினிமாக்காரங்களுக்கு விசிரியா இருக்கீங்க? அப்படினு, நான் சொன்னேன் இன்னும் 50 வருசம் போய் கேட்டாலும் நான் விசிரியாத்தான் சார் இருப்பேன் அப்படின்னு... :) என் குரூப் தோழர்கள் இன்றும் ரஜினிப்படம் வந்தால் அமெரிக்காவில் இருந்தாலும் 500மைல்தூரத்தில் படம் போட்டிருந்தாலும், கார் போட்டுக்கிட்டு போயாச்சும் பாலாபிசேகம் எல்லாம் தலைவர் கட்டவுட்டுக்கு செய்துட்டு படம் பார்த்து விசில் அடிச்சிட்டு வந்துதான் மறுவேளை பார்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்களேன் எப்படி எங்கள் தலைவர் பக்தி அப்படினு?

இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு, என்னுடன் முதல் வருடம் ஜெயச்சந்திரன் என்று ஒரு தோழன் படித்தான், அவனுக்கு கல்லூரிக்கு பணம் கட்ட சிறிது பண முடை வந்ததால் அவன் தந்தையுடன் சென்று ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து முறையிட, ஒரு முழு செமஸ்டர் பீஸ் மற்றும் உணவுக்கட்டணத்தையும் உடனடியா கொடுத்தனுப்பின அந்த வள்ளலுக்கு ஒரு பதிவு என்ன? ஓராயிரம் பதிவு போட்டாலும் தகும்..
என்றும் ரஜினி ரசிகனாய்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=4&postid=113439308688832674&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, December 10, 2005

ஃபீனிக்ஸ்



மனம் முழுதும் ரணமாய்
மறுமுறை அந்த வார்த்தைகளை
நினைவுகூர்கின்றேன்....
"மறந்துவிடு என்னை"
"மரித்துவிடு நீ" என்று சொல்லியிருந்தால்கூட
மயங்கி இருக்கமாட்டேன்.

மனது ஒன்றும் மாயக்கண்ணாடி அல்ல
நினைத்தால் நினைத்த நேரம் மாற்றி
முகம் பார்க்க,
மரித்த என்னை உயிர்ப்பித்தாய்
ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய்
உயிர்த்தெழுந்தேன்,
இன்றுதான் புரிந்தது,
உண்மையில் நான் ஒரு
ஃபீனிக்ஸ் பறவைதான் என்று,
என்றும் தொடரும் என் பயணம்
உனை நோக்கி, மரிப்பினும்
மறுபடி உயிர்த்தெழுந்து பறப்பேன்
உன்னைத்தேடி, உன் அருகில்.
என் சாம்பலிலும் இருக்கும் உன் சலனம்,
மீண்டும் என்னை எரிப்பாயா?
உயிர்ப்பேன் மீண்டும் உன் நினைவுகளால்....

ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=3&postid=113424210148806391&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அகர வரிசையில் என் காதல்



உண்மையாய் உனை நினைத்து
ஒரு துளி கண்ணீர் சிந்துவேன்
என் உயிர் பிரியும் முன்னால்.....

அன்பே என உனை அழைக்க
ஆசைதான் என் நெஞ்சில்,ஆயினும்
இல்லையே இந்த நெஞ்சில் இடம்,
ஈன்றெடுத்த தாய் தந்தைமுன்
உன் நினைவை வெளிப்படுத்த
ஊக்கத்தைக்கொடு எனக்கு.
என்றேனும் ஓர்நாள் உனை
ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பேன்
ஐம்புலன்கள் என்னில் அடங்குமுன்
ஒரு நாளில் கூறிமுடிக்கமுடியவில்லை
ஓராண்டும் எனக்குப் போதவில்லை
ஔவை கொடுத்த பாடல்களில் ஒன்று
எஃகுபோல் என் நெஞ்சில் நிற்க
ஜோதிடம் கற்கிறேன் நான்,
திறமை, இருப்பினும் இல்லாதுபோயினும்
மோகத்தீயை அனைத்து ஞானப்பால் குடித்திடவே
இளவேணிற்காலத்தில் இந்திரனின் தவத்தோடு
உனை நினைத்து பாடிடவே
உருகுகின்றேன் உனை மறவேன்....

என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=113424158316047403&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, December 09, 2005

காதல் வலை - பகுதி 7



கோவில், என்ன ஒரு புனிதமான இடம்? அந்த தூய்மையான இதயங்கள் சந்தித்த அந்த சந்திப்பொழுது இன்னும் என் சிந்தையில் பசுமையாய் இருக்கின்றது. அவள் கூறிய அந்த வார்த்தைகளும் தான், இன்னுமே என் காதுகளில்....தூதுதான் பேச ஆரம்பித்தது,
"எவ்ளோ நேரம் காத்திருக்கறது? 45 நிமிஷம் ஆச்சு, இப்போதிரும்பப்போறோம்"
அப்பொழுதுதான் என் பெரியம்மாவின் பத்தாம்நாள் காரியத்தில் கலந்துகொண்டு சற்று முன்னரே கிளம்பி ஊருக்கு வந்து கோவிலுக்கும் வந்த விசயத்தைஅவளிடம் சொன்னேன்.வருத்தம் கூறியவள் கடைசியாகப்பேசினாள்.

"ஈஸ்வர், என்ன இது சின்னப்புள்ள மாதிரி? இதுதான் ஒத்துவராதுன்னு சொல்லறேன் இல்ல? நீங்க இவ்வளவு வளர்ந்திருக்கீங்க, இந்த விசயம் ஒரு calf love (கன்றுக்காதல்) என்று உங்களுக்குப்புரியல? சின்னவயசுல எல்லோருக்கும் ஒரு கவர்ச்சி வர்றது சகஜம் தான், ஆனா அங்கேயே தத்தி நின்னுடக்கூடாது, நீங்க இன்னும் மேல வரனும், உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா, கண்டிப்பா உங்க கல்யாணத்திற்கு நான் வருவேன்"

மனம் சுக்குநூறாயொடிந்தது. அவளுக்காக வாங்கி வந்திருந்த ஒரு கேம்லின் பேனா, ஒரு முருகர் படம், என் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், போன்றவற்றைக்கொடுத்தேன், அவள் அதில் பேனாவை மட்டுமே எடுத்துக்கொண்டாள், முருகன் படத்தினை அவளின் தோழி எடுத்துக்கொள்ள, இறுதிவரை என் விரல் நகம்கூட படாமல் நாகரீகமாய் பேசியபின் பிரியாவிடை பெற்று அவளை அனுப்பினேன். நண்பர்கள் அழுது நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? எனக்காக அன்று என் நண்பர்கள் அழுதார்கள். கண்ணீர் கரைய, ஒரு பாக்கெட் கோல்ட் பிளேக் கிங்ஸ் தீர்ந்தது. ஆனாலும் அதிலும் ஒரு பெருமை என்னவென்றால் போவதற்கு முன் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கினாள், "நான் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நீங்க தண்ணியடிக்கக்கூடாது, இது என் மேல சத்தியம்"

மனம் சின்னாபின்னமாய் சிதற, சோகத்தை நெஞ்சில் சுமந்து வீட்டிற்கு வந்து அம்மாவின் கையினால் கடைசியாக உணவு உண்டபின் தலைநகருக்கு கிளம்பினேன்,கனத்த இதயத்தோடும் , கை நிறைந்த பைகளோடும் மனதோடு அவளின் நினைவுகள் மட்டுமாக..... ஸ்ரீனி என்னைத்தொலைபேசியில் அழைத்துப்பேசினான், இருந்தாலும் மனம் காயப்பட்டது பட்டதுதானே? அந்த நேரத்தில் என் மனதிற்கு ஆறுதலாகவும் களிம்பாகவும் இருந்தவள்தான் மாது.....அவள் கூறிய சில வார்த்தைகள் தான் என்னை மீண்டும் எழுப்பி நிறுத்தி என் வாழ்விற்கே ஒரு அர்த்தத்தினை அளிப்பதாக இருந்தன.....அவள் கூறியவை......
தொடர்வேன்....
type="text/javascript">&cmt=1&postid=113416706775848488&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, December 08, 2005

காதல் வலை - பகுதி 6




தனம் என்னிடம் அவள் கேட்ட முதல் வார்த்தை...."என்னை மறந்துடுங்க ஈஷ்வர், இன்னுமா என்னை நெனச்சுகிட்டு இருக்கீங்க? இது ஒத்து வராதுங்க...."

"எங்க வீட்டுல ஒரு முறை எங்க தம்பி ஒரு முஸ்லிம் பொண்ணை சைட் அடிச்சுட்டான் அப்படினு இன்னைக்கு வரைக்கும் அவன் கிட்ட அவங்க பேசரது இல்ல, மேலும் அவன் அப்படி பன்னப்பொ வீட்டோட எல்லோரும் மருந்து குடிச்சுட்டு செத்துப்போகலாம்மா அப்படினு எங்க அப்பா மருந்து வாங்கி வந்துட்டார்,

அதனால எங்க அப்பா அம்மாவுக்கு எதிரா நான் எதுவும் செய்ய விரும்பல. ஜான்சன் அப்புறம் முருகன் கூட என்கிட்ட பேசினாங்க நீங்க அங்க இருந்தப்ப....ஆனா என் பதில் இதுதான் என்னால எங்க வீட்டை விட்டு எல்லாம் வர முடியது"

" அப்பொ நீ என்னை லவ்வே பன்னலயா தனம்? "
" இந்த கல்யாணம் நடக்காது, என்னால வரமுடியாது, நான் லவ் பண்ணலைன்னு எல்லாம் சொல்லலயெ?

எங்க சித்தி கூட இதை ரொம்ப எதிர்க்கறாங்க, எங்க வீட்டுல யாருக்கும் இது பிடிக்காது,அப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம்...இதோ 28 வருஷம் எங்க அப்பா அம்மா பேச்சைக்கேட்டு இருந்திட்டேன், இனிமெலும் அப்படியே இருந்துட்டு போறேன்"

"ஏன் அப்படியெ இருக்கனும்?"

"ஏனக்கு அதுதான் பிடிச்சு இருக்கு, என்னை விட்டுடுங்க"
மீண்டும் தலைநகர் திரும்பினேன், பழையவாழ்க்கையாகிப்போயிருந்தது தலைநகர் வாழ்க்கை. பழகித்தான் போய் இருந்தது. இந்தி, ஆங்கிலம், சில நேரங்களில் தமிழ். ஆய்வுப்பணியும் செவ்வனே சென்றவண்ணமிருந்தது.வாழ்வில் ஒரே லட்சியம் முனைவர் பட்டத்தினை அடைவது.தோழன் ஒருவன் என் இளங்கலைக்கல்வி சமயத்தில் கொடுத்த ஆட்டோகிராப் நினைவில் நின்றது.
"வேலை ஒன்று தேடிக்கொண்டு
சேலை ஒன்று தேடும்போது
ஓலை ஒன்று அனுப்பு நண்பா!!!" என்ன ஆத்மார்த்தமான வரிகள்?

அன்று மறுநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, எங்கள் பாட்டி ஊரிலிருந்து, என்னுடய
பெரியம்மா ரொம்ப நாளாக புற்றுநோயால் அவதியுற்றவாறு இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்று :( உண்மையிலேயே மனம் குமுறி அழுதேன், புறக்கணிக்கப்பட்ட ஆனாலும் மனதளவில் வெற்றிபெற்ற என் காதலுக்கும் சேர்த்து.....பெரியம்மாவின் கடைசி காரியங்களுக்கு ஊருக்கு வந்தேன், எல்லாம் முடிந்தது, கடைசியா பால் ஊற்றி வீடு வந்து சேர்ந்தோம்.

எதிர்பாரா வண்ணம், அவளிடமிருந்து ஒரு அழைப்பு, அன்று மாலை என்னைச்சந்திக்க வேண்டும் என்று. பத்தாம் நாள் காரியங்கள் அன்றுதான் முடியும், அன்று இரவு எனக்கு ரயில் வண்டி தலைநகருக்கு. எனக்கு ஒன்றும் புரியவில்லை, மாலையில் தான் வேலை அதிகம் இருந்தது, ஆயினும் எப்படியோ சரிக்கட்டி விட்டு , 5 மணிக்கு கோவிலுக்கு வரச்சொன்னவளை, 5.45 மணிக்குத்தான் சந்திக்க முடிந்தது...என் தோழர்களுடன், மெல்லிய இருள் கவிழும் ஒரு மாலை நேரம், அரையிருளிள் ஆள் பாதி மட்டுமே தெரியும், முகம் தெரியா வெளிச்சம், என் ஹீரோ ஹோண்டா பைக்கின் முன் விளக்கு வெளிச்சத்தில் தேவதை ஒன்று துணையாக ஒரு குட்டி தூதுவளுடன் கோவிலில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தது. அதன் முன் வண்டியை நிறுத்தினேன்...
தொடரும்..
type="text/javascript">&cmt=4&postid=113410877643084284&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, December 07, 2005

காதல் வலை - பகுதி 5



“பெரியப்பா எல்லாம் வீட்டில் இருக்காங்க, அதனால அவங்க இது விஷயமா பேச தயங்கறாங்க, உங்க டெல்லி நம்பர் தாங்க, நான் அங்க போன் செய்து பேசுறேன், என்னோட நம்பர் வேணும்னாலும் எழுதிக்கோங்க, 04243 234561”

நான் முழுக்க மீண்டும் வண்ணக் கனவுகளையும் சுமந்துக்கிட்டு, என்னைப்போலவே சந்தோஷமாகவே புறப்பட்டது அந்த மின்சார ரயில் வண்டி.

டெல்லி வந்து சேர்ந்தவனுக்கு அங்கு நல்ல வரவேற்பு, ஹிந்தி தெரியாது, தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே தெரியும். என்ன செய்ய போகின்றோமோ என்று பயத்தில் AIIMS ஹாஸ்டலுக்குள் நுழைந்தேன். தெலுகு நண்பர்கள் எப்பொழுதும் போல, இங்கும் அதிகமே, அவர்களுள் சிலருக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்திருக்க, அதை வைத்து சமாளித்தேன். தமிழ் பேசவே மீண்டும் வலைக்குள் நுழைந்த என்னை கட்டிப்போட்டவள்தான் என் பிரியமான மாது. மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தேன் மாதுவிடம் இருந்த வந்த அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும் ஒரு சிறு சலனத்தை தோற்றுவித்தன. அவள் என்னிடம் கேட்டது...
(கொசுவர்த்தி இருந்தால் கொஞ்சம் சுத்திக்கோங்க, பிளாஸ்பேக் ;) )
மாது என் வாழ்வில் நுழைந்த இன்னொரு மின்னல், மிக விரைவில் என்னோடே கலந்த ஒரு தென்றல்.

"ஹாய் ஈஷ்வர், இன்னைக்கு உங்க ஆள் கிட்ட பேசினேன்...அவங்க குரல் ரொம்ப நல்லா இருந்தது, என் கிட்ட பேச ரொம்ப பயப்பட்டாங்க, அவங்க அம்மா கூட இருந்ததால என்னோட நம்பர் வாங்கி அப்புரம் ஈவினிங் என்கிட்ட பேசினாங்க. "என்னை மறந்திடச்சொல்லுங்க அவர, எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க இதுக்கு, எங்க சித்தி கிட்ட கூட இது பத்தி சொல்லி இருக்கேன், அவங்க கேட்டாங்க, "என்னடி நீ அந்த பையன் கூட ஓடிப்போறயா?" அப்படினு, நான் சொன்னேன், "அவர் அந்த மாதிரி இழுத்துக்கிட்டு ஓடற பையன் எல்லாம் இல்லை சித்தி" அப்படினு. அதுக்கு அவங்க சொல்லறாங்க "என்னோட பொண்ணு யார் கூடனா ஓடிப்போனாக்கூட பரவாயில்ல, ஆனா நீ எங்கனாச்சும் ஓடிப்போனா நம்ம குடும்ப கௌரவம் என்னாகும்?"னு . என்ன சொல்லறது நான்? என்னை மறந்திடச்சொல்லுங்க அவரை " இப்படியே திரும்பத்திரும்ப சொல்றாங்கடா.....என்ன பண்ண?"

நான் என்ன சொல்ல அவகிட்ட? ஒன்னும் புரியல, அதே நேரம் , அவ கிட்ட பேசனும், அதனால , மாதுவிடம் சொல்லி, தனம் கிட்ட பேசறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னேன், அந்த நாளும் வந்தது, பிப்-17, வாலன்டைன்ஸ் டே முடிந்தஇரண்டாம் நாள், அது ஒரு 3 மணி நேர உரையாடல். மதிய உணவு சாப்பிடல, அதுக்கு முன்னாடி நாள் ராத்திரி மாது ஃபோன் பண்ணி சொல்லி இருந்தா...

"நாளைக்கு உனக்கு ஃபோன் பன்றேன், அவங்க அப்பா அம்மா , அவங்களுக்கு மாப்பிள்ளை பார்க்க போராங்களாம், அந்த டைம்ல நீ அவங்க கிட்ட பேசு" அப்படினு.


மதியம் 12 மணிக்கு மாதுவிடம் இருந்து ஃபோன் வந்தது, :அவங்க மதியம் 3 மணி

வரைக்கும் வெய்ட் பண்ராங்களாம், உன்னை ஃபோன் பண்ண சொன்னாங்க"

ஆவலுடன் ஒடிப்போய் பேசினேன், வாழ்வில் முதல் முறை, அவளிடம் என் மனதில் இருந்த

எல்லாவற்றையும் கொட்டி அந்த 3 மணி நேரத்திற்கு பிறகு, கடைசியாக அவளிடம் கேட்டேன்.
"தனம், நான் உன் கிட்ட ஒண்ணு சொல்லவா?"

"சொல்லுங்க"

"ஐ லவ் யூ"

"ஹ்ம்ம் சரி, அப்புறம்?"


"ஹேய் நான் என்ன கதையா சொல்லரேன்?ஐ லவ் யூ சொல்றேன், நீ என்ன சொல்ற?"

"எனக்கு பயமா இருக்கு, எங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க ஈஷ்வர், இப்ப கூட

அம்மா அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கத்தான் போயி இருக்காங்க, நான் எதுவும் செய்ய முடியாது, என்னை மறந்துடுங்க"

"நான் மே மாசம் வரப்ப இது பத்தி பேசுவோம், பேசி முடிவு எடுப்போம்"

"சரி , அப்பவும் என்னோட பதில் இதுவாதான் இருக்கும்"

"அதை அப்பொ சொல்லு"

"சரி"
மன நிறைவுடன் வந்து மாதுவுக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். எங்கள் நட்பும் நன்றாகத்தொடர்ந்தது. மே மாதமும் வந்தது....வீட்டிற்குப் போனேன்....அன்று மாலை அவளை சந்திக்க என்னுடய நண்பன் ஜான்சன் வீட்டிற்கு வரச்சொல்லி இருந்தேன், சரியாக 3.30 மணிக்கு அவள் ஜான்சனின் கடைக்கு வந்தாள்...என்னிடம் அவள் கேட்ட முதல் வார்தை.....

தொடர்வேன்...
type="text/javascript">&cmt=0&postid=113402542974219611&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

உலக அதிசயமா? இல்லை நரி மாடுகளைப்பிரித்த கதையா?

இந்த இணைய தள வாக்கெடுப்பு என்று ஒன்று சொல்கின்றார்கள், உலக அதிசயங்களை மாற்றம் செய்யவேண்டுமாம் ( சிலர் ஐஸ்வர்யா ராயை கூட எட்டாவது அதிசயமாக ரெகமண்ட் செய்கிறார்கள் அதுவேறு ;) ) ஆனால், இந்த இந்தியர்கள் ஏன் இப்படி பிரிந்திருந்து அடித்துக்கொண்டு இருக்கும் தாஜ்மகாலைக்கூட விட்டுவிடுவார்கள் என்றே தோன்றுகின்றது எனக்கு. எதேச்சையாக இன்று தினமலரின் கடைசிசெய்திகளை எப்பொழுதும் போல் பார்த்தவன் மனம் கசந்தேன், 22ஆம் இடத்தில் இருக்கின்றதாம் மதுரை கோவில். இந்த மாதம் 24ஆம் தேதிக்குள் 20க்குள் வந்துவிட்டால் அடுத்த ஆண்டு முழுமையும் நடக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு உலகின் புது 7 அதிசயங்களுள் ஒன்றாக இடம்பிடிப்பார்களாம், என்ன ஒரு மடமை? இதுதான் பரங்கியரின் பிரித்தாளும் கொள்கை என்பதை படித்தவர்களும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேதனை. அவர்களின் நோக்கம், தாஜ்மகாலை உலக அதிசயத்திலிருந்து நீக்குவது, அதற்காக இந்தியாவில் இருக்கும் குட்டிக்குட்டி நினைவிடங்களையும், ஆலயங்களையும் பட்டியலில் சேர்த்து வாக்குகளைப்பிரிக்கின்றனர். அதற்கு தமிழர்களும் பலியானதே வேதனைக்குறிய விஷயம். நம் அனைவரின் வாக்குகளையும் தாஜ்மகாலுக்கே மீண்டும் இட்டிருந்தால் நிச்சயம் அது உலக அதிசயத்தில் வந்திருக்குமே? இன்று அதுவே ஒரு கேள்விக்குறியாகிப்போனதே வேதனை. எங்கள் ஊரான திருவண்ணாமலைக்கோவில் கூட பட்டியலில் இருக்க, ஐஐடி சென்னையிலிருந்து ஒரு மாணவன் எங்கள் மாவட்டக்கோவிலை உலக அதிசயமாக்குவோம் என மடல் அனுப்பி இருந்தான்.
அவனைத்திட்டிவிட்டு தாஜ்மகாலுக்கே என் வாக்கினை அளித்தேன், ஏன் இப்படி நாட்டிற்குள்ளேயே பாகுபாடு? அவர்களும் நம் சகோதர சகோதரியர் தானே? ஏற்கனவே இருக்கும் அந்த பெருமையை உலகறியுமே? மதுரைக்கோவில் பழமை வாய்ந்ததல்ல என்பதல்ல என் வாதம், ஆனால் தாஜ்மகால் உலகறிந்ததாயிற்றே? அதற்கு ஓட்டுகள் விழுமா அல்லது புதிதாக நுழையும் மதுரைக்கா? சிறிதேனும் சிந்திக்க வேண்டாமா? எந்த ஒரு செயலைச்செய்யும்முன்னும் ஒரு நிமிடம் சிந்தியுங்களேன்...நம் சிந்தனைத்திறன் இன்னும் அந்த அளவிற்கு சீர்குலையவில்லை என்பதே என் அபிப்ராயம்...என்ன சொல்கின்றீர்கள்?
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=20&postid=113402291704399365&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, December 06, 2005

காதல் வலை - பகுதி 4



ஆமாம், இணையத்தினால் கிடைத்த இன்ப அதிர்ச்சி என்றே அதனை சொல்லலாம். அதுவரையில் ஆராய்ச்சியில் ஆர்வம் இல்லாத எனக்கு, அன்று ஏதோ ஒரு இணையத்தளத்தில் தேடியதில் வேறொரு இணையம் கிடைத்தது அது, AIIMS, ஆல் இண்டியன் இன்ஸ்டிடுட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ், கடைசியில் அந்த ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பத்தினை இறக்கம் செய்து என்னுடைய கல்லூரியிலேயே பிரின்டவுட் எடுத்து அப்ளை செய்தேன்.

நேர்க்காணல் அழைப்பு வந்த பின்புதான் அந்த தூரம் கண்ணிற்கு பட்டது, அவளை பிரிந்து, அம்மா, அப்பாவை, அக்கா, தங்கையை, அண்ணா, தம்பியை பிரிந்து மிகவும் ஒரு கடினமான விஷயம் கூட, சென்னை எங்கே, புதுடெல்லி எங்கே? இருந்தும், வாழ்கையில முன்னேறனும்னா சில சமயம் சில காலத்துக்கு வீட்டைவிட்டு விலகி இருப்பதில் தவறு இல்லை, அப்பாகிட்ட சொல்லி டிரெயின் டிக்கெட் புக் பண்ணசொன்னேன், அம்மா அழுதார்கள், அப்பாவும் சிறிது தயக்கம் காட்டினார். நான் என்ன காட்டிற்கா போகிறேன்? இதோ இருக்கிற டெல்லி, பிளைட் பிடிச்சா இரண்டரை மணிநேரத்தில் இருக்கிறது தானே?

டெல்லி என்னை அன்போடு வரவேற்றது, அந்த வெயிலிலும் எனக்கு குளிரியது. புது இடம், முதன் முதலில் தனியாக வருகின்றேன், என்ன எப்படி? ஒன்றும் பரியவில்லை, மனசு முழுக்க கனவுகளோடு வந்து இருக்கேன், எப்படியும் இங்கே இருந்து போகறப்ப Ph.D பட்டம் வாங்கிட்டு தான் போகணும். மனசு முழுக்க கனவுகளோடு வந்தவனுக்கு இங்கும் இன்ப அதிர்ச்சி, நேர்முக தேர்வு அட்டெண்ட் பண்ணிய 150 பேர்ல 4 ஸீட், 2 பேர் தமிழ்நாட்டுக்காரங்க, அதுல நானும் ஒருவன். அட்மிஷன் கார்ட் வாங்கிட்டு, அம்மாவுக்கு போன் பண்ண, அவங்க என்னடா கிடைக்கலைதானே? அப்படின்னு சந்தோஷமா கேட்கிறாங்க, கிடைச்ச செய்தியை சோகமா சொல்லிட்டு, டிரெயின் பிடிச்சு திரும்ப தமிழ்நாடு திரும்பினேன்.

வேலையை அந்தக் கல்லூரியிலிருந்து ரிஸைன் பண்ணிட்டு, பிஎச்டி சேர்ந்தேன். வந்தவனுக்கு இங்க ஒரு புது அனுபவம், 24 மணிநேர இன்டர்நெட், எல்லா பெண்ணு பையன்கள் சரி சமமாய் பழக... மீண்டும் அந்த இணைய தளத்திற்குள் நுழைந்தேன், அங்குதான் அந்த மாய வலை என்னை கட்டிப்போட காத்திருந்தது தெரியாமலே... அவளை சந்திக்கும்முன்புவரை, வாழ்வு அதன் வழியில் போய்க்கொண்டிருந்தது... அவளை சந்தித்த அந்த முதல் நாள் தான் என்னுடைய முதல் பகுதி நான் எழுதியது. அடுத்து இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சி மறந்துவிட்டேன். அது ஒரு முக்கியமான போன் கால் என்றே சொல்லலாம், நான் ஊருக்கு கிளம்பிய அன்று இரவு 8.30க்கு வந்த அந்த தொலைபேசி மணி அழைப்பு என்னுடைய 12 வருட விரதத்துக்கு ஒரு வரமாய் அழைத்தது.

இரவு 8.30 மணி, ரெயிலுக்கு கிளம்புறதுக்கு பெட்டி, படுக்கைகளை தயார் செய்து கொண்டிருந்தவனை அழைத்தது அந்த தொலைபேசி அழைப்பு, யார் இந்த நேரத்தில? யாராவது பசங்களா இருக்கும். ஆல் த பெஸ்ட் அண்ட் ஹாப்பி ஜேர்னி சொல்ல போன் பண்ணுவாங்க என்று எடுத்த எனக்கு அது ஒரு புதிய குரல்.

“ஹுல்லோ, நான் ஸ்ரீனி பேசுறேன், ஈஸ்வர் இருக்கிறாரா?”

“நான் ஈஸ்வர்தான் பேசுறேன், நீ யாரு?”

“நான் தனத்தோட பிரதர் பேசுறேன்”

சில்லீர் என்று என்னுள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்வு.

“எந்த பிரதர்?”

“அவங்களோட கசின் நானு, ஈரோடுல இருந்து பேசுறேன்”

“என்ன விஷயம்?”

“இல்லை, அக்கா எப்பவும் உங்களை பத்தி என்கிட்ட சொல்லுவாங்க, உங்க போன் நம்பர் கூட அவங்க தான் கொடுத்தாங்க”

“நீங்க சொல்லுங்க?”

“நீங்க அவங்களை புரோபோஸ் பண்ணீங்க, அவங்கதான் பெரியப்பாவுக்கு பயந்துக்கிட்டு வேண்டாம்னு சொல்லிட்டாங்க, எல்லாம் சொல்லுவாங்க”

மனம் முழுக்க ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் பறந்தது போன்ற ஒரு உணர்வு.

“இப்ப என்ன சொல்றாங்க? என்னை லவ் பண்ணுறாங்களா?”

“அவங்க கிட்ட கேட்கலையே? இன்னிக்கு நீங்க ஊருக்கு போறீங்கன்னு சொன்னாங்க அதான் போன் பண்ணினேன்.”

மனம் முழுக்க மீண்டும் எதிர்பார்ப்புக்களுடன் கேட்டேன்.

“அவங்க கிட்ட கேட்டு சொல்றியா?”

“சரி, அவங்கள கேட்டுட்டு உங்களுக்கு ஒரு மணிநேரத்தில் போன் பண்ணுறேன்.”

“ஓகெ போன் பண்ணு, ஆனா இன்னும் ஒரு மணிநேரத்தில் கரெக்டா பண்ணிடுப்பா, நான் நைட் டிரெயினுக்கு ஊருக்குப்போறேன்”

சொன்னமாதிரியே ஒரு மணிநேரத்தில் அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது,
தொடர்வேன்.....
type="text/javascript">&cmt=6&postid=113389803503818852&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, December 05, 2005

காதல் வலை - பகுதி 3



அவளின் அந்த ஆட்டோகிராப் என் மனதிலும் அப்படியே பதிந்து யாரும் அறியாமல்
இன்றும் என்னுடைய பர்ஸனல் பெட்டியில் இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் +2 பரிட்சையில் எங்க ஸ்கூல்லயே பர்ஸ்ட் மார்க் வாங்கி M.B.B.S போறதுக்கு கூட அவளே காரணம்னு சொல்லலாம், பள்ளியின் கடைசி நாட்களில் அவள் வந்து என்னிடம் சொன்னாள்,

“ஈஸ்வர், நீங்க 10த்ல நல்ல மார்க் வாங்கி இருக்கீங்க, உங்களோட +2 மார்க்ஸ் குறைகிறதுக்கு பொண்ணுங்க எல்லாம் சேர்ந்து நாங்க செய்த வேலை இது, நீங்க எனக்கு கெமிஸ்டிரி லேப் பைனல் எக்ஸாமில சால்ட் அனலைஸிஸ் சொல்லி கொடுத்தது என்னிக்கும் உறுத்திக்கிட்டேயிருக்கும். எனக்காக எவ்வளவோ செய்து இருக்கீங்க, நீங்க என்னால ஃபெயில் ஆவறத என்னால ஏத்துக்க முடியாது, என் பின்னால வராதீங்க”

இந்த வார்த்தைகள் என் மனதில் இடியாக இறங்கினாலும், உட்கார்ந்து படிக்க வைத்தது என்னுடைய அம்மா, அப்பா, அண்ணாவின் வார்த்தைகள், படிக்க, எனக்கு கிடைத்தது அருமையான மெடிக்கல் சீட், மருத்துவன் பட்டம், அவள் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்ததால், பின்பு அஞ்சல் வழி கல்வியில் பிஏ, எம்ஏ படித்தவள், ஒரு பள்ளியில் டீச்சராக வேலை பண்ணிக்கொண்டே படித்தாள். நான் M.B.B.S செகண்ட் இயர் இடித்தபோது நடந்த ஒரு சம்பவம், ரொம்பவே என் மனதில் பதிந்துவிட்டது...

வழக்கம் போல அன்றும் எனக்கு நன்றாகவே பொழுது விடிந்தது, ஆனால் ஒரு ஆச்சர்யத்துடன். சூரியன் வந்து என்னை எழுப்புவதற்கு பதில் என்னோட அப்பா வந்து எழுப்பினார்.

“ஈஸ்வர், அம்மா கூட வந்து இருக்காங்க, அங்க கோவில்ல காத்துக்கிட்டிருக்காங்க, வாடா போலாம்”

நான் என்ன சொல்ல முடியும், எதற்காக, அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க, புரியலை எனக்கு, அம்மா கேட்குறாங்க, “என்னடா பண்ணுன நீ? ஏன் இப்பிடி பண்ணின?”

எங்க அப்பா “வீட்டுல இருக்குறவங்களுக்கு லெட்டர் போடு, பெரியப்பாவுக்கு லெட்டர் போடு, அத்தைக்கு லெட்டர் போடு, தாத்தாவுக்கு லெட்டர் போடு, ஏன்ப்பா வேண்டாதவங்களுக்கு லெட்டர் போட்ட? நீ நல்ல விதமாத்தான் லெட்டர் போட்டிருக்க, ஆனால் பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? அந்தப் பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் ஆகணும், ஊர்ல என்ன நினைப்பாங்க?”

அம்மா கடைசியாக எடுத்து போட்டாங்க அந்த வெடிகுண்டை, என்னோட லெட்டர், அந்த ஆட்டோகிராஃப் என்ன சொல்லுது அப்பிடிங்கிறதை பத்தி நான் விளக்கம் கேட்டு எழுதினதை எங்க அப்பாக்கிட்ட அந்த பிரின்ஸிபால் கொடுத்து இருக்கிறார். அதுவரை என்னோட அப்பா அந்த ஸ்கூல்ல ஒரு போர்டு ஆப் சேர்மென் அப்படிங்கிற விஷயம் எனக்குத்தெரியாது.

எங்க அம்மா கடைசியில சொன்னாங்க, “தம்பி, நீ படிச்சு முடிடா, இப்ப நீ உங்க அப்பா கால்ல நிக்கிற, உன்னோட சொந்த கால்ல நில்லு, அப்புறம் இந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு, நாங்க என்ன வேண்டாம்னா சொல்லப்போறோம்?”

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? வந்தேன் என்னுடைய படிப்புலகுடன், அவளை தவிர வேற எதுவும் நினைப்பில் இல்லாமல், படிப்பு மட்டுமே எண்ணமாய், அவளை வெல்வதே லட்சியமாய், படித்து மருத்துவர் பட்டம் வாங்கினேன். பட்ட மேற்படிப்புக்கு அப்ளை பண்ணினேன். கிடைத்தது, படிக்கும் போது பல பெண்கள் என்னுடன் படித்தாலும், என் மனதில் இருந்தது அவள் முகம், மேற்படிப்பும் முடிந்து, ஒரு அருமையான கல்லூரியில் விரிவுரையாளராக பணி, கூடவே, தனியாக மருத்துவராக பயிற்சியும், வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருந்த பொழுது தான் அந்த நிகழ்ச்சி. மீண்டும் என் வாழ்வில் ஒரு திருப்பம்... இணையத்தை பயன்படுத்தியதால் ஒரு இன்ப அதிர்ச்சி...
தொடர்வேன்....:)
type="text/javascript">&cmt=0&postid=113381237567067969&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காதல் மரியாதை

திருமண வாழ்த்து போஸ்டர் ஒன்றில் படித்ததாகக்கூறி குமுதம் வார இதழில் த.மாணிக்கம் என்னும் ஒரு அன்பர் பண்டாரவாடையிலிருந்து எழுதியது :
Lல்லோரது வாழ்விலும் காதல்
Oருமுறையாவது பூத்து, இருவரும்
Vருப்பப்பட்டு திருமணம் செய்து
Eன்பமாய் வாழ்வதே இல்வாழ்க்கை :)
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=1&postid=113381148014342758&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

யாகவா, மெய்யாகவா?

அன்பு நண்பர்களுக்கு
வணக்கம், வாழிய நலம், திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது அதுதான் இந்தப்பதிவு, எத்தனைபேருக்கு இங்கே யாகவா முனிவரை ஞாபகம் இருக்கும் என்று எனக்குத்தெரியவில்லை, ஆனால் அவரும் இன்னொரு சாமியார் சிவசங்கர்பாபாவும் தொலைக்காட்சியில் அடித்துக்கொண்டது ஞாபகம் இருக்கலாம். அவர் கூறிய ஒரு ஸ்டேட்மெண்ட் இன்று உண்மையாகிவருகின்றதே???? யாரேனும் அதை யோசித்தீர்களா?

இந்தப்புகைப்படத்தைப்பாருங்கள், நினைவு வருகின்றதா??

இல்லை இப்போதாவது நினைவு வருகின்றதா?


என்ன? நினைவு இல்லையா? 2005ல் மவுண்ட் ரோடில் படகு விடுவார்கள் என்று சொன்னார், அன்று எல்லோரும் சிரித்தார்கள், என்ன இப்படி தமாஷ் பண்றார்னு, இன்னைக்கு உண்மையிலேயே மவுண்ட் ரோடில் படகு போகுதே? சற்று சிந்தித்துப்பாருங்கள், சில நேரங்களில் சில மனிதர்கள், அன்று வேடிக்கையாகத்தோன்றிய விசயம், இன்று உண்மையில் நடக்கையில், எதுவும் நடக்கும் இந்த மர்மதேசத்தில் என்றல்லவா தோன்றுகிறது? அவருக்கும் ஏதேனும் சக்தி இருந்திருக்கும் என்றே தோன்றுகின்றது...என்ன சொல்கின்றீர்கள்???
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=1&postid=113379262995057034&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கார்த்திகை தீபத்திருநாள் - திருவருணையில் கொடியேற்றம்





தி.மலையில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம்: கொட்டும் மழையில் பக்தர்கள் குவிந்தனர்


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் கொட்டும் மழையில் நடந்தது.
ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி வடிவாய் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். பிரம்மா, விஷ்ணு இவர்கள் "தான்' என்ற அகந்தையை நீக்கி, இறைவன் ஒருவனே உயர்ந்தவன் என்பதை உலகிற்கு உணர்த்தியதோடு, ஆணும், பெண்ணும் சமம், என்பதையும் உலக உயிர்களுக்கு உணர்த்தி உமையாள் பார்வதி தேவிக்கு இடப்பாகம் அளித்த முக்தி திருத்தலம்தான் திருவண்ணாமலையாகும்.

இந்த நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபத்திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், மூலவர் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பின் பெரிய விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஸ்வாமி, அம்பாளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமலை உடனாகிய அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒடல், தாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ரிஷப யாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, 32 பரிவார தேவதைகளுக்கு படையல் இட்டு தீபத்திரு விழாவை சிறப்பாக நடத்தித்தருதல் வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பஞ்ச மூர்த்திகளுக்கு வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6.01 மணிக்கு "அண்ணாமலைக்கு அரோகரா' என பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க குமார் குருக்கள் தீபத்திருவிழா கொடயேற்றத்தை நடத்தி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியின் போது கன மழை பெய்தது. கொட்டும் மழையிலும் கூடியிருந்த பக்தர்கள் குடை பிடித்தப்படி "அண்ணாமலையாருக்கு கோஷம்' எழுப்பி வழிப்பட்டனர்.
கொடியேற்ற விழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கோயிலில் ஸ்வாமிகள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தொடர் மழை இருந்த போது வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள், தியாகராஜ குருக்கள், கார்த்தி குருக்கள், அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர்(பொறுப்பு)சீனிவாச ராகவன், ஆர் .டி.ஓ., அன்பரசு, கோயில் துணை ஆணையர் ஜெயராமன், கோயில் மணியக்கார் சாமிக்கண்ணு, அறங்காவல் குழு உறுப்பினர்கள், நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைர கிரிடமும், உண்ணாமலை அம்மனுக்கு தங்க கவசமும், சார்த்தி விஷேச பூஜைகள் நடந்தது. பின் பஞ்ச மூர்த்திகள் 16 கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வெள்ளி விமானங்களில் அலங்கரிக்கப்பட்டு அதிர்வேட்டு முழங்க பஞ்சமூர்த்திகள் மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்..
இரவு விநாயகர் மூஷிகம் வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் அதிகார நந்தி வாகனத்திலும், உண்ணாமலையம்மன் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன அதிகார நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நன்றி: தினமலர்.காம் (05-12-05)
type="text/javascript">&cmt=0&postid=113377501135117550&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, December 04, 2005

காதல் வலை - பகுதி2



“யேய் மாது, யாரு இதுல நீ?”

“ஓ என்னோட பிக்சர் இன்னும் அனுப்பலையா? நாளைக்கு அனுப்பி வைக்கிறேன்”

“ஹேய் ஈஷ், உன்னோட லவ் பத்தி சொல்லவே இல்லை?”

"ஆமாடா மாது, நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன் அவள பத்தி நாளைக்கு சொல்றேன்.”

“யேய் யாரு அந்த பாக்கியசாலி?”

“அவ என்னோட கிளாஸ்மெட்... +1ம் +2வும் நாங்க இரண்டு பேரும் ஒன்னா படிச்சோம்,

அதுக்கு அப்புறமா நான் மெடிக்கல் வந்துட்டேன், அவ பெயில் ஆனதுக்கு அப்புறமா

அட்டெம்ப்ட் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி, கரெஸ்பாண்டண்ட்ல பிஏ, எம்ஏ பண்ணினா,

அப்புறம் ஒரு தனியார் பள்ளில டீச்சரா ஒர்க் பண்ணினா.”

“ஓ அப்படியா? இப்ப அவ என்ன பண்ணுறா? எப்பிடி இருக்கிறா? அவ கிட்ட நீ புரோபோஸ்

பண்ணினயா?”

“அவள் நல்லா இருக்கிறாள்னுதான் நினைக்கிறேன், அவ வீட்டுல தான் இருக்கிறா, இல்லை

இன்னும் புரோபோஸ் பண்ணலை. சொன்னா எங்க அவ மறுத்துடுவாலோன்னு பயமா இருக்கு,

அதனாலத்தான் இன்னும் சொல்லலை, உனக்கு ஒன்னு தெரியுமா மது? அவள நான் லவ்

பண்ண ஆரம்பிச்சதே ஒரு ஆக்ஸிடெண்ட்”

என்னுடைய நினைவுகள் 12 வருடங்களுக்கு முன்னால் சிறகடித்து பறந்தன.

அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசங்குளம். 12 வகுப்பு கிளாஸ் ரூம், மதியம் மணி 1.45 , உணவு

இடைவேளைக்கு பிறகு, கிளாஸ் லீடர் என்ற முறையில் அட்டெண்டன்ஸ் எடுத்து வருவதற்கு

ஹெட்மாஸ்டர் ரூமிற்கு போவதற்கு வேகமாக ஓடியவனின் எதிரில் வந்தாள் அந்த தேவதை.

எதிர் பார்க்காத சந்திப்பு, படிக்கட்டு இறக்கத்தில் நான், அருகில் இருந்த குழாயில் தண்ணீர்

குடித்துவிட்டு படியேறிய அவள், சில செண்டிமீட்டர் இடைவெளி, கண்கள் சந்தித்த வேளையில்

சிந்திக்கவேயில்லை. தொலைத்தேன என் மனதை, சில நொடிகளுக்கு மட்டுமே அந்த கண்களின்

சந்திப்பு. காலம் முழுக்க வருமா என்ற ஏக்கம் என் கண்ணிலும் அவள் கண்ணிலும் கூட,

அதற்குள் வகுப்புக்குள் இருந்து ஓ வென கூச்சல்...

“மச்சான் பாரல(barell) உருட்டிட்டாண்டா. ஹிஹி “ அவள் பார்ப்பதற்கு கொஞ்சம் பருமனாகவே

இருப்பாள்.

அதற்குப்பின் அவளின் பின்னே சென்ற நாட்கள் பல, அவளுக்காகவே அவள் படித்த லேடீஸ்

டியூஷனில் சேர்ந்து முதல் ஆண் மாணவன் நானாகத்தான் இருக்க முடியும். விடியற்காலையில்

அண்ணணோட ஓசி பைக் எடுத்து கொண்டு போய் ஒரு குழந்தை மேல மோதாம சருக்கி

விழுந்து, எல்லாத்தை விட உச்சமாக அவளுக்கு பால் மற்றும் அசைவ உணவு பிடிக்காது

அப்படிங்கிறதால நான் 12 வருடமாக பால் மற்றும் அதைச்சார்ந்த எந்தப் பொருட்களும் மற்றும்

அசைவம் சாப்பிடுவது இல்லை.


அவளுக்கு பாலும் நான்-வெஜிடேரியனும் பிடிக்காதுங்கற விஷயமே, எனக்கு நாங்க டியூஷன்

கடைசி நாள்ல ஃபேர்வெல் பார்ட்டியில டியூஷன் சார் காபி குடிக்க சொன்னப்பத்தான் தெரியும்.

“தனா, காபி எடுத்துக்கோங்க.”

“வேண்டாம், நான் காபி சாப்பிட மாட்டேன், பால் சம்மந்தப்பட்ட எதுவும் சாப்பிட மாட்டேன்,

நான்-வெஜ்ஜூம் சாப்பிட மாட்டேன்”

அன்றுதான் நான் குடித்த கடைசி காபி, உங்களுக்கு தெரியுமா எங்கள் வீட்டில் கறவை மாடுகள்

உண்டு, தினமும் 7 லிட்டர் பால் கறக்கும் பசுக்கள், என்னுடைய அம்மா கூட கேட்பார்கள், “பால்

ஏண்டா உனக்கு பகை ஆச்சு?” அப்படின்னு.

அந்த கிளாஸில அந்த வயசுல, பன்னிரண்டாம் வகுப்புல ஆட்டோகிராஃப் வாங்கியவன் நான்

ஒருத்தனாகத்தான் இருக்க முடியும். எல்லோரும் போட்டு கொடுக்க, அவளிடமும் அந்த

நோட்டுப் புத்தகம் போனது. நோட்புக் என்றால் பெரிதாக ஆட்டோகிராஃப் நோட்புக்,ஆர்ச்சீஸில்

வாங்கியது இல்லை, அந்தப் புத்தகத்தை நானே தயாரித்தேன், பெரிய பேப்பர்களை வெட்டி

சின்னதாக மாற்றி பிறகு அந்த தாள்களை தைத்து உருவானது அது.

பல கையெழுத்துக்கள் அதில் இருந்தபோதும், அந்த கை எழுத்துக்கு மட்டுமே அதிக ஒளி

இருந்ததாக தெரிந்தது அன்று எனக்கு, ஓ அவள் எழுதியதை சொல்லவே இல்லை? அவள்

அந்தப் புத்தகத்தில்,

“த ட்ரு லவ் ஹேஸ் டு பேஸ் மெனி டிபிகல்டீஸ்”
என்றும் அன்புடன்
தனலெட்சுமி. எம்
தொடர்வேன் ....
type="text/javascript">&cmt=0&postid=113376224930661778&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

காதல் வலை - பகுதி 1


இனிய நண்பர்களுக்கு வணக்கம், வாழிய நலம், புதியதாக ஒரு தொடர்கதை எழுதலாம் என ஒரு முயற்சி, வழக்கம் போல் படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்வேன்.
ஸ்ரீஷிவ்..

"ஹாய் தேர்"
எல்லோரைப் போலவும், அவளிடமும் என்னுடைய உரையாடல் ஆரம்பமானது இப்படித்தான். வணக்கம், எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க, வழக்கமான வரிகள், இருப்பினும் அதில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்ததை அன்று நான் உணரவில்லை. மறுநாளும் அதே நேரம், அவள் வரவில்லை வலையில், ஏதோ சில வேறு மக்களோடு பேசிவிட்டு சகஜமாய் திரும்பினேன், என்னுடைய மின்னஞ்சலை அறைக்கு வந்து பார்த்ததும் மின்னதிர்ச்சி வாங்கினேன். அவளின் முதல் மடல்,

நவம்பர் 23, 2001, 7.20PM
பெறுநர் ஈஸ்வர்
அனுப்புனர் மாதவி கண்ணன்

ஹாய்,

நைஸ் டாக் வித் யூ, ஐ ஃபீல் சோ ஹாப்பி.
பை ஃபார் நவ்
பை

மாதவி. க

இதுதான் அந்த முதல் மடல், மின்னதிர்ச்சியுடனே சிறு மலர்ச்சி.

அந்த மடலில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றாலும், ஏதோ ஒரு ஈர்ப்பு அந்த மடலில், அதன்பின்பு அவளுடைய மடல்கள் எனக்கு மழையாய் வர துவங்கினபோதும் மனதில் ஒரு சலனமும் இல்லை. பல பெண்களிடம் இதற்கு முன்பு பேசி இருக்கின்றேன். அவளுடைய அந்த மடல்கள் ஏதோ ஒரு நீண்ட நாள் பழகின ஒரு தோழமை. நட்பு தெரிந்தது எனக்கு, அவளிடம் எதையும் மறைக்க இல்லாமல் போனது எனக்கு அன்று. என்னுடைய பலநாள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளாத பல விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். எங்கள் நட்பு அந்த எல்லையில் தொடர்ந்தது. என்னுடைய பல விஷயங்கள் அவளுக்கு தெரிந்ததுபோல், அவளுடைய விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வாள். ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு 9.45க்கு எங்களுடைய தொலைபேசி உரையாடல் தொடங்கி இரவு 10.30 வரையில்தொடரும். அந்த வாரத்திற்கான அத்துனை விஷயங்களையும் பேசி முடிப்போம். என்ன என்ன விஷயங்களையோ பேசிய நாங்கள். எங்களின் கடந்து வந்த காதல் பாதையை அலசியது...

“ஹாய், கல்யாணம் பத்தி நீ என்ன நினைக்கிற?”

“கல்யாணம், கசமுசா எல்லாத்திலையும் எனக்கு நம்பிக்கையில்லை ஈஸ்வர், இன்னிக்கு நாங்க தில்லை நடராஜர் கோவிலுக்கு போய் வந்தோம். அங்கே சுதா டான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. ஓருத்தர் உன்னை மாதிரியே 60 வயசுல ஆட்டோகிராப் வாங்க வந்திருந்தார்.”

“என்னடி கிண்டலா?”

“இல்லையே, உனக்கு 60 வயசு தானே?”

“உங்க அப்பா வயசை நான் சொல்லலை”

"ஹேய் என்னோட பிக்சர் பார்த்து இருக்கியா?”

“இல்லையே?”

“போய் என்னோட வெப்சைட்டுல பாரு”

“உன்னோட வெப்சைட் என்ன?”

“அறிவுக்கொழுந்து, ஆன்லைனில் இவ்வளவு நாளா இருக்க, கண்டுபிடி பார்ப்போம்”

மறுநாள் அவளிடம் இருந்து ஒரு மின்னஞ்சலுடன் அவள் தந்தை 60ம் கல்யாணத்து புகைப்படம் வந்திருந்தது, அதில் இருப்பதில் அவள் யார்?

தொடர்வேன்...:)
type="text/javascript">&cmt=0&postid=113372318597878944&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது