இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, November 20, 2006

வார்த்தை தவறிவிட்டாய்....

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி...பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி...இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் வரும் ஒரு அற்புதமான பாடல், இன்று கேட்டாலும் இனிக்கும்...கேட்டு பார்த்து ரசியுங்கள்..
ஸ்ரீஷிவ்...

type="text/javascript">&cmt=0&postid=116409339038040789&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

இன்று "ஹலோ' சொல்லுங்கள்...!

இன்று "ஹலோ' சொல்லுங்கள்...!


இன்று உலக "ஹலோ' தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் மறந்து போன அல்லது விடுபட்டுப்போன நல்ல நண்பர்களை தேடிப்பிடித்து குறைந்த பட்சம் "ஹலோ' சொல்வதையே இத்தினம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அத்துடன் அமைதிக்காகவும் இத்தினத்தில் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

1973ம் ஆண்டில் எகிப்து மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட தகராறையொட்டி இத்தினம் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 180 நாடுகளில் இந்த "ஹலோ' தினம் கொண்டாடப்படுகிறது.

தற்போது தொலை தொடர்புத் துறை வளர்ந்துவிட்டது. ஆகவே, உலகின் ஒரு மூலையில் உள்ள ஒருவர் இன்னொரு மூலையில் உள்ளவரை உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடியும். இமெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்றாலும் இத்தினத்தின் நோக்கம் ஒருவர் மற்றொருவருடன் நேரடியாக பேச வேண்டும் என்பதுதான். ஆகவே, தொலைபேசி மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்தி இன்று குறைந்த பட்சம் பத்துப் பேரிடமாவது பேச வேண்டும் என்று உலக "ஹலோ' தின செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பிற முக்கிய தினங்களைப் போலவே, இத்தினத்துக்கும் வாழ்த்து அட்டைகளும் இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. ஒருவேளை "ஹலோ' சொல்ல முடியாத பட்சத்தில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்ளலாம். உலக "ஹலோ' தின அமைப்பு அமைதி நோபல் பரிசு பெற்ற அறிஞர்களிடம் இருந்து கடிதங்களைப் பெற்றுள்ளது. இதில் அவர்கள் இந்த உலகம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.

"ஹலோ' எனும் வார்த்தைதான் இரு தெரியாத நபர்களைக் கூட ஒன்றிணைக்கிறது. ஆகவே, "ஹலோ' எனும் வார்த்தைக்கு பல்வேறு மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்வதன் மூலம் நட்புக் கொள்வது எளிதாகும்.

மாணவர்களைப் பொறுத்தவரை பிற நாட்டு மொழிகளை கற்றுக் கொள்ள இத்தினம் உதவும். இத்தினத்தில் "ஹலோ', குட்பை மற்றும் பீஸ் ஆகிய வார்த்தைகளை பல்வேறு மொழிகளில் கற்றுக் கொள்வது சர்வதேச மொழிகளை அறிந்து கொள்ள உதவும்.

சில மொழிகளில் "ஹலோ' என்பதற்கு உள்ள அர்த்தம் கீழே:

கோனிச்சிவா ஜப்பானீஷ்

ஜம்போ ஸ்வாஹிலி

ஹோலா ஸ்பானிஷ்

நி ஹாவோ சைனிஷ்

பாஞ்சோர் பிரெஞ்சு

புயான் கியார்னோ இத்தாலியன்

அன்னியோங் ஹா ஷிம்னிக்கா கொரியன்

செஸ்க் போலிஷ்

ட்ராவ்ஸ்ட்வைட் ரஷ்யன்

இது போன்று இன்னும் சில மொழிகளில் எவ்வாறு "ஹலோ' எனும் வார்த்தை கூறப்படுகின்றன என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று சர்வதேச "ஹலோ' தினம்.
type="text/javascript">&cmt=1&postid=116407646045133704&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, November 19, 2006

சுவாமியே சரணம் ஐயப்பா...

சபரிமலைக்குப் புறப்படுவோம்

மாலை அணியும்போது சொல்லும் மந்திரம் :


ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்

வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்

சாந்த முத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்

சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே

குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே-

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்

சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்

சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம:அ

மாலை கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:



அபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே

சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - தேஹமே விரத விமோசனம்



மூன்று பணிகள் : சபரிமலையின் ராஜாவான ஐயப்பன் மூன்று செயல்களை செவ்வனே முடிப்பதற்காக அவதாரம் எடுத்தார். அசுரகுல அரசன் பிரம்மாசுரனை அழித்திட, தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்

படுத்தும் மகிஷி எனும் அரக்கியை அழிக்க, குழந்தை பாக்கியம் இல்லாத சிவபக்தரான ராஜசேகர மன்னனுக்கு குழந்தை பேறு கிடைக்கச் செய்ய. இப்பணிகளைக் குறுகிய காலத்தில் முடித்து விட்டார் ஐயப்பன்.




தவமிருக்கும் ஐயப்பன்:தான் அவதாரம் எடுத்து வந்ததன் அநாக்கத்தை முடித்த ஐயப்பன், பம்பை நதிக்கரையில் தவம் இருக்கப்போவதாக தனது வளர்ப்புத் தந்தை பந்தள மகாராஜாவிடம் சொல்லிவிட்டு சபரிமலைக்கு வந்துவிட்டார். இவர், கார்த்திகை முதல் நாளில் இருந்து மார்கழி 11 வரையிலும், மகரசங்கராந்தி தினத் தன்றும் பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக தவநிலையில் இருந்து அருள்நிலைக்கு தன்னை மாற்றிக் கொள்வதாகச் சொல்வதுண்டு.
நெய்த்தேங்காய் ஏன்?: சபரிமலை ஐயப்பனுக்கு படைக்கப்படும் பொருட்களில் நெய் அடைக்கப்பட்ட தேங்காய் பிரதான இடம் பிடித்திருக்கிறது. ஐயப்பன், வளர்ப்புத் தந்தையான பந்தள மகாராஜாவை பிரிந்துசெல்லும் போது தன்னை வருடத்தில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.





அவர் வழி கேட்டபோது, வனத்தின் வழியே நீங்கள் வரும்போது கருடன் ஒன்று வழிகாட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி வருடத்திற்கு ஒருமுறை மன்னர் தன் மகனை காணச்சென்றார்.



தான் அதிக பாசம் வைத்திருக்கும் மகனை காணச்செல்லும் போது ஏதாவது கொண்டு செல்ல வேண்டும். அதேசமயம் அப்பொருள் கெடாமலும் இருக்க வேண்டும். எனவேதான், மன்னர் அவருக்கு நெய் மற்றும் அதில் செய்யப்பட்ட பண்டங்களை கொண்டு சென்றார். நெய் எளிதில் கெட்டுப்போகும் பொருள் அல்ல. அதைக் குறிக்கும் வகையிலேயே இப்போதும் நெய்த்தேங்காய் கொண்டு செல்கின்றனர்.



பெண்கள் காணும் ஐயப்பன்:காட்டில் இருந்த மகன் ஐயப்பனை காணச்சென்ற தந்தை ராஜசேகர மகாராஜா அவருக்கு சூட்டி அழகு பார்க்க ரத்தின மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலீயங்கள், பதக்கம் ஆகிய ஆபரணங்களைக் கொண்டு சென்றார். இதனடிப்படையில் தற்போதும் சபரிமலையில் மகரசங்கராந்தி தினத்தன்று சுவாமிக்கு நகைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி தருகிறார். பெண்கள் இக்காட்சியை தரிசிக்க முடியாது என்பதால், பந்தளம் அருகிலுள்ள பெருநாடு ஐயப்பனை இந்த நகைகளால் மகரசங்கராந்திக்கு நகைகள் எடுத்துச் செல்லப்படும் முன்பு அலங்கரிப்பர். இங்கே பெண்கள் ஐயப்பனை நகையுடன் தரிசிக்கலாம்.


சபரிமலை அருகிலுள்ள சிவத்தலங்கள்:சபரிமலைக்கு செல்பவர்கள் ஐயப்பனை தரிசிப்பதோடு நின்றுவிடாமல் அருகில் இருக்கும் சிவத்தலங்களுக்கும் சென்று வரலாம்.
type="text/javascript">&cmt=0&postid=116400694042964658&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

ஆகாய கங்கை..

ஆகாய கங்கை....தர்மயுத்தம் என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளியான ஒரு அற்புதமான பாடல், நான் எம்.ஈ படித்த போது எங்கள் கல்லூரியின் ஒரு மாணவி பாடக்கேட்டு மீண்டும் எனை அடிமையாக்கிய பாடல், நீங்களும் பார்த்து ரசிக்கலாமே????
type="text/javascript">&cmt=2&postid=116394914935413437&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா....
இதயம் திரைப்படத்தில் வந்த ஒரு அற்புதமான பாடல், நான் பி.ஈ, முதலாம் ஆண்டு இறுதியில் இருந்தபோது வந்த படம், செங்கல்பட்டு ராதா திரையரங்கில் பலமுறை பார்த்து ரசித்தது, நீங்களும் பார்க்கலாமே?
type="text/javascript">&cmt=0&postid=116394616999597891&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கல்யாண மாலை கொண்டாடும்...

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே...
அருமையான ஒரு பாடல், புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் வந்த பாடல், எனக்குப்பிடித்த பாடல்களுள் ஒன்று, நீங்களும் பார்த்து , கேட்டு ரசிக்கலாமே???
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=6&postid=116394580558417620&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, November 18, 2006

தென்றல் வந்து என்னைத்தொடும்...

தென்றலே என்னைத்தொடு என்ற படத்தில் இருந்து ஒரு அருமையான பாடல்,
தென்றல் வந்து என்னைத்தொடும்...:)
type="text/javascript">&cmt=1&postid=116391180801194747&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சங்கீத மேகம்...

அன்பின் தோழமைக்கு,
வணக்கம் வாழிய நலம், இது என் முதல் முயற்சி, ஒளிப்படத்தினை என் பதிவில் இடுவது, நன்றாக இருக்கின்றதா பார்த்துவிட்டுச்சொல்லுங்கள்..
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=3&postid=116391128415054774&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, November 15, 2006

காதல் வலை - பகுதி 17

தேவதை இறங்கும் இடமும் வந்தது. "ஈஷ், நான் இப்படியே இறங்கி, இந்த ரயில்வே மேம்பாலம் தாண்டி போய்டறேன், வீடு வந்திடும்"
"சரி மாது, நாளைக்கு சந்திக்கலாமா?"
"இல்ல ஈஷ், நீ வீட்டுக்குப்போ, நாம அடுத்தமுறை சந்திப்போம்"
ஆட்டோவை நிறுத்தச்சொல்லி இறங்கினோம். தேவதை அப்போதுதான் தான் மறந்திருந்த ஒன்றையும் நினைவு கூர்ந்து தன் கைப்பையில் இருந்த தங்கள் குடும்ப புகைப்படத்தொகுப்பினைக்காட்ட, அதிலிருந்து அவள் தனியாக கொச்சின் துறைமுகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு படத்தினை மட்டும் அவள் நினைவாக எடுத்துக்கொண்டேன்.
"சரி,நான் கிளம்பவா ஈஷ்?, கால் பண்ணுடா"
'சரிடி செல்லம், இரு உன் தங்கச்சி வந்திரட்டும்"
அவளின் தங்கையும் வந்து சேர, இருவரையும் வழியனுப்பிவிட்டு, தனியனாக மீண்டும் தமக்கை இல்லம் நோக்கி உள்ளமில்லாமல் திரும்பினேன்.ஏதோ ஒரு வலி, அவளை கடைசிமுறையாக காதலியாகப்பார்ப்பது அதுதானோ? என்ற ஒரு பயம், ஏனென்று தெரியவில்லை, ச்சீ, சீ அசடு, என்ன இது சின்னப்புள்ள மாதிரி என்று மனதினைத்தேற்றிக்கொண்டு, வீடு திரும்பினேன். அக்கா கேட்டார்கள்,"என்னடா ஆச்சி? ஒரு மாதிரி இருக்க? என்ன சொல்லுச்சி பாப்பா? எதுனா சண்டையா?"
"இல்ல அக்கா, என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு, அதுதான்"
"அடச்சீ அசடு, அதெல்லாம் ஒன்னுமில்ல, ஊருக்குப்போய் பேசு அவகிட்ட போன்ல"
"சரிக்கா, பேசறேன்"
மாலை முடிந்து இரவும் வந்தது, வீடு திரும்பி, தொடர்வண்டிப்பயணத்திற்கு என்னைத்தயார் செய்துகொண்டு கிளம்பினேன். வழியெங்கும் அவள் நினைவே ஒரு சங்கீதமாய்...அவளுக்கும் எனக்கும் மிகவும் பிடித்த இந்தபாடல் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே வந்தது, அந்த பாடலை உங்களுடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

மீண்டும் அதே தலைநகரம், அதே மக்கள், அதேவிடுதிவாழ்க்கை, எப்பொழுதுதான் முடியுமோ இந்த நரகவாழ்வு என்று ஒவ்வொருநாளும் ஒரு யுகமாகக்கடத்திக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் என் தேவதை என்னிடம் கேட்டாள்," ஈஷ், உன்னோட மின்னஞ்சல் கடவுச்சொல்லைக்கொடேன்"
"எதுக்குடா செல்லம்?"
"இல்லடா எனக்கு ரொம்ப போர் அடிக்குது, அப்போ அப்போ உன்னோட மின்னஞ்சல்ல வர்ற கவிதைகளை எடுத்து படிச்சிட்டு இருப்பேன், பொழுதும் போகும்"
"சரிடி, என்னோட கடவுச்சொல் ********"
"சரிடா, நான் அப்ப்போ அப்போ படிச்சி உனக்கும் விமரிசனம் தர்றேன்;) "
"ஏய், எதுனா மின்னஞ்சலை மாத்தி பதில் எழுதிடாதேம்மா, வம்பா போயிடும்"
"அதெல்லாம் செய்யமாட்டேண்டா செல்லம், எனக்கு தெரியாதா?"
அந்த நாள், அந்த நொடிப்பொழுது நான் கடவுச்சொல்லைக்கொடுத்தது என் வாழ்வின் திசையையே மாற்றப்போவதை அறியாமல் சந்தோசமாக உரையாடலை முடித்து தொலைபேசியை வைத்தேன்...
தொடரும்...
( என்ன தோழமையே? எப்படிச்செல்கின்றது தொடர்?அடுத்த பகுதி இன்னும் விருவிருப்பாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்...அடுத்த வாரம் வரை கொஞ்சம் காத்திருங்களேன் பிளீஸ்..)
பிரியமுடன்
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=0&postid=116362342532942799&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

சிவில் சர்வீஸ் தேர்வு - கட்ஆப் மார்க்கை வெளியிட உத்தரவு

கட்ஆப் மார்க்கை வெளியிட உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென்று யு.பி.எஸ்.சி.,க்கு மத்தியதகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் 6 மாத கால போராட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டால், மிகப் பெரிய ஊழல் வெடிக்கும் என்ற பரபரப்பு டில்லி வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வுகளை டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பொதுத் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த இந்த சிவில் சர்வீஸ் தேர்வின் முதற்கட்டத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.இதனால் யு.பி.எஸ்.சி.,க்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். தகவல்அறியும் உரிமைச் சட்டத்தை மாணவர்கள் நாடினர்.

பல்வேறு வாய்தாக்களுக்கு பிறகு, இவ்விவகாரத்தை விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு தனது தீர்ப்பை அறிவித்தது. மொத்தம் 16 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பை மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் வஜாகத் அபிபுல்லா வெளியிட்டார். அதன்படி," 2006ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதற்கட்டதேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும். முதற்கட்ட தேர்வில் உள்ள ஜெனரல் ஸ்டடீஸ்எனப்படும் பொது விஷயங்கள் மற்றும் 23 ஆப்ஷனல் பேப்பர்களுக்கான மதிப்பெண்களை வெளியிடவேண்டும்.முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் மாணவர்கள் என்ன மதிப்பெண்கள்பெற்றனர் என்பது குறித்த கட்ஆப் மார்க் விவரங்களையும் வெளியிட வேண்டும். கட்ஆப் மார்க் என்ற சிஸ்டம் யு.பி.எஸ்.சி.,யில் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அவ்வா கட்ஆப் சிஸ்டம் இல்லையெனில், முதற்கட்ட தேர்வில்தேர்வாகியிருக்கும் மாணவர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக பாடங்கள் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற்றுதேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதையும் வெளியிட வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு வாரங்களுக்கு யு.பி.எஸ்.சி., வெளியிட்டாக வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு டில்லியில் மாணவர்கள் மத்தியில் பெரும்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மாணவர்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாக கூறப்பட்டாலும், யு.பி.எஸ்.சி., தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து மாணவர்கள் போராட்டக்குழு தலைவர் சுனிலிடம் கேட்டபோது,"எங்கள் கோரிக்கையை இழுத்தடித்த யு.பி.எஸ்.சி.,க்கு மத்திய தகவல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு மூலம் சரியான பதிலடி கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பிறகும்எங்களுக்கு நியாயம் கிடைத்துவிடுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம் இந்த தீர்ப்பை எதிர்த்து யு.பி.எஸ்.சி., கோர்ட்டுக்கு செல்வதற்கே வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேண்டுமென்பதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசின் கருணையை எதிர்பார்க்கிறோம். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க திட்டமிட்டு எங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி விண்ணப்பித்துள்ளோம்,' என்று கூறினார்.

இதற்கிடையில் மத்திய தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பு யு.பி.எஸ்.சி.,க்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளதாககூறப்படுகிறது. இந்த தீர்ப்பின்படி மாணவர்களின் கட்ஆப் மார்க்கை வெளியட்டாக வேண்டிய கட்டாயம் யு.பி.எஸ்.சி.,க்குஏற்பட்டுள்ளது. அவ்வாறு மதிப்பெண்களை வெளியிட்டால், தற்போது முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளமாணவர்களின் உண்மை நிலை வெளியே தெரிய வரும். மிகப்பெரிய அளவில் நடந்துள்ள ஊழல்கள் வெடிக்கவும்வாய்ப்புள்ளதால் தேசிய அளவில் இப்பிரச்னை பெரிய அளவில் உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தேர்வுமுடித்து மெயின் தேர்வுக்கு சென்றுள்ள மாணவர்கள் பலரது கதி என்னவாகும் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்குஒரு நல்ல வாய்ப்பபு இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தாங்கள் வாங்கும் மதிப்பெண்கள் என்னவென்றே தெரியாத நிலை இருந்தது. இதனால் வெற்றிக்கான எல்லை எது என்பதெல்லாம் தெரியாமலேயே இருந்தது.நாட்டிலேயே பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சிறந்து விளங்குவது தமிழகம் தான். மற்ற மாநில மாணவர்களோடு

ஒப்பிடும்போது தமிழக மாணவர்களுக்கு போட்டிபோட்டு வெற்றி பெறும்மனப்பான்மை அதிகம். இதுவரை சிவில் சர்வீஸ் தேர்வுகளின் மூடுமந்திரம் தெரியாமலேயே இருக்க நேர்ந்தது. தற்போதையதீர்ப்பினால் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மதிப்பெண்கள் பெறுவதை அதிகரிக்கும் சூட்சுமம் என்னவென்பதை கண்டறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாங்கள் எதற்காக சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைகிறோம்

என்பதே தெரியாமல் இருந்து வந்த நிலையும் மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மாணவர்கள் டில்லியில்தெரிவித்தனர்.
தகவல் : தினமலர்.காம்
type="text/javascript">&cmt=2&postid=116361949945019080&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, November 06, 2006

இது தகுமா? ( நேற்றைய குண்டுவெடிப்பு -05-11-2006)


அன்பின் பதிவர்களுக்கு
வணக்கம் , வாழிய நலம், கனத்த இதயத்துடன் எழுதுகின்றேன் இந்த பதிவினை, என்ன நடக்கின்றது இங்கே குவஹாத்தியில்? எப்பொழுது இந்த மானிலம் வளரப்போகின்றது? ஏன் இது இங்கே நடக்க வேண்டும்? மாமுனி கோஸ்வாமி போன்ற பெரிய பேராசிரியர்கள் தலையிட்டும் ஏன் இந்த தான் தோன்றித்தனம்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் வேண்டும்? யார் அவர்கள்? அவர்களின் உரிமைக்காக அவர்கள் போராடுகின்றனர் என்று கூறினால் அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், முட்டாள்தனம், ஏனெனில் அவர்கள் கேட்கும் அதே உரிமைதான் நேற்று குண்டுவெடிப்பில் இறந்துபோன 14 பொது மக்களூக்கும், ஏழை கூலிக்காரனுக்கும் இருந்தது இந்த உலகில் வாழ.அதனைப்பறிக்க இவர்கள் யார்?

நேற்று மாலை சரியாக ஒரு 6.20 மணி இருக்கும், நான் அந்த குண்டு வெடித்த பகுதி வழியாகத்தான் ஆட்டோவில் பண்ணாட்டு பொருட்காட்சி காண என் நண்பருடன் காமாக்கியா தேவி கோவிலில் இருந்து சென்றுகொண்டிருந்தேன். பொருட்காட்சியை கண்டுவிட்டு 7.30மணி பேருந்தினைப்பிடித்து எங்கள் ஐஐடிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் 7.36க்கு ஒரு அழைப்பு, ஷிவ் , எங்க இருக்கீங்க ? அப்படின்னு, நான் இப்போதான் ஃபேன்சி பஜார் தாண்டி, பராலுமுக் வழியா போய்க்கிட்டிருக்கேன் என்று நான் சொல்ல, பத்திரமா ஃபேன்சி தாண்டிட்டீங்களா? அங்கே மாலை குண்டு வெடித்ததாம் என்று தொலைபேசியில் கேட்டதும் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.மதிய உணவு நான் எடுத்துக்கொண்ட அதே ஜேபீஸ் உணவகத்தின் பின்புறம் தான் வெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது. அந்த மாலை பொருட்காட்சிக்குச்செல்லாமல் அங்கே அருகிலேயே இருந்த ஒரு பூங்கா ( நாங்கள் வழக்கமாக அமரும் பூங்கா அது) வில் அமர்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.


இந்தியாவின் பெரும்பான்மையான மானிலங்களை நான் சுற்றிப்பார்த்திருக்கின்றேன், கடந்துவந்திருக்கின்றேன், ஜம்மு காஷ்மீரைத்தவிர ஏறத்தாழ எல்லா மானிலங்களையும் பார்த்துவிட்டேன், வடகிழக்கில் அப்படி என்னத்தான் நடக்கின்றது? , வேறு எந்த மானிலத்திலும் இந்த அளவிற்கு வன்முறை தலைவிரித்து ஆடக்கண்டிலேன், உள்ளம் பதறுகின்றது உண்மையில். கதறிக்கதறி கண்களில் கண்ணீர் வற்றி வறண்டுபோன மக்கள், தன் ஒரு வேளை உணவிற்காக கூலிவேலை செய்யும் தொழிலாளீ, மூட்டை சுமப்பவர், இவர்கள் எந்த விதத்தில் இவர்களுக்கு சரிக்கு சமம் ஆவார்கள்? இவர்களுக்கு நெஞ்சில் துணிவிருந்தால் சென்று அந்த கஷ்மீர் தீவிரவாதியிடம் தன் தீரத்தினை காண்பிக்கட்டுமே? வீரன் என்று நிரூபித்து விவேகமாக அடிக்கட்டும். ஏன் பொதுமக்கள்? இப்படி பயமுறுத்தி கொன்று மக்களை பீதிப்படுத்தி அதன்மூலம் அவர்களின் கவனத்தினைக்கவரலாம் என்றோ, அவர்களின் கருணையைப்பெறலாம் என்றோ நினைத்தால் அவர்களை விட கடைந்தெடுத்த முட்டாள்கள் யாருமில்லை என்பதே என் கருத்து. இதுவரை எந்த இயக்கமும் இந்த வெடிப்புகளுக்கு பொறுப்பேற்கவில்லை, ஏற்றுக்கொண்டால் தெரியும் அவர்களின் கதி என்னவென்று அடுத்த தேர்தலில். மக்கள் ஏமாந்துகொண்டிருக்க மாக்கள் ஒன்றுமில்லையே? அவர்களின் சக்தியை விரைவில் காட்டுவார்கள், அவர்களின் பலம் அறியும் சமயம், இவர்களின் பலவீனம் அதிகரிக்குமே? அதை ஏன் மறந்தனர்? இன்று வந்த தகவலின் படி, பெல்டோலா சாரியாலி ( நான்முனை கூட்டு) சந்தியில் குண்டு வெடிப்பு என்று ஒரு தோழி தொலைபேசியில் தெரிவித்தார், அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன, பொதுவாழ்வு பேரளவில் பாதிக்கப்பட்டிருந்தது, குவஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும், மகேந்திர மோகன் சவுத்திரி மருத்துவமனை இரண்டும் திமிலோகப்பட்டது இன்று. எத்தனை ஓலக்குரல்கள்? எத்தனை சவங்கள்? இதுவா அமைதியைத்தேடும் வழி? அரசிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தத்தானே அத்தனை பெரியவர்களும் பாடுபடுகின்றனர்? ஏன் இந்த வெறி? புன்னகை தேசமாய் அமைதியாய் இருக்கும் அசாமில் ரத்த ஆறு தேவையா? மேலும் இன்று காலை 6.45 மணிக்கு இரண்டு முறை பூமி குலுங்கியது. இயற்கைத்தாயும் இவர்களை மன்னிக்கவில்லையோ? இப்படியே சென்றால் வடகிழக்கு இந்தியாவின் கதி? இப்போதே நம் தென் தமிழகத்தினை விட ஏறத்தாழ 25 ஆண்டுகள் பின் தங்கி இருக்கின்றது வடகிழக்கு, குறிப்பாக அசாம், இன்னும் இப்படியே இயற்கையின் சீற்றம் மற்றும் இவர்களின் குண்டுவெடிப்புகளில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமானால் அசாம் மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடவும் வாய்ப்பிருப்பதை எண்ணி கவலையுடன் இந்த பதிவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த வாரம் பிரார்த்தனை செய்யும்போது தோழர்கள் குண்டுவெடிப்பில் இறந்த அப்பாவி மக்களுக்காகவும் சேர்த்து பிரார்த்திக்குமாறு வேண்டி விரும்பி வருத்தத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவண்,
ஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து....
type="text/javascript">&cmt=3&postid=116282480001144024&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது