இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, August 13, 2006

ஸ்வதேஷ் - ஒரு கண்ணோட்டம்

ஸ்வதேஷ் - ஒவ்வொரு அயலகத்திருக்கும் இந்தியனின் கனவாகவேண்டிய படம்.

அருமையான ஒரு திரைப்படம், ஏற்கனவே பார்த்திருந்தாலும், இன்று மீண்டும் தரவிரக்கம் செய்து பார்த்தேன், மனம் மிக திருப்தியடைந்தது. இனிமையான ஒரு கதை, ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ஒரு கதை, அயல் நாட்டில் ( அமெரிக்கா) ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ( நாசா) விஞ்ஞானியாக பணிபுரியும் கதாநாயகன், தன்னை எடுத்து வளர்த்த ஒரு மூதாட்டியைக்காண இந்தியா வருகின்றான். சிறுவயதிலிருந்தே அதிகமாக ஏழ்மையைக்கண்டறியாத ஒரு வாலிபன், இந்தியாவின் பின் தங்கிய கிராமத்தினில் தன் மூதாட்டி இருப்பதை அறிந்து அவரை சந்திக்கச்செல்கின்றான்.

அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, தொலைத்தொடர்பு இல்லை, ஒரு தொலைபேசிக்கு கூட 10, 12 கி.மீ சென்று அங்கிருக்கும் ஒரு அஞ்சல் நிலையத்தில் இருந்தே தொலைபேசவேண்டிய கட்டாயம், அங்கு ஒரு அழகிய அறிவான பெண் ஒருவளையும் காண்கின்றான். இந்தியாவைவிட்டு எந்த காரணத்திற்கும் வெளியேறமாட்டேன் என்ற ஒரு எண்ணத்தோடு ஒரு சிறு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிபவள் அவள். அவளின் வீட்டில்தான் இந்த மூதாட்டி இருக்கின்றார் என அறிந்து அவரை சந்தித்து அவனுடன் அன்னிய தேசத்திற்கு அழைக்கின்றார், வரமுடியாத காரணத்தினை அன்பாக தெளிவாக உரைக்கின்றார். அந்த கிராமத்தில் ஒரு பெரியவர் , நாயகி பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியர். அந்த கிராம முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றார். ஒரு நாளில் நாயகன் அந்த கிராமத்திற்கு மின்சாரம் கொண்டுவர நினைக்கின்றான். அதற்காக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் காணும் காட்சிகள் அவன் மனதினை மாற்றுகின்றன, இறுதியாக அவனாகவே முயன்று கிராமத்திற்கு எப்படி மின்சாரம் தயாரிக்கின்றான்? ( கொண்டுவருகின்றான்), அதன்பின் அயலகம் சென்று பணியில் சேரப்போகும் நேரம், நாயகி தன் காதலை வெளியிடுகின்றாள். அவன் அயலகம் சென்றால் அவளை மறந்துவிடவேண்டியதே என்றும் கூறுகின்றாள், அதனைமீறியும் அவன் பணிக்குச்செல்லவேண்டிய அவசியம். அயலகத்தில் அவனால் பணியில் கவனம் செலுத்தமுடியவில்லை...

இறுதியில் என்ன முடிவெடுக்கின்றான் என்பதே கதை, முடிந்தால் படத்தினை அனைவரும் பார்ப்பது நலம், ஹிந்தி புரியாதவர்களும் பார்க்கலாம், ஏனெனில் இது உணர்வுபூர்வமான படம், கண்கள் பணிக்க எத்தனை முறைபார்த்தாலும் சலிக்காத ஒரு படம், ஒருமுறையேனும் பார்க்கலாமே குறைந்தபட்சம் அயலகத்திலிருக்கும் இந்தியராவது???

தேசபக்தியுடன்,
சிவா...@ சிவசங்கர்.முருகையன்.
type="text/javascript">&cmt=0&postid=115547783939501690&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, August 05, 2006

செப்., 11ம் தேதி சூர்யா ஜோதிகா திருமணம்

செப்., 11ம் தேதி சூர்யா ஜோதிகா திருமணம்

சென்னை: திரையுலகில் நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட காதல் நட்சத்திரங்கள் சூர்யா, ஜோதிகாவின் திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி சென்னையில் நடக்கிறது.

பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா. முன்னணி கதாநாயகனாக சிவகுமார் நீண்ட நாட்கள் நடித்து வந்ததைப் போலவே, இளம் கதாநாயகர்கள் வரிசையில் சூர்யாவும் முன்னணியில் இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் தயாரித்த "நேருக்கு நேர்' என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் மற்றொரு கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்து திரையுலகில் சிறந்த நடிகராக சூர்யா வலம் வருகிறார். அவருக்கு திருப்புமுனையாக ஏவி.எம்., தயாரித்த "பேரழகன்' படம் அமைந்தது. "நந்தா, பிதாமகன், மாயாவி, காக்க காக்க, கஜினி' என்று பல வெற்றிப் படங்களில் சூர்யா நடித்தார்.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய "வாலி' படத்தின் மூலம் நடிகை ஜோதிகா அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நடிப்பில் நல்ல பெயர் எடுத்த ஜோதிகாவும், சூர்யாவும் "பூவெல்லாம் கேட்டுப் பார்' என்ற படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். அப்படத்திற்கு பிறகு "உயிரிலே கலந்தது' என்ற படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். கோலிவுட் வட்டாரங்களில் அவர்கள் இருவரும் காதலர்களாக மாறி விட்டனர் என்ற கிசுகிசுவும் உலா வந்தது.

இருவரின் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. "பேரழகன்' படம் வெளியான பிறகு ஜோதிகாவும், சூர்யாவும் "நல்ல ஜோடி' என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடித்த "காக்க காக்க' படமும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது "சில்லுனு ஒரு காதல்' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலை பகிரங்கப்படுத்தவில்லை. எனினும், நேற்று நடிகர் சிவகுமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் சூர்யா ஜோதிகா திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவகுமார் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ் விவரம்: அடுத்தமாதம் 11ம் தேதி எங்களுடைய மூத்த மகன் சூர்யாவுக்கும், மும்பையைச் சேர்ந்த சந்தர்சதானா தம்பதியின் மகள் ஜோதிகாவுக்கும் திருமணம் நடத்திட முடிவு செய்துள்ளோம். அடுத்த நாள் 12ம் தேதி மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இளம் தம்பதிக்கு உங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றும் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திருமண அறிவிப்பினால் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருந்த ஜோதிகா அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஜோதிகாவுக்கு பதிலாக அப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். தற்போது ஜோதிகா "மொழி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் ஜோதிகா நடிப்பாரா அல்லது ஒதுங்கி விடுவாரா என்பதும் விரைவில் தெரியவரும்.
நன்றி : தினமலர்.காம்
type="text/javascript">&cmt=3&postid=115483436606024065&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 01, 2006

kalainjar talk on hindi




மத்திய அரசு விளம்பரங்களில் இந்தியும், தமிழும் இருக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை

சன்னை: ""மத்திய அரசு வெளியிடும் விளம்பரங்களில் இந்தியும் இருக்கட்டும். தமிழும் இருக்க வேண்டும். '' என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும் அ.தி.மு.க., உறுப்பினர் அரி(திருத்தணி) பேசியதாவது: கடந்த மாதம் 9ம் தேதியும், இந்தமாதம் 4ம் தேதியும் "தினமலர்' பத்திரிகையில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் படங்களை வைத்து முழுக்க முழுக்க இந்தியில் விளம்பரம் வெளிவந்துள்ளது. மொழிக்காக தீக்குளித்த தமிழகத்தில் இந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று கோவையில் ரயில்வே பணியாளர் வாரிய தேர்வு நடந்தபோது இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியை திணிக்க மாட்டோம் என்று நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக இந்தி மொழி நம் மாநிலத்தில் திணிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு என்ன செய்யப் போகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,வும் கூட்டணி கட்சிகளும் என்ன நிலையை மேற்கொள்ளப் போகிறீர்கள்? இவ்வாறு அரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: அரி இங்கு சுட்டிக் காட்டியதில் இருந்து நம்மை அறியாமல் நமக்கு தெரியாமல் நேருவின் உறுதிமொழி நிறைவேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. நேரு இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக பார்லிமென்டில் எழுத்து மூலமோ வாய்மொழியாகவோ எந்தவித உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. ஆனால், ஆட்சிமொழி பற்றி சொல்லும்போது உறுதிமொழி கொடுத்துள்ளார். அண்ணா காலத்தில் அந்த உறுதிமொழி பெறப்பட்டது. உறுப்பினர் இங்கே பேசும்போது இந்த பிரச்னையோடு நின்றிருந்தால் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே கருத்துடன் இருப்பதை சுட்டிக் காட்டியிருக்க முடியும். அதைவிடுத்து நாம் இங்கே விதண்டாவாதம் நடத்திக் கொண்டிருந்தால் மொழிப் பிரச்னையில் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நாம் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்ட முடியாது.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது இதே சபையில் அன்பழகன் உள்ளிட்ட 10 தி.மு.க., உறுப்பினர்கள் பதவி பறிக்கப்பட்டு வெளியேற்றிய நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்படி செய்தவர்களே மனம்மாறி இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க முன்வந்துள்ளார்கள் என்பது வேறு விஷயம். தமிழகத்தில் தமிழ் பத்திரிகைகளில் முழுக்க முழுக்க இந்தியில் விளம்பரம் வெளிவருவதை நானும் ஏற்கவில்லை. இங்குள்ள எந்த கட்சியினரும் ஏற்க மாட்டார்கள். இந்தியும் இருக்கட்டும். தமிழும் இருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று வந்தால் இந்தி இடம்பெறலாம். ஆனால், தமிழை புறக்கணித்துவிட்டு இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் தாங்கிக் கொள்ள மாட்டோம். ஏற்க மாட்டோம். இந்த கருத்தோட்டத்தை மத்தியில் இருப்பவர்கள் உணர்ந்து கொண்டு இனி வெளியிடும் விளம்பரங்களில் தமிழர்கள் மனம் புண்படாதவாறு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
நன்றி: தினமலர்.காம்
type="text/javascript">&cmt=3&postid=115661759446389665&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது