இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, July 30, 2005

கடந்துவந்த காவியம் - பகுதி 11.

கழுத்திலிடுவாய் மூன்று முடிச்சு
உன் காதிலிடுவேன் என் உயிர் மூச்சு,
காதலைச் சொல்ல கேட்டதற்கு
என் கண்மணியின் பதிலிது..

காதலைக் காசு கொடுத்து
வாங்க முடியாதே, அது
கடையிலும் கிடைக்காது...
காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால்
காளையர்க்கு மாமலையும் ஓர்க்கடுகாம்,
எத்துனை உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள்?

என்னவோ ஒரு சிறு பிணக்கு
அன்று அஷ்டமத்தில் சனி எனக்கு,
ஏனடி என் கடவுச்சொல்லைத்தந்தேன்?
என் மனதில் கள்ளம் ஏதுமில்லை என்றுதானே?
ஏன் என்னை சந்தேகித்தாய்?
இன்று சவமாய் நான்....

இருப்பினும் இறக்கவில்லை கண்மணி
நான் இறக்க நீ என் செய்வாய்?
நாகம் போல சீறினாலும் என்
நல்விளக்கல்லவா நீ?

நலம் பாடுவேன் நாயகியே,
எத்தனை முறைகள் சத்தியம் செய்ய?
எவர்மேல் நான் சத்தியமிட?
உனையன்றி என் உளத்தில்
ஒருவருக்கும் இடமில்லையென?

காத்திருக்கிறேன் கண்மனி
கேட்கிறதா என் காலடி????
type="text/javascript">&cmt=0&postid=112272787062259664&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 29, 2005

என் இனிய அஸ்ஸாம்....பகுதி 2.



வணக்கம் மீண்டும்,
நேற்று எழுதிய இடத்திலிருந்தே தொடர்கிறேன். பாலாஜி மந்திர் போகும் வழியில் மற்றுமொரு முக்கியமான இடத்தைச்சொல்ல மறந்துவிட்டேன், இண்டர் ஸ்டேட் பஸ் டெர்மினஸ் எனப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிறுத்தம், இங்கு இருக்கும் 7 மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முனையம், பெரிய அளவில் கட்டி வருகிறார்கள். மத்திய அரசின் தங்க நாற்கரத்திட்டத்தின் கீழ் வருகிறது என்று நினைக்கிறேன் அந்த பாதை.

அது மட்டுமன்றி, குவஹாத்தி நகர், தரை மார்கமாகவும், ரயில் மார்கமாகவும், ஆகாய மார்கமாகவும் வெளி உலகோடு இணைக்கப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியது போல், சராய்காட் பாலம் ஒரு பாலமாக இருக்கிறது வடகிழக்கு இந்தியாவிற்கும் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், கொல்கத்தா, தில்லி, சென்னை, மும்பை, எங்கிருந்து வந்தாலும், தரை வழியாகவோ, ரயில் மார்கமாகவோ வருபவர்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் வரவேண்டும். உறுதியான இரும்புப்பாலம் இது, இதற்கு முன்பு அதாவது இந்தப்பாலம் கட்டுவதற்கு முன்புவரை குவஹாத்திக்கும் அதன் துவக்க்கமாக கொண்ட வடகிழக்கு இந்தியாவிற்கும் பிரம்மபுத்திரா நதியைப்படகு மூலம் கடந்தே வந்து வணிகத்தை வளர்த்திருக்கிறார்கள்..

மேலும் ஒரு சிறு விஷயம், இந்தியத்துணைக்கண்டத்தினை மொகலாயர்கள் பிடித்து ஆண்டபோது, இந்த பகுதி மட்டுமே அவர்களால் பிடிக்கப்படாத பகுதியாகும். அஹோம் மன்னர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்ட பகுதி இது. இன்றும் அவர்களின் வம்சாவளியினர் பருவாக்கள் (Baruas) என்ற இனத்தினராய் இங்கு இருக்கிறார்கள். ( எங்கள் ஐஐடியின் இயக்குனர் கூட ஒரு பருவா தான் (Gautam Barua)). சரி சரி நகருலவைப்பாதியில் விட்டுட்டோம் இல்ல? அதுக்கு வருவோம். ரயில் , பேருந்து மாதிரி, ஆகாய வழி அப்படி பார்த்தா, LGB International Airport, பண்ணாட்டு விமான முனையம், இங்கிருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு , சைனாவுக்கு விமானங்கள் உள்ளன, மேலும் கொல்கத்தாவிற்கு நேரடி விமானங்கள் உள்ளன, ஜெட், சகாரா, இந்தியன் ஏர்லைன்ஸ் என்று பல விமானங்களும் வந்து செல்லும் விமான நிலையம். இதுதான் வடக்கிழக்கு இந்தியாவீற்கான வழிகள் போதுமா???

மீண்டும் குவஹாத்தியில், இப்போ அடுத்த வழிக்கு போவோம், ஊருக்குள்ள போகும் வழி, அந்த வழியில் முதலில் வருவது, ஆதாபாரி பேருந்து நிலையம், இந்தப்பேருந்து நிலையத்திலிருந்து தான், பக்கத்து நாடான பூட்டானுக்கு பேருந்தில் செல்லலாம், எல்லை வரை சென்று அங்கிருந்து இன்லைன் பர்மிட் எனும் உள்நாட்டு அனுமதி பெற்று அங்கு செல்லலாம். அந்த பேருந்து நிலையம் கடந்து சென்றால், மாலிகாவுன் (maaligaon) குவஹாத்தியில் இரண்டாம் பெரிய சந்தை, குவஹாத்தி இரண்டாகப்பிரிந்து இயங்குகிறது. வாரத்தில் முதல் மூன்று நாட்கள் பான்பஜார் (paanbazar) இயங்கினால், அடுத்த 4 நாட்கள் மாலிகாவுன் இயங்கும். இது கடந்து செல்ல இனிய காமாக்கியா தேவி குடியிருக்கும் நிலாச்சல் மலைத்தொடர்கள், பார்க்கவே பசுமையாக இருக்கும். அதன் உச்சியில் தான் காமாக்கியா தேவி கோவில் இருக்கிறது, அதனைத்தாண்டி மேலே செல்ல புவனேஷ்வரி கோவில் இருக்கிறது, அங்கிருந்து பார்த்தால் குவஹாத்தி முழுதும் அருமையாகப் பார்வைக்குக்கிடைக்கும், மறுபுறம் பிரம்மபுத்திரா நதி....ஓஹ்ஹ்ஹ் ஓவியம் வரைந்ததுபோல் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும், பார்க்க பல நூறு கண்கள் வேண்டும்.

இந்த காமாக்கியா தேவி பற்றி ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது, இவள்தான் நரகாசுரனின் தாயார், ஆமாம் தீபாவளி வரக்காரணமான அதே நரகாசுரன் தான், இந்த நகரில் தீபாவளியைக்கொண்டாடுவது இல்லை. இந்த தேவி கோவில் இந்தியாவில் இருக்கும் 108 சக்திபீடங்களில் ஒன்று, இதன் தலபுராணம் மிக மிக சுவாரசியமானது, அதன் கதையை உங்களுடன் திங்களன்று பகிர்ந்துகொள்கிறேனே????
( திங்கள் சந்திப்போம்)...
உங்கள் ஸ்ரீஷிவ்.....:)
type="text/javascript">&cmt=0&postid=112266619177125080&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 28, 2005

என் இனிய அஸ்ஸாம்....பகுதி 1.


இனிய தோழமைகளுக்கு,
வணக்கம் வாழிய நலம், நீண்ட நாட்களுக்குப்பின் எதை எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்த நேரம், துளசி அம்மா,மரத்தடி யாஹூ குழுமத்தில் இருந்து எனக்கு கொடுத்த ஒரு யோசனையைவைத்து இந்த கட்டுரையை எழுதலாம் என்றே ஆரம்பிக்கிறேன்.

ஒரு இனிய 25 வருடங்களுக்கு முன் நம் தமிழகம் எப்படி இருந்து இருக்கும்? அதுதான் அஸ்ஸாம், இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில் இருக்கும் ஒரு அழகான மானிலம். 2001 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நான் இந்த அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்கு பி.ஹெச்டி எனும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப்பணி மேற்கொள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் (Indian Institute of Technology, Guwahati) வந்து சேர்ந்த பொழுது கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது, தமிழ் தவிர வேறு இந்திய மொழிகள் அறியாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்றூ முதல் முதல் என்னைச் சிந்திக்க வைத்த ஒரு பயணம்.

தமிழ் பேச ரொம்ப ஆசையாக இருக்கும், யாராச்சும் வழில தமிழ் பேசினா கூச்சப்படாம நீங்க தமிழா? அப்படினு கேட்ட நாட்கள், சாப்பாடு அப்படினு பார்த்தா உருளைக்கிழங்கும், ரொட்டியும், வேகாத அரிசி சாதமும் எங்களோட கல்லூரி விடுதியில், கஷ்ட ஜீவனம்தான், அப்படி ஒருமுறை ஊருக்குள்ள சாப்பாடு எங்கனா கிடைக்குமானு தேடினப்போ, கிடைச்ச 3 ஹோட்டல்கள் பால்டன் பஜாரில் இருக்கும் உட்லேண்ட்ஸ், கேரளா பவன் இரண்டு தென் இந்திய உணவு விடுதிகள் ( இன்னும் இருக்கு), மேலும் புகைவண்டி நிலையத்தினுள் ஒரு தென்னிந்திய உணவு விடுதி ( தோசை கிடைக்கும், இட்லி கிடைக்கும்) ஆகிய 3 உணவு விடுதிகள் இருந்தன. கிடைக்கறத வாரா வாரம் போய் சாப்பிடுவோம், தமிழ் பசங்க ஒரு 3 பேர் இருந்தோம் அப்போ...

அஸ்ஸாமின் சில முக்கிய இடங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதலில் குவஹாத்தி எனும் தலைநகரே (அஸ்ஸாம் தலை நகர் திஸ்பூர் என்று படித்திருப்பீர்கள், அந்த திஸ்பூர் குவஹாத்தியில் ஒரு பகுதி, சென்னையில் எப்படி கோட்டை இருக்கோ அதுமாதிரி இந்த திஸ்பூர்) 7 மானிலங்களின் சகோதரி என்று அழைக்கப்படுகிறது. ஓரளவு சுமாரான வசதிகள் கொண்டஒரு நகரம். இந்த நகரைச்சுற்றிப்பார்ப்போமேயானால், இந்த நகருக்கு நுழையும் முன்னரே நாம் கடந்து வருவது சராய்காட் என்னும் ஒரு 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம், இரும்பு கர்டர்களால் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முக்கிய ஒரே ஆண் நதி ஜீவநதியான பிரம்ம புத்திராவின் குறுக்கே கட்டப்பட்ட்து இது, இரு அடுக்குக்களைக்கொண்ட ஒரு அற்புதமான பாலம், மேலே பேருந்துகள், சிற்றுந்துகள் செல்லும், அதன் கீழே புகை வண்டி, அதன் கீழே படகு ஆற்றில், அற்புதமாக இருக்கும் அந்த ஆற்றைக்கடப்பது.

ஆற்றைக்கடந்து வந்ததும் நம்மை அஸ்ஸாமிற்குள் வரவேற்பது நிலாச்சல் மலைத்தொடர், அருமையாக இருக்கும் பார்க்க, அதன் மேல்தான் காமாக்கியா தேவி கோவில் எனும் ஓர் அற்புதமான சரித்திரப்புகழ், இதிகாசப்புகழ் வாய்ந்த கோவில், இது பற்றி வேறு ஒரு கட்டுரையில் சொல்கிறேன், இந்த காமாக்கியா தேவி கோவிலுக்கு மேல் புவனேஸ்வரி கோவில், அங்கு இருந்து பார்க்க, ஒரு புறம் அற்புதமான நகரத்தின் தோற்றம், மறுபுறம் அமைதியாக ஓடிக்கொண்டிர்ருக்கும் பிரம்மபுத்திரா நதி, அதில் ஓடிக்கொண்டிருக்கும் சிறிய மீன் பிடிப்படகுகள்....ஒஹ்ஹ் அப்படி ஒரு அற்புதமான காட்சி எங்குமே காணக்கிடைக்காது என்பது நிச்சயம், என் தோழி ஒருத்தி சொல்வாள், இயற்கை அழகு என்பது அஸ்ஸாமிற்கு இயற்கை தந்த கொடை என்று, உண்மைதான், வாழ்வில் அனைவருமே ஒருமுறை வந்து பார்த்துச்செல்ல வேண்டிய இடம்.

அங்கு செல்வதற்கு முன்பே, நுழைவு வாயிலில் ஜாலுக்பாரி (jalukbaari) என்று ஒரு சிறிய இடம், அங்கு இருந்து நான்கு வழிப்பாதை பிரிகிறது, ஒன்று விமான நிலையம் , குவஹாத்தி பல்கலைக்கழகம் நோக்கி செல்ல, மற்றது பாலாஜி மந்திர் என்று சொல்லப்படும் பெருமாள் கோவில் மற்றும் ஷில்லாங், சிரபுஞ்சி என்று சொல்லப்படும் உலகின் அதிக மழை பொழியும் ஊருக்குச் செல்லும் வழி, மற்ற ஒன்று ஊருக்குள் செல்லும் வழி, இன்னொன்று எங்கள் ஐஐடி க்கு செல்லும் வழி, அதே வழியில் மேற்கொண்டு சென்றால் ரங்கியா என்னும் ஊருக்கு சென்று அங்கு இருந்து இந்தியாவின் உட்பகுதிக்கு வரலாம், அருமையான ஒரு ஊர் இது. இந்த ஊரின் ஒரு அருமை என்ன என்றால், ஊரைச்சுற்றினாற்போல் ஆறு ஓடுவது ஒரு கண்கொள்ளாக் காட்சி... அப்படி ஒரு அமைதியான அருமையான நகரே குவஹாத்தி, பலர் கூறக்கேள்விப்படுவீர்கள் இங்கு தீவிரவாதம் அதிகம் என்று, என்னைப்பொருத்தவரை, அப்படி எதுவும் இங்கு தொல்லைகள் இல்லை என்றே சொல்வேன், 4 ஆண்டுகளாக இங்கு இருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.

இனி ஒவ்வொரு வழியாக இங்கு பார்க்கலாமா? முதல் வழி, ஜாலுக்பாரியிலிருந்து விமான நிலையம் செல்லும் வழியை எடுத்துக்கொள்வோம், அந்த பாதையில் நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது குவஹாத்திப்பல்கலைக்கழகம் , 57 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல பாடப்பிரிவுகள் உள்ளன, அதனைக்கடந்து செல்ல நாம் காண்பது லங்கேஷ்வர் கோவில், அது தாண்டிச் செல்ல நாம் அடைவது LGB Airport (Lokamanya Gopinath Bordoloi) பண்ணாட்டு விமான நிலையம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை ஆயினும், பரவாயில்லை எனுமளவு இருக்கிறது. சரி , இந்த பக்கம் வருவோம், பாலாஜி மந்திர் என்று இங்கு இருக்கும் மக்களால் அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழி, அதன் ஆரம்பத்திலேயே அழகான ஒரு பூங்கா, செயற்கை குளம் ஒன்று சில பல சிறு படகுகளுடன் உங்களை வரவேற்கும், பல காதலர்களையும் பார்க்கலாம் அங்கு, தாண்டிச்செல்ல, truckker எனும் சிறு ஜீப் போன்ற வாகனத்தில் 5 ரூபாய்கள் கொடுத்தால் பெருமாள் கோவிலை 5 நிமிடத்தில் அடையலாம், அற்புதமாக ஒரு தலம், காஞ்சி மடத்தினரால் நிர்வகிக்கப்படும் இது தமிழர்களுக்கு ஒரு சந்திப்பு மையம், இதன் தலைவராக இந்த மானிலத்தின் முன்னாள் உயர் காவல் அதிகாரி (Ex DGP) திரு.சுப்பிரமணியம் அவர்கள் அன்போடு உங்களை வரவேற்றுப்பேசுவார், அந்த கோவிலில் மாலை 5 மணிக்கு கிடைக்கும் பிரசாதமும், லட்டு மற்றும் நெய் முறுக்கும் குவஹாத்தி முழுதும் பிரசித்தி பெற்றது.
வந்து சேர்ந்தபோது என்னை வரவேற்றது இங்கு இருந்த வெப்பமும், சுற்றுப்புற தட்பவெப்பத்தின் ஈரப்பதம் அதிகமாக இருந்தது சட்டையைக்கழற்ற வைத்தது. வெற்றுடம்புடன் சுத்தியது இன்றும் ஈரம்மாகவே நினைவிற்கு வருகிறது, ஏறத்தாழ 4 வருடங்களுக்குப்பின் இந்த வருடம் அதே அளவிற்கு ஈரப்பதம், வேர்த்துக்கொட்டும், சட்டை போட முடியாது.(தொடர்வேன் நாளை...)
type="text/javascript">&cmt=10&postid=112258340452178929&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, July 22, 2005

இதயம் வலிக்குதடி.....:(

இரக்கமின்றி உன் வார்த்தைகள்
இடி போல இறங்க,இமயமாய்
இருந்தவன் இருண்ட வீடாய் ஆனேன் :(
இறந்து விடு என்றே சொல்லி இருக்கலாமடி நீ...
இதயம் இறந்து இழி பிறப்பாய்
இன்னும் இந்த உலகில் இருந்துகொண்டுதானே இருக்கிறேன்???? :(

இரும்பாய் இருந்தவனை இளக வைத்து !

இன்று “யாரோ” நீ எனக்கேட்டு மீண்டும்

இரும்பாக்கினாயடி!..வேண்டாம் வேண்டாம்

என நீ விலகி நின்று முட்கள் தந்தாலும் !..

என் பூவைக்கு பூவை மட்டுமே கொடுக்கும்

இந்த இதயம்!..”உன் நலத்தில் தானடி

என் சுய நலம

அட நீ இன்றும் என் விழிகளுக்குள்! நான் கண்

மூடினால் என் கண்மணீயை யார் பார்ப்பது?

அதற்காகவேனும் நான் வாழ வேண்டும்!...

உன் நினைப்போடு!..நீ நீங்க நீங்க

நீண்டு போகும் உன் நிழலோடு!..
type="text/javascript">&cmt=5&postid=112210385995400867&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, July 14, 2005

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே....

தமிழுக்கு மீண்டும் ஒரு தலை நிமிர்வு,
2004 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன, அதில் 3 தேசிய விருதுகள், சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளன...சிறந்த பின்னனிப்பாடகி விருதுசித்ரா (ஆட்டோகிராஃப்), சிறந்த பாடலாசிரியர் விருது- பா.விஜய் (ஆட்டோகிராஃப்) ஒவ்வொரு பூக்களுமே....பாடலுக்காக, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது....
தொப்பிகள் தாழ்கின்றன(hats off) பா.விஜய் மற்றும் சேரன், சித்ரா....வாழ்க பல்லாண்டு...ஒரு கூடுதல் விஷயம்...இந்த ஆண்டு தினகரந்மெடிமிக்ஸ் விருது கூட கவிஞர்.பா.விஜய்க்கு இந்த பாடலுக்காக கிடைத்துள்ளது ஒரு பெருமைக்குறிய விஷயம்...மேலும் ஒரு முக்கியமான தகவல், இந்த பாடல் ...மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினால் அதன் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது மிக சிறப்பான ஒரு தகவல்...ஆட்டோகிராப் படத்திற்கு, 2 விருதுகள் தினகரன் விருதுகளில் கிடைத்தது பெருமைக்குரிய விஷயமே..:)
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=112133401427658380&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, July 13, 2005

Food as Medicine

Food as Medicin

Food as Medicine

HEADACHE? EAT FISH!

Eat plenty of fish -- fish oil helps prevent headaches. So does ginger, which reduces inflammation and pain.



HAVE FEVER? EAT YOGHURT!

Eat lots of yoghurt before pollen season. Also-eat honey from your area (local region) daily.





TO PREVENT STROKE DRINK TEA!

Prevent buildup of fatty deposits on artery walls with regular doses of tea. (actually, tea suppresses my appetite and keeps the pounds from invading....Green tea is great for our immune system)!





INSOMNIA (CAN'T SLEEP?) HONEY!

Use honey as a tranquilizer and sedative.



ASTHMA? EAT ONIONS!!!

Eating onions helps ease constriction of bronchial tubes.



ARTHRITIS? EAT FISH, TOO!!

Salmon, tuna, mackerel and sardines actually prevent arthritis. (fish has omega oils, good for our immune system)





UPSET STOMACH? BANANAS - GINGER!!!!!

Bananas will settle an upset stomach. Ginger will cure morning sickness and nausea.



BLADDER INFECTION? DRINK CRANBERRY JUICE!!!!

High-acid cranberry juice controls harmful bacteria.



BONE PROBLEMS? EAT PINEAPPLE!!!

Bone fractures and osteoporosis can be prevented by the manganese in pineapple.



PREMENSTRUAL SYNDROME? EAT CORNFLAKES!!!!

Women can ward off the effects of PMS with cornflakes, which help reduce depression, anxiety and fatigue.



MEMORY PROBLEMS? EAT OYSTERS!

Oysters help improve your mental functioning by supplying much-needed zinc.



COLDS? EAT GARLIC!

Clear up that stuffy head with garlic. (remember, garlic lowers cholesterol, too.)



COUGHING? USE RED PEPPERS!!



A substance similar to that found in the cough syrups is found in hot red pepper. Use red (cayenne) pepper with caution-it can irritate your tummy.



BREAST CANCER? EAT Wheat, bran and cabbage

Helps to maintain estrogen at healthy levels.



LUNG CANCER? EAT DARK GREEN AND ORANGE AND VEGGIES!!!

A good antidote is beta carotene, a form of Vitamin A found in dark green and orange vegetables.



ULCERS? EAT CABBAGE ALSO!!!

Cabbage contains chemicals that help heal both gastric and duodenal ulcers.





DIARRHEA? EAT APPLES!



Grate an apple with its skin, let it turn brown and eat it to cure this condition. (Bananas are good for this ailment)



CLOGGED ARTERIES? EAT AVOCADO!

Mono unsaturated fat in avocados lowers cholesterol.



HIGH BLOOD PRESSURE? EAT CELERY AND OLIVE OIL!!!

Olive oil has been shown to lower blood pressure. Celery contains a chemical that lowers pressure too.



BLOOD SUGAR IMBALANCE? EAT BROCCOLI AND PEANUTS!!!

The chromium in broccoli and peanuts helps regulate insulin and blood sugar.



Kiwi: Tiny but mighty. This is a good source of potassium, magnesium, Vitamin E & fiber. It's Vitamin C content is twice that of an orange.



Apple: An apple a day keeps the doctor away? Although an apple has a low Vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of Vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.



Strawberry: Protective fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits & protects the body from cancer causing, blood vessels clogging free radicals. (Actually, any berry is good for you..they're high in anti-oxidants and they actually keep us young.........blueberries are the best and very versatile in the health field........they get rid of all the free-radicals that invade our bodies)



Orange: Sweetest medicine. Taking 2 - 4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessen the risk of colon cancer.



Watermelon: Coolest Thirst Quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients found in watermelon are Vitamin C & Potassium. (watermelon also has natural substances [natural SPF sources] that keep our skin healthy, protecting our skin from those darn uv rays)



Guava & Papaya: Top awards for Vitamin C. They are the clear winners for their high Vitamin C content. Guava is also rich in fiber which helps prevent constipation.



Papaya is rich in carotene, this is good for your eyes. (also good for gas and indigestion)



Tomatoes are very good as a preventative measure for men, keeps those prostrate problems from invading their bodies.
type="text/javascript">&cmt=0&postid=112125534522708939&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 10, 2005

Thiruvasagam in Oratorio by Ilaiyaraaja - an experience...

திருவாசகம்...இளையராஜாவின் இசையில்....ஒரு இனிய அனுபவம்....

இனிய தோழமைக்கு வணக்கம்,வாழிய நலம், இந்த கட்டுரை, ஒரு பாமரன், எப்படி
இறைவனை அடைய எளிய முறையில் வழி காண்பித்து இருக்கிறான் என்பது பற்றியது...
என்னை,மிகவும் பாதித்த சில , மன்னிக்கவும் , மிக சில காவியங்களுள் இதுவும் ஒன்று என்றே
சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஒரு சிம்பொனி இசை, அதுவும் தமிழில்
என் ஆயுள் காலத்தில் வந்து அதனை நான் கேட்கும் வாய்ப்பு பெற்றமைக்கு நான் மிகவும்
பாக்கியம் செய்தவனாகவே நினைக்கின்றேன்...

ஒவ்வொரு பாடலுமே ஒவ்வொரு சுவை, குறிப்பாக, பொல்லாவினையேன்....மிக்க அருமையான ஒரு பாடல்,
குறிப்பாக, 15.03 நொடியில் ஆரம்பமாகும் மாசற்ற சோதி வரிகள் , கண்களில் கண்ணீரை வரவழைப்பது திண்ணம்.
கேட்டுவிட்டு அழாதவர்கள் மிகக்குறைவு....ஒரு முறை கேட்டால் இந்த சுவை கிடைக்காது என்றே எண்ணுகிறேன்,
ஒரு 5 முறை கேட்பின், அதன்பின் ஒவ்வொரு முறையும் அந்த வரிகளில் உங்கள் கண்ணீர் உங்கள் கன்னத்தினை நனைப்பது
திண்ணமே....

உம்பார்க்கரசே..அது ஒரு வேறு விதமான அறீமுகம், புற்றில் வாழ் அரவம் அஞ்சேன்...ஒரு வினோதமான அனுபவம்,
சிம்பொனியின் பிரம்மாண்டம் அதில் காணலாம்...பூவிரு கண்ணும் , புரந்தரனும்...இது ஒரு அனுபவம்...பூவார் சென்னி மேனியன்....அது ஒரு
வேறு விதமான உற்சாகம்....சமயம் கிடைப்பின் தயய் கூர்ந்து அனைவரும் கேளுங்களேன்...

இளையராஜாவின் சிம்பொனி உங்களை கண்டிப்பாக ஆட்கொள்ளப்போவது திண்ணமே....

என்றென்றும் பிரியமுடன்,
உங்கள்,
ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=0&postid=112098040269819764&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, July 02, 2005

அசோக மித்திரனின் "மண வாழ்க்கை"

எதேச்சையாக இன்று காலை , பழைய புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது 16-9-2002 தேதியிட்ட குமுதம் கன்ணில் பட, சற்றே கண்ணை ஓட்டினேன், அசோகமித்திரனின் ஒரு சிறுகதை படிக்க நேர்ந்தது, மண வாழ்க்கை என்று பெயரிட்ட கதை அது, அப்படியே மனதில் நின்றுவிட்டது.

கதை என்னவோ ரொம்ப சாதாரணக்கதைதான், ஆயினும், அதை எடுத்துச்சென்ற விதம், கதைப்படி தன் மகளுக்கு 15 வயதில் திருமணம் முடித்துக்கொடுக்கும் தந்தை, கணவன் ஒரு ராணுவ வீரன், ராணுவத்தில் இருக்கும்போது மனைவிக்கு குழந்தை பிறக்கிறது, தாய் வீட்டிலே வளர்கிறது, பணியிலிருந்து ஒய்வு பெற்று திரும்பும் கணவனிடம் குழந்தை ஒட்டமாட்டேனென்கிறது, முரட்டுத்தனமாக எடுத்து அணைக்கும் கணவனிடமிருந்து திமிரும் குழந்தையை ஓங்கி ஒரு அறை, அப்படியே மூர்ச்சையாகி விழுந்து இறந்துவிடுகிறது....அதன் பின் ஏற்படும் விளைவுகளையும அற்புதமாக எழுதி இருக்கிறார்....அந்த நடை.....அப்ப்ப்ப்பா...அற்புதம்....சில வரிகளை உங்கள் பார்வைக்குக் கொடுக்கிறேன்...

'ஒரு வார காலம் வீட்டில் மரண அமைதி எங்கே எதைப்பார்த்தாலும் குழந்தை நினைவு வந்தது. ஒரு சிறிய நாற்காலியைப் படுக்கப்போட்டு அதைத்தள்ளு வண்டியாக வீடெங்கும் தள்ளிப்போகும் அந்த நாற்காலியை நாங்கள் புரட்டி நிறுத்தவில்லை. குழந்தை அடிவாங்கி கீழே கிடந்த இடத்தைப் பெருக்கவில்லை. அறையைக் கூட்டினால் அந்த இடத்தை அப்படியே விட்டு விடுவோம். அப்பாவே பலமுறை அங்கு நின்று குலுங்கி குலுங்கி அழுதார்........'

மனதை மிகவும் பாதித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று....


ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=0&postid=112037217238087444&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது