இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, April 30, 2005

கடந்து வந்த காவியம்-பகுதி 5

கடந்து வந்த காவியம்-பகுதி 5

இறுதியாக சம்மதித்தாய் நீயே, எனை
இன்னொரு முறை ஈன்றெடுத்த தாயே,,,,!!!

நேரில் உன்னைக்கான நகரம்
நகை அணிகலன் பூண்டது...

நேரில் உனைக்கானா என் நெஞ்சும்
நிதம் உன் மின் அஞ்சல் தேடி கெஞ்சும்!!!

நாட்களையே நிதம் குறைத்து எண்ணி , தினம்
தீ அமர்ந்து தவம் செய்தாள் என் கன்னி!!!!


குமரி முனையில் மட்டுமல்ல அன்னை இதை
நினைக்கயில் என் கண்ணில் தென்பெண்ணை......:(
type="text/javascript">&cmt=0&postid=111498399656652880&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, April 12, 2005

கடந்து வந்த காவியம்...பகுதி 4

மீண்டும்அந்த கணினி முன்பமர்ந்தேன்
இந்த மீள முடியா காதல் வலையை தொடர்ந்தேன்!

இயல்பாக இல்லையடி நீயும், என்
இதயத்தின் கேள்விதன்னை நானும்
மறுதினமே மடலில் உன்னை கேட்டேன்,
என் மனதின் பாரம் மடைதிறந்து போட்டேன்.

இல்லை என்று சொன்னாயே நீ பெண்ணே,
இளங்காட்டைவிட்டு நாட்டைச்சேர்ந்த கண்ணே!!!
இறுதியாகப் பகர்ந்தாயடி உண்மை, இங்கு
இயல்பாக இல்லையே உன் மென்மை...(:()
( இரவுகள் பலவற்றில் கிளறினேன் உன்னை
இறுதியாக நீ உளறினாய் அந்த உண்மை)

பூ பூ இவ்வளவுதானா என்றேன்!
உன் பூர்வ பயம் அத்தனையும் கொன்றேன்.

நட்பினையே தொடர்வோம் என்று சொன்னாய்,
இந்த நவீன காலத்துப் பெண்ணாய்.

இரு மணங்கள் இணைந்து வாழ வேண்டி,
திருமணத்தைக் கேட்டேனே இந்த ஆண்டி ;)
இல்லைடா எனக்கு இதில் விருப்பம்,
என்று நீ சொன்னதில்தான் அந்த திருப்பம்...

இறுதி வரை முயன்று பார்ப்போம் என்றே
அந்த வேதாளத்தின் விக்ரமனாய் நின்றேன்....
type="text/javascript">&cmt=0&postid=111334127923879741&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கடந்து வந்த காவியம்...பகுதி 3

கார்பனில் கடைந்தெடுத்த பதுமை
அவள் காலத்தால் கணிக்க ஒன்னாப் புதுமை
காகிதத்தில் வரையமாட்டா ஓவியம்
அவள் காலமகள் எழுதிக்காட்டா காவியம்.

கணினியிலே கண்டெடுத்த கன்னி
எந்த காலத்திலும் என் தங்கைக்கு அண்ணி ;)

முதன் முதலாய் பார்க்கிறேன் உன் முகம்
அதன் முன்பிறுந்தே அறிவேனே உன் அகம்.

கடலோரம் கால் புதைய நடந்தோம்
அந்த காற்றினிலே ஆடிபோல் மிதந்தோம்...

கன்னித்தமிழ் பேசினாள் என் தத்தை
அவள்தானே என் தங்கை மகளின் அத்தை? :)
கதைகள் நூறு இருந்தன நாம் பேச
அங்கு காற்று கூட சப்தமின்றி வீச,
காலத்தையும் நிறுத்தியதெங்கள் பேச்சு
அந்தக் காற்று கூட விட்டதோ பெருமூச்சு!!.

உணவகத்தில் ஏதோ ஒன்றை உண்டோம்
ஆனால் ஒருவ்ர் கண்ணில் ஒருவர் முக்ம் கண்டோம்!!
காதலாக கனியும் என்றா கண்டோம்?
எனினும் அதை காலச்சுவட்டில் பதிவெடுத்துக்கொண்டோம்...
கற்பூர புத்தியடி உன் மூளை
அதில் கட்டுண்டேனே இந்த காளை!!!

இருவருமே இல்லம் திரும்பிச்சென்றோம்,
அங்கு இயல்பு தந்து இதயம் வாங்கி சென்றோம்...

உடைந்திருந்த சிற்பமடி நானே
அதை உளிகொண்டு திருத்த வந்தாய் நீயே....
கன்னி உன்னைக் கண்ணில் காட்டித்தந்த அந்த
கணிப்பொறிக்கு கோடி நமஸ்காரம்....
type="text/javascript">&cmt=0&postid=111334059552914995&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, April 11, 2005

கடந்து வந்த காவியம்...பகுதி 2

கடந்து வந்த காவியம்-பகுதி 2

நாம் எங்கு சந்தித்தோம்?
எப்படி சிந்தித்தோம்??

இதய வலிக்கு அடித்தளம் போடுவது
இணைய தளம் ....சரிதானே?

நாம் சந்தித்ததும் சிந்தித்ததும்
அங்குதானே? என்றும் போல
நீயும் உலவ வந்திருப்பாய்
நானும் அதேபோல...

நினைத்திருப்போமா?
நான்கு வருடங்களுக்கு முன்?
நீயும் நானும் இணையத்தில்
இணைவோம் என்று?

எத்தனை சண்டைகள்?
சாடல்கள்? இருப்பினும்
இறக்கவில்லையே நம்
உறவு?? வியக்கிறேனடி
நானே எழுதி இருக்கிறேன்
உறவு என்பது பிரிவுக்காகத்தான் என்று....

சந்தித்த வேளை....நீ
சாதாரணமாகவே தோன்றினாய்....
சாத்திரங்கள் பேசினோம்...
சரித்திரமும் பேசினோம்...

கண்மூடித்திறக்கும் முன்னே
காலங்களும் கடந்தன...
ஒத்த மனம், ஒருமிக்க எடுத்தது
ஒரு முடிவு......மின்னஞ்சலிலும்
தொலைபேசியிலுமே தெரிந்த நீ

நேரில் தெரிந்தது எப்போது???
அயல் மாநிலத்தில்
உயர்கல்விக்காக வந்தவன்....
தாயகம் திரும்ப் தாயை தேடும்
சேயாய் காத்திருந்தேன்....

தாயகம் வந்த நான்
தாயை பார்த்த மறு தினம்..
நோயை நோக்கும் மருத்துவர் போல் ;)
புதுவை நோக்கி என் மிதவையை திருப்பினேன்.....

என் இதயம் இடம்மாறி
இடம் பெற்றிருந்தது அங்குதான்.....
type="text/javascript">&cmt=0&postid=111322713953557330&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கடந்து வந்த காவியம்...பகுதி 1

கடந்து வந்த காவியம்-பகுதி 1

கடந்து வந்த காவியம்
நான் கண்டெடுத்த ஓவியம்...
காட்டைச் சேர்ந்தவள் அவள்
இளங்காட்டைச் சேர்ந்தவள்....

திருச்சிராப்பள்ளிக்கும்
திருக்காட்டுப்பள்ளிக்கும்
இடைப்பட்ட ஒரு காடு
இந்த இளங்காடு.....

திருமகளை பெயரில் பூண்ட
என் தேவதை...அவள்
தினமும் என் கனவில் வரும்
பூ வதை....

திருப்பாற்கடலை கடைந்தால்
தேவாமிர்தம் வருமென்று
குழவி பருவத்தில் என் வீட்டு
கிழவி சொல்லக் கேட்டிருக்கிறேன்...

என் தேவி உன் இதயம் குடைந்தால்
அதில் என் உடைந்த இதயத்தின்
குடைந்த பாகங்கள் இருக்கும்.

உன்னை எங்கு சந்தித்தேன்?
எப்படி சிந்தித்தேன்? ...மன்னிக்க !
நாம் எங்கு சந்தித்தோம்?
எப்படி சிந்தித்தோம்????
type="text/javascript">&cmt=0&postid=111320944118992452&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது