இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, April 11, 2005

கடந்து வந்த காவியம்...பகுதி 1

கடந்து வந்த காவியம்-பகுதி 1

கடந்து வந்த காவியம்
நான் கண்டெடுத்த ஓவியம்...
காட்டைச் சேர்ந்தவள் அவள்
இளங்காட்டைச் சேர்ந்தவள்....

திருச்சிராப்பள்ளிக்கும்
திருக்காட்டுப்பள்ளிக்கும்
இடைப்பட்ட ஒரு காடு
இந்த இளங்காடு.....

திருமகளை பெயரில் பூண்ட
என் தேவதை...அவள்
தினமும் என் கனவில் வரும்
பூ வதை....

திருப்பாற்கடலை கடைந்தால்
தேவாமிர்தம் வருமென்று
குழவி பருவத்தில் என் வீட்டு
கிழவி சொல்லக் கேட்டிருக்கிறேன்...

என் தேவி உன் இதயம் குடைந்தால்
அதில் என் உடைந்த இதயத்தின்
குடைந்த பாகங்கள் இருக்கும்.

உன்னை எங்கு சந்தித்தேன்?
எப்படி சிந்தித்தேன்? ...மன்னிக்க !
நாம் எங்கு சந்தித்தோம்?
எப்படி சிந்தித்தோம்????
type="text/javascript">&cmt=0&postid=111320944118992452&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது