இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, November 30, 2005

ஜி ஆர் இ தேர்வு முறையில் மாற்றம்

ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம்

மும்பை: வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் எழுத வேண்டிய ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் ஜி.ஆர்.இ., மற்றும் டோபல் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும். இதில், ஜி.ஆர்.இ., தேர்வு முறையில் அடுத்த அக்டோபர் முதல் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 29 முறை ஜி.ஆர்.இ., தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாற்றம் ஏதும் இல்லை. தேர்வு எழுதும் நேரம் இரண்டரை மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. பெரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். 29 முறை ஜி.ஆர்.இ., தேர்வு நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் கேள்வித்தாள் மாறுபடும்.

ஜி.ஆர்.இ., தேர்வு சொல்லாட்சி திறன் அறியும் முறை (வெர்பல் ரீசனிங்), மதிப்பறியும் திறன் அறியும் முறை (குவான்டிடேட்டிவ் ரீசனிங்), ஆய்வு திறன் அறியும் முறை (அனலிடிக்கல் ரீசனிங்) என மூன்று பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், வெர்பல் ரீசனிங் பிரிவில் தற்போது 30 நிமிடம் தரப்படுகிறது. வரும் காலத்தில் இரண்டு 40 நிமிட பிரிவாக மாற்றப்படுகிறது. குவான்டிடேட்டிவ் ரீசனிங் பிரிவில் தற்போது 45 நிமிடம் தரப்படுகிறது. வரும் காலத்தில் இரண்டு 40 நிமிட பிரிவாக மாற்றப்படுகிறது. கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்படும். அனலிடிக்கல் ரீசனிங் பிரிவிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பல்வேறு விஷயங்களை நினைவில் கொண்டு இந்த தேர்வை சந்திக்கும் நிலை தற்போது உள்ளது. இதை தவிர்த்து உண்மையான ஆய்வு திறனை அறியும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
நன்றி: தினமலர்- 01-12-05
type="text/javascript">&cmt=0&postid=113342311810648805&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, November 24, 2005

ஐ.ஐ.டி.,க்களில் சேர புதிய விதிமுறைகள்

ஐ.ஐ.டி.,க்களில் சேர புதிய விதிமுறைகள் : வரும் கல்வி ஆண்டு முதல் அமலாகிறது


புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர வரும் கல்வி ஆண்டு முதல் புதிய விதிகளை உள்ளடக்கிய "கூட்டு நுழைவுத் தேர்வு முறை' அமல் படுத்தப்படுகிறது. கோல்கட்டாவில் நடந்த ஐ.ஐ.டி., இயக்குனர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., மற்றும் எம்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் கூட்டு நுழைவுத் தேர்வில் பெறும் "ரேங்க்' அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த தேர்வில் பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே கலந்து கொள்ளலாம். இதற்காக தனியாக மதிப்பெண் தகுதியும் கிடையாது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி "புதிய கூட்டு நுழைவுத் தேர்வு' நடத்தப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறைக்கு கோரக்பூர் ஐ.ஐ.டி., முன்மாதிரியாக இருக்கும் என்று அதன் இயக்குனர் சுஷிர் துபே தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
கூட்டு நுழைவுத் தேர்வில் புதிய விதிமுறைகள் புகுத்துவது குறித்த முடிவுக்கு கடந்த செப்., 17ல் கோல்கட்டாவில் கூடிய "கூட்டு சேர்க்கை வாரியம் (ஜாய்ன்ட் அட்மிசன் போர்டு)' ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து ஐ.ஐ.டி., இயக்குனர்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் தான்பெட் ஐ.எஸ்.எம்., கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த புதிய விதிமுறைகளின்படி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவன் பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் கோச்சிங் சென்டர்களை நம்பி இருக்கும் நிலைமை மாறி பள்ளிப் பாடங்களில் அதிக நேரம் செலவிடும் நிலைமை உருவாகும். பள்ளி முதல்வர்கள் மற்றும் பெரும்பாலான பெற்றோர்கள் இந்த நடைமுறையை வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் தரமான மனித சக்தியின் தேவை அதிக அளவில் உள்ளது. ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் திறமையானவர்களை உருவாக்குவதன் மூலமாக இதை பூர்த்தி செய்ய முடியும். இதற்கு மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதலாவதாக, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இரண்டாவது, புதிய ஐ.ஐ.டி.,க்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, சில குறிப்பிட்ட ஐ.ஐ.டி.,க்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
ஐ.ஐ.டி.,க்கள் முழுவதும் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் நிறுவனம். எனவே, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்த கொள்கையை நேரத்திற்கு தகுந்தபடி அரசே முடிவு செய்யும்.
இவ்வாறு துபே தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் இந்தரேசன் கூறும் போது, "ஐ.ஐ.டி., சட்டப்படி ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும் தன்னாட்சி பெற்றது. மாணவர் சேர்க்கையை ஐ.ஐ.டி.,க்கள் சிறப்பான முறையில் கையாளுகின்றன. 60 பேருக்கு ஒருவர் என்ற அளவில் இந்தியாவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 10 பேருக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் மூலமாக இந்திய ஐ.ஐ.டி.,க்களின் தரத்தை அறிந்து கொள்ளலாம்' என்றார்.
நன்றி : தினமலர்-25-11-05
type="text/javascript">&cmt=2&postid=113290167441524945&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, November 17, 2005

வலையுலகில் ஒரு அகண்ட அலைவரிசை வானொலி...

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை,
என்னென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா???


நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது? இந்த
மலருக்கு என்மேல் என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது???

அப்பப்பா, என்ன அருமையான பாடல்கள், கேட்டால் கேட்டுக்கொண்டே இருக்கலாமே? பழைய பாடல்கள், புதிய பாடல்கள், நகைச்சுவை, மென்பொருளாளர்களுக்கும் என்போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம் ஷியாம் ரேடியோ அவ்வளவு அற்புதமான துல்லியமான ஒலிபரப்பு, அகண்ட அலைவரிசையில் ஒரு அற்புதம் ஷியாம் ரேடியோ. சென்னையில் இருந்து நேரடியாக ஒலிபரப்பாகின்றது. நிறைய பேருக்குத்தெரிந்திருந்தாலும் இதற்காக ஒரு பதிப்பு போடலாம் என்றே நினைத்ததன் நோக்கம், தெரியாத ஒரு சிலரும் தெரிந்துகொள்ளட்டுமே என்ற ஒரு எண்ணம்தான். இலவசமாகவும் கேட்கலாம், கட்டண வானொலியாக வெறும் முன்னூறே ரூபாய்கள் ஓராண்டுக்கட்டணமாகச்செலுத்தி சிறப்புப்பகுதிகளையும் கேட்டு ரசிக்கலாம்.டாக்டர்.ஷியாம் என்பவரால் சென்னையிலிருந்து இயங்கும் இந்த தமிழகத்தின் முதல் தமிழ் அகண்ட அலைவரிசை வானொலி சமீபமாக டெக்கான் ஹெரால்டு தினசரி நடத்திய உலகளாவிய வானொலிகளின் வாக்கெடுப்பில் ஐந்தாம் இடம் பெற்று முன்னிலை வகிப்பது நம் அனைவருக்கும் பெருமைக்குறியதே.

மேலும் இதில் நேயர் விருப்பமும் உண்டு, மின்னஞ்சலில் நம் விருப்பப்பாடல்களைத்தெரிவித்தால் நமக்காக ஒலிபரப்புகின்றனர். மேலும் தினசரி பிறந்தநாள் வாழ்த்துப்பகுதி உண்டு, காலை 7.30மணி அளவில் (இந்திய நேரம்) ஒலிபரப்பாகிறது, உங்கள் பிறந்தநாள் உங்கள் மனதிற்குப்பிடித்தவரின் பிறந்தநாள் போன்றவற்றினைத்தெரிவித்தால் அதனை வானொலியில் உலகளாவத்தெரிவித்து நமக்குப்பிடித்தப்பாடலையும் ஒலிபரப்புகின்றனர். அருமையான ஒரு பொழுதுபோக்கு வலைத்தளம். மேலும் இதன் சிறப்பு என்று கூறினால், இதில் பாடல்கேட்க உங்களிடம் எந்த ஒரு பிளேயரும் தேவை இல்லை, வின் ஆம்ப், விண்டோஸ் மீடியா பிளேயர், ரியல் மீடியா பிளேயர் என்று எந்த ஒரு பிளேயரும் இல்லாமலே வலைத்தள முகவரியை இட்டுஅப்படியே கேட்கலாம். நல்ல ஒரு வசதி அல்லவா? புதுப்பாடல்களுக்கென்று ஒரு சமயமும் பழையபாடல்களுக்கென்று தனிநேரமும் உண்டு, மேலும் தங்கள் விருப்பத்தினை தாங்கள் நேரத்தில் கேட்க மறந்துவிட்டால்கூட ஒரு நாளிலேயே 2,3 முறை ஒலிபரப்புவதால் எப்படியும் ஒருமுறையேனும் கேட்டுவிடலாம்... இன்னும் இது பற்றி அடுத்த பதிவில் எழுதுகின்றேன்..
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=1&postid=113250113325738559&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, November 16, 2005

ஏதோ ஒரு நதியில்....

என்னவோ இன்று சிறிது மனம் கனத்து இருந்தது, ஜெயமோகனின் "காடு" நாவலில் வரும் ஸ்ரீதரன் போல எங்கேயோ ஒரு நதி தீரத்தில் அமர்ந்து வாழ்வினைக்கழித்திட மாட்டோமா என்ற ஒரு ஏக்கம். ஹ்ம்ம் அவனுக்குக்கொடுத்து வைத்திருந்தது , எனக்கு வாய்க்கவில்லையே என்ற சிறு வருத்தமும் மேலிட, ஷியாம் ரேடியோ வினை திருப்பினேன் என் கணினியில். இந்தப்பாடல் சரியாக மனம் அறிந்ததுபோல வந்தது...கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை....அடுத்து வந்த ஒரு அருமையான பாடல் இதயத்தினைக்கிழித்து உள்ளேயே உட்கார்ந்ததுபோல் ஒரு உணர்வு, எனக்காகவேவா அல்லது எல்லா ஆண்மக்களுக்காகவுமா தெரியவில்லை, ஆனால் அந்தப்பாடல் என்னை மிகவும் பாதித்துவிட்டது, அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றே இந்த பதிவை இடுகின்றேன்..

படம் : ஆட்டோகிராஃப்
பாடல் : நினைவுகள் நெஞ்சில்....
இயக்கம் : சேரன்
நடிப்பு : சேரன்.

நினைவுகள் நெஞ்சில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களில் புதைந்ததினால்
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப்பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப்பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை...( நினைவுகள்)

ஆஆஆஆஆஆஆஆ....

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக்கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
எனை சுமந்துபோக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தைக்கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை ( நினைவுகள்...)

கனத்த இதயத்துடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=113216360684769712&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, November 11, 2005

சாம்பல் நிறத்தில் ஒரு சேலை


சாம்பல் நிறத்தில் ஒரு சேலை



"பட்டு சேலை காற்றாட,
பருவமேனி கூத்தாட,
பட்டுக்கூந்தல் முடித்தவளே என்னை
பார்வை வலையில் அடைத்தவளே......"
திருமண வரவேற்பில் அவளை சத்தியமாக நான் அந்த சேலையில் எதிர்பார்க்கவில்லை. என்

நினைவுகள் பின்னோக்கிச்சுழலத்தொடங்கின. எத்தனை ஆண்டுகள், எத்தனை நாட்கள்?

அவளை அந்த சேலையில் பார்க்க ஏங்கி இருக்கின்றேன்?....சுத்தமாக

15வருடங்கள்...ஆனாலும் இன்றுபோல் என் கண்ணில் தெரிகின்றது அந்த சாம்பல் வண்ண தாவணி.

முதல் நாள் , என் பன்னிரண்டாம் வகுப்பில் , அந்த கீழ்வானச்சிவப்பில் பொல

பொலவென்று விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் தனிவகுப்பிற்கு (டியூஷன்)

சென்றுகொண்டிருந்தவன், அப்படியே ஒரு கணம் மலைத்து நின்றுவிட்டேன்,
"அதிகாலை இளம் வெயில் நேரம்,
அழகான இலையுதிர் காலம்,
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே,
தொலைந்தவன் நானே....."

பனி பொழியும் மார்கழியில் ஒரு மார்கழிப்பூவாக அவள் , அந்த சாம்பல் வண்ண

தாவணியில் வாசலில் நீர் தெளித்து கோலம்போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் நான் ஓட்டி வந்த ஈருருளியை நிறுத்திவிட்டேன். ஏதோ ஒரு குறு குறுப்பில் நிமிர்ந்து என்னைப்பார்த்தவள், மீண்டும் தலையைக்குனிந்துகொண்டு கோலத்தைத்தொடர்ந்தாள். எனக்குத்தான் ஈருருளி ஓடவே இல்லை, அந்த கோலத்தின் புள்ளிகளுக்கிடையில் சிக்கிய

கோடாக சிக்கிக்கொண்டது என் மனம். நகர மறுத்த ஈருருளியை மெதுவாகத்தள்ளியபடி தனிவகுப்பிற்கு சென்றமர்ந்தேன். தனிவகுப்பு முடித்து பள்ளிக்கு வந்தபோதும் அந்த நினைவாகவே இருந்தவன் மதிய உணவிற்குப்பின் வருகைப்பதிவேடு எடுத்துவர நேரமான காரணத்தினால் 1.55மணிக்கு வேகமாக தலைமை ஆசிரியரின் அறை நோக்கி வேகமாக

ஓடியவன், மின்சாரம் தாக்கியவன் போல நின்றேன், எதிரில் ஓரடிக்கும் குறைவான தொலைவில் அதே தேவதை. கண்கள் கலந்தது ஒரு சில நொடிகளே என்றாலும் காலத்திற்கும் , ஏன்? ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அந்த கண்களை நான் சந்தித்தேன்.

பின்பு பல நிகழ்ச்சிகளில் அவளைக்கண்டாலும் , அவளை முதன்முதல் பார்த்த அந்த

சாம்பல் நிற தாவணிதான் என் நினைவில் நிற்கும். பள்ளிப்படிப்பும் முடிந்தது. கல்லூரி

காலங்களும் கடந்தன. 10 வருடங்கள் விளையாட்டுபோல கடந்தது தெரியவே இல்லை, இதில்

ஆச்சரியம் என்னவென்றால் எத்தனையோ பெண்களை இடையில் கடந்திருப்பினும் யாருமே

மனதில் நிற்காதது ஒரு அதிசயமே. மீண்டும் அவளை சந்தித்தேன், ஒரு ஆசிரியனாக.

பொறுப்பு மிக்க பேராசிரியனாக. ஒரு நல்ல மாலை நேரம், கல்லூரியில் இருந்து திரும்பியவன்

தோழனைச்சந்திக்கச்செல்லும் வழியில் அவளைச்சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. பல

ஆண்டுகள் கடந்திருந்தாலும் அப்படியே இருந்தாள் அவள். விரைந்த என் இதயத்திற்கு

இணையாக விரையமுடியாத என் இயந்திரமயமாக்கப்பட்ட ஈருருளி ஓரம் கட்டி நிற்க,

அழைத்தேன் அவளை. பதறித்திரும்பியவளின் கண்களில் அதே மருட்சி, பள்ளியில்

முதன்முதல் பார்த்த அதே பார்வை. "எங்கே போய் வர?", "மின்சாரக்கட்டணம் கட்டிட்டு

வர்றேன்", "எப்படி இருக்க? " , "நல்லா இருக்கேன்", "என்ன பன்ற?" "வீட்டுல தான்

இருக்கேன்", "என்ன அந்த சாம்பல் வண்ண தாவணி இல்லையா?", "இந்த வயசுல தாவணி

போட்டுக்கிட்டு வெளிய வருவாங்களா? சரி நான் வரேன்".

அதன் பின் அவளை சந்தித்தது ஒரு கோவில் கொடையில், கருட சேவையில் பெருமாளை

சேவித்துப்பின் திரும்பியவன், அவள் வீட்டு வாசலில் மீண்டும் அயர்ந்தேன், அம்மன் அவள்

வீட்டு வாசலில் தான் வந்துவிட்டாளோ என எண்ணுமளவிற்கு ஜகஜ்ஜோதியாக

பச்சைப்பட்டுப்புடவையில் அவள். அப்பொழுதும் என் சாம்பல் நிற சேலையும்

தாவணியும்தான் என் கண்களில் நின்றன. அவளை சாம்பல் நிற சேலையில் காண

ஏங்கித்தவமிருந்தேன். காலம் என்னை தலைநகருக்கு நாடு கடத்த, மீண்டும் அவளை

சந்திக்கமுடியாதா என ஏங்கிக்காத்திருந்த வேளையில் வந்தது எங்கள் தோழன் திருமணம். 10

நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, அவளிடமும் தெரிவிக்கச்சொல்லிவிட்டு ஆவலாக

விரைந்தேன். காலத்தின் சதி, அவளின் சிற்றன்னைக்கு நான் தாயகம் வரும் தகவல் தெரிந்து

அவளை ஊரிலே இல்லாமல் இன்னொரு சிற்றன்னையின் ஊருக்கு நாடுகடத்த,

அவளைக்காணாமலே தலைநகர் திரும்பினேன் கண்களில் நீருடன். தொலைபேசியில் கரைந்த

அவள் , எனக்காக அந்த சாம்பல் வண்ண சேலையை துவைத்து சலவை செய்து எடுத்து

வைத்திருந்ததாகக்கூறினாள். ஹ்ம்ம் இப்பொழுதைக்கு பார்க்க கொடுப்பினை இல்லை என்று

எண்ணினேன். ஆனால் இப்படி ஒரு கடிதம் வரும் என எண்ணவில்லை, அவளின் மண

ஓலையைத்தாங்கி.

திருமணம் முடிந்தபின் வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் போக முடிந்தது, இருந்த தூரத்தில்

இருந்து கடிதம் கண்டு ஊர் வர இத்தனை தாமதமானது, வீடு சென்று அந்த வரவேற்பினை

காணச்சென்றபோதுதான் கண்ணில் பளீரென அரைந்தது அவள் கட்டியிருந்த அந்த சாம்பல்

வண்ணப் பட்டுசேலை.
type="text/javascript">&cmt=10&postid=113170138213732764&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது