இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Tuesday, April 12, 2005

கடந்து வந்த காவியம்...பகுதி 4

மீண்டும்அந்த கணினி முன்பமர்ந்தேன்
இந்த மீள முடியா காதல் வலையை தொடர்ந்தேன்!

இயல்பாக இல்லையடி நீயும், என்
இதயத்தின் கேள்விதன்னை நானும்
மறுதினமே மடலில் உன்னை கேட்டேன்,
என் மனதின் பாரம் மடைதிறந்து போட்டேன்.

இல்லை என்று சொன்னாயே நீ பெண்ணே,
இளங்காட்டைவிட்டு நாட்டைச்சேர்ந்த கண்ணே!!!
இறுதியாகப் பகர்ந்தாயடி உண்மை, இங்கு
இயல்பாக இல்லையே உன் மென்மை...(:()
( இரவுகள் பலவற்றில் கிளறினேன் உன்னை
இறுதியாக நீ உளறினாய் அந்த உண்மை)

பூ பூ இவ்வளவுதானா என்றேன்!
உன் பூர்வ பயம் அத்தனையும் கொன்றேன்.

நட்பினையே தொடர்வோம் என்று சொன்னாய்,
இந்த நவீன காலத்துப் பெண்ணாய்.

இரு மணங்கள் இணைந்து வாழ வேண்டி,
திருமணத்தைக் கேட்டேனே இந்த ஆண்டி ;)
இல்லைடா எனக்கு இதில் விருப்பம்,
என்று நீ சொன்னதில்தான் அந்த திருப்பம்...

இறுதி வரை முயன்று பார்ப்போம் என்றே
அந்த வேதாளத்தின் விக்ரமனாய் நின்றேன்....
type="text/javascript">&cmt=0&postid=111334127923879741&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது