இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, August 05, 2006

செப்., 11ம் தேதி சூர்யா ஜோதிகா திருமணம்

செப்., 11ம் தேதி சூர்யா ஜோதிகா திருமணம்

சென்னை: திரையுலகில் நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட காதல் நட்சத்திரங்கள் சூர்யா, ஜோதிகாவின் திருமணம் அடுத்த மாதம் 11ம் தேதி சென்னையில் நடக்கிறது.

பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் சூர்யா. முன்னணி கதாநாயகனாக சிவகுமார் நீண்ட நாட்கள் நடித்து வந்ததைப் போலவே, இளம் கதாநாயகர்கள் வரிசையில் சூர்யாவும் முன்னணியில் இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் தயாரித்த "நேருக்கு நேர்' என்ற படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் மற்றொரு கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடித்து திரையுலகில் சிறந்த நடிகராக சூர்யா வலம் வருகிறார். அவருக்கு திருப்புமுனையாக ஏவி.எம்., தயாரித்த "பேரழகன்' படம் அமைந்தது. "நந்தா, பிதாமகன், மாயாவி, காக்க காக்க, கஜினி' என்று பல வெற்றிப் படங்களில் சூர்யா நடித்தார்.

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய "வாலி' படத்தின் மூலம் நடிகை ஜோதிகா அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே நடிப்பில் நல்ல பெயர் எடுத்த ஜோதிகாவும், சூர்யாவும் "பூவெல்லாம் கேட்டுப் பார்' என்ற படத்தில் முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். அப்படத்திற்கு பிறகு "உயிரிலே கலந்தது' என்ற படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். கோலிவுட் வட்டாரங்களில் அவர்கள் இருவரும் காதலர்களாக மாறி விட்டனர் என்ற கிசுகிசுவும் உலா வந்தது.

இருவரின் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. "பேரழகன்' படம் வெளியான பிறகு ஜோதிகாவும், சூர்யாவும் "நல்ல ஜோடி' என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தனர். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடித்த "காக்க காக்க' படமும் பெரும் வெற்றி பெற்றது. தற்போது "சில்லுனு ஒரு காதல்' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானாலும் அவர்கள் இருவரும் தங்கள் காதலை பகிரங்கப்படுத்தவில்லை. எனினும், நேற்று நடிகர் சிவகுமார் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் சூர்யா ஜோதிகா திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிவகுமார் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் அழைப்பிதழ் விவரம்: அடுத்தமாதம் 11ம் தேதி எங்களுடைய மூத்த மகன் சூர்யாவுக்கும், மும்பையைச் சேர்ந்த சந்தர்சதானா தம்பதியின் மகள் ஜோதிகாவுக்கும் திருமணம் நடத்திட முடிவு செய்துள்ளோம். அடுத்த நாள் 12ம் தேதி மாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இளம் தம்பதிக்கு உங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றும் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

திருமண அறிவிப்பினால் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க இருந்த ஜோதிகா அந்த படத்திலிருந்து விலகிக் கொண்டார். ஜோதிகாவுக்கு பதிலாக அப்படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். தற்போது ஜோதிகா "மொழி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் ஜோதிகா நடிப்பாரா அல்லது ஒதுங்கி விடுவாரா என்பதும் விரைவில் தெரியவரும்.
நன்றி : தினமலர்.காம்
type="text/javascript">&cmt=3&postid=115483436606024065&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger Sivabalan said...

என்னா சார்

ஜாலியான செய்தியோட வந்திருகிறீங்க...

நன்றி

Saturday, August 05, 2006 8:26:00 PM

 
Blogger Dr.Srishiv said...

வாங்க சிவபாலன், :)
ஜோ ன்னாலே ஜாலிதானே சிவபாலன்...:)

Saturday, August 05, 2006 8:31:00 PM

 
Blogger aaradhana said...

யாருக்கு கல்யாணம் ஆனா என்ன சார்.. எதாவ்வது ஏழைகளுக்கு ஆனால் நன்றாக இருக்கும்.

Sunday, August 06, 2006 9:51:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது