இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, June 26, 2006

புகைப்படங்கள் - அசாம் வலைஞர் சந்திப்பு




குவஹாத்தி, வலைப்பதிவர்கள் சந்திப்பின் சில புகைப்படங்கள்




இனிய சினேகத்திற்கு,
வணக்கம், வாழிய நலம், வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்து 12 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்றே சிறிது பணிச்சுமையிலிருந்து ஓய்வு கிட்டியதால் இந்த பதிவு, சந்திப்பு அருமையான முறையில் முடிந்தது. நாங்கள் ஒரு 7 பேர் சந்தித்தோம், ஒரு பெண் மற்றும் 6 ஆண்கள், இதில், பெண்மணி மயூரி ஜங்கிள் டிராவல்ஸ் எனும் ஒரு போக்குவரத்து பதிவு நிலையத்தில் அதிகாரி, ஜுகல் கலிதா எனும் பேராசிரியர், கொலராடோ பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் பேராசிரியராகப்பணியாற்றுகின்றார், பாபுல் கோகோய் எனும் ஒரு கணினி வடிவமைப்பாளர், ரஞ்சன் கலிதா,ருபாங்கர் மஹந்தா மற்றும் நான் மற்றும் ஒருவர் ஆயில் நிறுவனத்தில் மேலதிகாரி, இன்னொருவர் அந்த உணவகத்தின் உரிமையாளர் திரு.துருபா ஹசாரிகா என கூட்டம் களை கட்டியது, 11 முதல் 12.30 வரை சந்திப்பு நிகழ்வதாக ஏற்பாடு, ஆனால் அதற்கு முன் தினமும் , முன் மூன்று தினங்களும் நகரில் தொடர் குண்டுவெடிப்பு இருந்ததால் பட்டியலிட்ட 21 பேரில் 7 பேர் மட்டுமே வந்தனர், அதுவும் என் கல்வி நிறுவனத்திலிருந்து அந்த இடம் ஒரு 30கிலோமீட்டர் தொலைவு, வழியெங்கும் காவலர்கள் தொல்லை, எல்லா இடத்திலும் என் நிறுவனத்தின் அடையாள அட்டையைக்காடியபடி சென்று சேர 12 மணி ஆகிவிட்டது.

செல்லும் வழியெங்கும் பாபுல் மற்றும் மயூரி இருவரும் செல்தொலைபேசியில் அழைத்து வழிகாட்டியவண்ணம் இருந்தனர், சென்றதும் ஏற்கனவே புகைப்படம்மூலம் அறிமுகமாகியிருந்த பாபுல் கோகோயை சந்தித்து கை கொடுத்தேன், பின்னர் மஞ்சரி, அப்புறம் நம்ம ஜுகல் கலிதா சார் என ஒவ்வொருவராக அறிமுகம் முடிந்தது. பின்னர் அவரவர் வலைப்பதிவுகள் பற்றி சிறிதுநேரம் கலந்துரையாடினோம், இதில் என் உரை
சற்று முக்கியமாக இருந்ததன் காரணம் நான் என் மடிக்கணினியை எடுத்துச்சென்றிருந்தேன், அதில் ஏற்கனவே நம் துளசி அம்மா, மஞ்சூர் அண்ணன், நடேசன் அண்ணன், சம்பத்@ செல்வன் போன்றோரின் வலைப்பதிவுகளை திறந்துவைத்தே எடுத்துச்சென்றிருந்தேன். மேலும், தோழர் சிவமுருகன் அவர்கள் கொடுத்த வராகா மென்பொருள்மிகவும் பயனுள்ளதாக இருந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கிவிட்டது. நம் எ கலப்பை போலவே அந்த வராகாவும் எளிமையாக வங்காளி மற்றும் அசாமிய எழுத்துக்களை தட்டச்ச உதவியது, அனைவரும் அந்த மென்பொருளின் தளமுகவரியை குறித்துக்கொண்டும் சிலர் தங்கள் பெண்டிரைவில் எடுத்துக்கொண்டும் இருந்தனர். அன்றைய மதிய உணவினை கொலராடோ பேராசிரியர் ஸ்பான்ஸர் செய்திருந்ததால், அனைவரும் தங்களுக்குத்தேவையானவற்றை ஆர்டர் செய்து உண்ணத்துவங்கினோம். நான் ஒரு சிக்கன் பிரைடு ரைஸ், மற்றும் ஒரு எலும்பற்ற வரண்ட கோழி வருவலை ஆர்டர் செய்ய, மற்றவர்களில் சிலர் ஒரு பியர் ஆர்டர் செய்து குடித்தபடியே அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். நமக்குத்தான் இந்த நல்ல பழக்கம் இல்லாத ;) காரணத்தினால் நம்மால் வெறும் பெப்ஸியையும் , தண்ணீரையும் மட்டுமே குடிக்க முடிந்தது, எல்லாம் முடிய 2 மணி ஆகிவிட்டது, பின்னர் எல்லோரும் அந்த சற்றே இருள் படர்ந்த பார் கம் ரெஸ்டாரண்ட்டில் இருந்து வெளியே வந்து அவரவர் செல்லவேண்டிய திசையில் பறந்தோம், ஏதோ என்னால் இயன்றவரை வலைப்பதிவர் சந்திப்பை என் பாஷையில் கூறியிருக்கின்றேன், அட்ஜஸ்ட் செய்து படித்து பின்னூட்டமிடவும், நன்றி...
ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=2&postid=115131739826288889&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger ஜயராமன் said...

நன்றாக நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை பற்றி அறிந்து மிக்க மகிழ்ச்சி

தங்கள் விவாதங்களில் சுவையான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

நன்றி

Tuesday, June 27, 2006 5:03:00 AM

 
Blogger Dr.Srishiv said...

அவசியம் பகிர்ந்து கொள்கின்றேன் ஐயா,சிறிது வேலைப்பளு காரணமாக இவ்வளவு நாள் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை, இன்றோ அல்லது இந்த வார இறுதிக்குள்ளோ அவசியம் பகிர்ந்துகொள்வேன்..
ஸ்ரீஷிவ்...

Sunday, July 09, 2006 8:37:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது