இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, December 14, 2005

மாற்றினாய்...



உன்னை இழந்த பின்புதான்
எனக்குத்தெரிந்தது நான்
எவ்வளவு பெற்றிருக்கின்றேன் என்று..

புகைபோக்கியாக இருந்த என்னை
புல்லாங்குழலாக மாற்றி இருக்கின்றாய்
விறகு கட்டையாக இருந்த என்னை
வைரமாக மாற்றி இருக்கின்றாய்
அடுப்புக்கரியாக இருந்த என்னை
அனலாக மாற்றி இருக்கின்றாய்

பொறுப்பற்று இருந்த என்னை
புதியவனாக மாற்றி இருக்கின்றாய்
பேதையாக இருந்த என்னை
மேதையாக மாற்றி இருக்கின்றாய்
கடுகு போல் இருந்த என்னை
களிறு போல் மாற்றி இருக்கின்றாய்

இறுதியான மாற்றமாய்
கலைஞனாய் இருந்த என்னை
கவிஞனாய் மாற்றி இருக்கின்றாய்
உன் இதயத்தில் சிறிது நாள் நான்
இருந்து போனதாக நீ எண்ணினாலும்
இறந்துபோகும் நாளிலும் நான்
உன்னை மறந்து போகிலேன்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=113459123173408901&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது