இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, August 22, 2005

உன் அர்ச்சனைகள்...

பொறுக்கி, பொறம்போக்கு
மானம் கெட்டவன்
நல்ல குடும்பத்தில் பிறக்காதவன்
நாதாறி, ஹா ஹா ஹா
எத்தனை எத்தனை புதிய
பட்டங்களடி கொடுப்பாய்?

ஏறத்தாழ இரண்டு மாதங்கள்
இடைவெளிக்குப்பின் உனக்கு
ஒரு அழைப்பு விட எண்ணியதற்கா
எனக்கு இவ்வளவு அன்பு அர்ச்சனைகள்?
என்மீது இத்தனை அன்பா???
உனக்காகத்தானடி இந்த வெண்பா...:)

நான் படிக்கும் கல்லூரி கூட
நான்கு ஆண்டுகள் உழைப்பை
உறிஞ்சிக்கொண்ட பின்னரே
பட்டம் என்ற பெயரில் ஒரு
சட்டம் போட்ட விட்டத்தைக்
கொடுத்தது, ஆனால் நீயோ

எனைப்பிரிய நினைத்த
ஒரு வருடத்திலேயே
எத்தனை பட்டங்கள் வழங்கினாயடி?
எத்தனை முறை சொல்ல உனக்கு?
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் என்றே??

பெண்புத்தி பின் புத்தி என்றே
எல்லோரும் உறைப்பது போலே
நானும் நடப்பேன் என்றால் நான்
என்னடி செய்வேன்?

சொல்லாலடித்த சுந்தரி என்ற
திரைப்பட வரிகள் கூட
எனைச் சுடவில்லையடி,
எனை மணப்பதுவிட சிகப்பு
தனை மணத்தல் நலம் என்றாயே,
நானென்ன அவ்வளவு விஷமா?

நறுமணம் பெற்றதெல்லாம் நல்லவையோ
நாற்றம் கெட்டவை அனைத்தும் கெட்டவையோ
அல்ல என் அன்னையே, உன்னையே
என் ஊற்றுக்கண்னாக அல்லவா அனுமானித்திருக்கிறேன்?
என் ஆரணங்கே, அற்புதமே,
அதிகாலை பொற்பதமே,

விடியலில் வருவாயோ
என் வேதனைகள் தீர?
உளம் குறை தீர வாராயோ
என் உயிர் உனைச்சேர?

காத்திருக்கிறேன் கண்மனி
காதலோடு என்றென்றும்.....

உன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=112470679638446480&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது