இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, June 17, 2005

கடந்து வந்த காவியம் 10

மீண்டும் அதே அசாம்
அதே பூக்கள், அதே புல் வெளிகள்
இனிய பிரம்மபுத்திரா...இருப்பினும்
இல்லையடி நீ இங்கே....

தொலைபேசித்துறை...அந்த ஒரு
துறை மட்டும் இல்லை எனின்
பல காதல்கள் "சொல்லாமலே"
செல்லாக்காசுகளாகியிருக்கும்.

எத்தனை அழைப்புகள்?
எத்தனை அரட்டல்கள்?
இருப்பினும் அந்த காதோர
சிறு குறுகுறுப்பு கிடைக்கவில்லையே எனக்கு?
எத்தனை முறைகள் கேட்டிருப்பேன்
உன்னிடம்? என்னிடம் வாய்திறந்து
அந்த மூன்று மந்திர வார்த்தைகளை????

கடைசிவரை சொல்லவில்லையடி நீ,
அன்று புரியவில்லையடி எனக்கு?
ஏன் நீ அந்த வரிகளை இத்தனை
உயர்வாக மதித்தாய் என்று....

அலைபாயுதே....என்ன ஒரு
அற்புதமான தத்துவப்படம்?
மனைவியிடம் எப்படிநடக்க வேண்டும்?
நடக்கக்கூடாது? எது செய்யின்
அவள் தானே முன்வந்து அந்த
மந்திர வார்த்தைகளைச் சொல்வாள்?

இருப்பினும் உன் விளக்கத்தினில்
எனக்கு சிறிது உடன்பாடு தானடி
ராட்சசியே..;) நம் திருமணம் முடியும்கால்
அந்த மூன்றாம் முடிச்சு உன்
கழுத்தில் விழும் சமையம் என்
காதுகளில் அந்த மந்திர வார்த்தைகளை
உச்சரிப்பேன் என்று கூறிச்சென்றாயே?

இன்றும் அந்த தினத்துக்காக தினமும்
ஏங்கிக்காத்திருக்கிறேனடி...
என்றேனும் ஒருநாள் அந்த நாளும்
வந்து விடாதா என்ற ஏக்கமுடனும்
தூக்கம் தொலைத்த விழிகளுடனும்....

தொடர்வேன்...
என்றும் உன்,
சிவா....
type="text/javascript">&cmt=2&postid=111904253240293869&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger NambikkaiRAMA said...

தங்களின் அழகான ராட்சசிதான் யாரோ?

Sunday, June 26, 2005 9:12:00 PM

 
Blogger Dr.Srishiv said...

முழுவதும் படியுங்கள் தோழர், தெரியும் என் ராட்சசி யார் என்று...:)
ஷிவ்...

Thursday, July 14, 2005 2:35:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது