இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, May 01, 2005

கடந்து வந்த காவியம்-பகுதி 6

கடந்து வந்த காவியம்-பகுதி 6


இறுதியாக வந்ததே அந்த நாளும்
சேர்ந்தன வானில் நவ கோளும்....

முதல்முறை உன்னை காதலியாய் பார்க்க
முகம் முழுதும் முத்து முத்தாய் வேர்க்க...

ரயில் வந்து சென்னை சேரும் முன்னே
என் நினைவோடி வந்ததடி கண்ணே...:)

மூன்று நாள் பயணம் எனக்கு
என் செல்லுக்கும் மின்னுக்கும் ஒரு பிணக்கு ;)

எந்த பெட்டியில் வருகிறேன் என
சொல்ல மறந்தேன் அன்று....
அதற்காக இத்தனை தவிப்பா இன்று???

செல்லுக்கு மின்சாரம் தர வேண்டி
ரயில் நிலையம் அதனை தாண்டி
வெளியில் நானே வந்தேன் உன்
வேதனை அதனை வென்றேன்....:)

எத்தனை பெட்டிகள் பார்த்திருக்கிறாயடி?
எனக்காக இத்தனை அன்பா??
உனக்காகவே எழுதுவேனே வெண்பா :)

முதலிருந்து கடைசிவரை பார்த்து
உன் முகம் அகம் இரண்டும் வேர்த்து
நீர் அருந்த, வருந்திய முகமும்
சுருங்கிய அகமுமாய் நீ வர...

மின்னூட்டு பெற்ற என் செல்லோடு
ரயில் திரும்ப திரும்பிய நான்
தூரத்தில் கண்டேன் உன்னை
என் வாயெல்லாம் பல்லோடு ;)

ஓடி வந்து என் கை பிடித்தாய்
என் கை பிடித்து மெய் துடித்தாய்......
எத்தனை நாட்களின் முடிவு?
இது எங்கள் இருவரின் விடிவு????

அமர்ந்து பேசவே நேரமின்றி
அரக்கன் ரயிலும் கூவிடவே...
கைபிடித்து முத்தமிட்டு
பழரசம் சிறிது நீ பாதி நான் பாதி ;)

திரும்ப வருகிறேன் தாயை கண்டு
என்றே திரும்பியது என் மன நண்டு :)
பறந்ததே மன வண்டு அது கூறியது
நீயே என் பெண்டு.....:)

மனமே இல்லாது மரம் போல்
இதயம் இழந்து இரயிலில் அமர்ந்தேன்.
வீடு.....அது ஒரு அற்புதமான அனுபவம்...
எதுவுமே அழகாக தெரிகிறதே?
இதுவும் காதலின் அற்புதங்களில் ஒன்றோ???
type="text/javascript">&cmt=0&postid=111501415856596786&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது