இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, May 13, 2005

உனக்காக ஒரு வார்த்தை...

ஏதோ சில ஞாபகங்கள்,
யாரை என் உயிர் தோழியாக எண்ணினேனோ அவரே என் எண்ணத்திற்கு முரணாய், அவளுக்காக பரிந்து பேசப்போய் நான் இன்று மடையனாய், கடையனாய், அவள் இன்று அனைவருக்கும் நல்லவளாய், வலிக்க வைத்துவிட்டாயடி, தவறு செய்துவிட்டாய், ஒரு நல்ல நட்பை இழந்துவிட்டாய், இன்று உனக்கு மற்றவர்கள் நல்லவர்களாகத்தெரியலாம், ஆயினும் நேற்று உன் வலியைச்சுமந்தவன் நானடி, என்னைச் சிலுவை சுமக்க வைத்துவிட்டாயே? உனக்கு பிடித்த ஒரே காரணத்துக்காய் எனக்கு பிடிக்காத பலவற்றை உனக்காக சுமந்தேன், இன்று சிலுவையையும் உனக்காய்....என்ன ஒரு வித்தியாசம் தெரியுமா? இன்று நீ என் அருகில் இல்லை, பரவாயில்லை, இப்படி என் இதயம் கிழிக்க என் அருகில் நீ இருப்பதைவிட என் அருகில் இல்லாமலிருப்பதே சாலச்சிறந்ததில்லையா??

என்னத்தவறடி செய்தேன் நான்? ஏன் என்னை முட்டாளாக்கினாய்? நீ என்ன சொன்னாலும் பதிலுரைக்காமல், திருவிழாக்குழந்தையாய் தலையை தலையை ஆட்டிக்கொண்டு இருந்தேனே? அது என்ன நான் செய்த தவறா..?? தெரியவில்லையடி, ஆயினும் ஒவ்வொருமுறை அடிபடும் போதும் வலிக்கவே வலிந்த்தாலும் இந்த பாழாய்ப்போன மனது மீண்டும் மீண்டும் சுற்றி வந்தது உன்னைத்தானே? ஒரு பூனைக்குட்டியாய் உன் காலைச்சுற்றினேனே? இதுதானா நீ எனக்குத்தந்த பரிசு? நல்லது தோழி,
இதுவும் கடந்து போகும்...
அன்புடன்
சிவா..
type="text/javascript">&cmt=2&postid=111601248704224288&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger meenamuthu said...

சிவா...
மனதில் ஏற்பட்ட வலி மறைந்து போகட்டும்
இனி நடப்பவை யாவும் நல்லவைகளாகட்டும்.

>>இதுவும் கடந்து போகும்...<<

அதுதானே வாழ்க்கை?

அன்பு
மீனா.

Monday, May 16, 2005 6:17:00 AM

 
Blogger Dr.Srishiv said...

கண்டிப்பாக அம்மா,
வலிகள் மறைந்தாலும் தழும்புகள் மறைவது இல்லை அல்லவா? அப்படித்தான் இதுவும், நன்றிகளுடன்,
சிவா...

Tuesday, May 17, 2005 2:37:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது