இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, March 25, 2006

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்


சின்னஞ்சிறு வயதினில்
ஒன்றுமறியா பருவத்தில்
குழவி பருவம் தாண்டி
மழலையில் நடைபயில்கையில்
ஓட்டிப்பழகிய நடைவண்டி,

மழலை பருவம் தாண்டி
மாணவப்பருவத்தினில்
ஆடிய கூட்டாஞ்சோறாட்டம்,
அருமையான பள்ளிதனில்
அழகிய கரும்பலகையில்
வெள்ளை சுண்ணாம்புக்கட்டியால்
எழுதும் எழுத்துக்கள்
தெளிவாகத்தெரிந்திடவே
கோவைத்தழையினையும்
அடுப்புக்கரியினையும்
அரைத்துப்பூசிய நாட்கள்,

மரவண்டி ஓட்டிய நாட்கள் போய்
பனங்காய் சக்கர வண்டி ஒட்டி
பல் தெரிய சிரித்த நாட்கள்,
ஈருருளியின் டயர் வண்டியில்
இரண்டுபேர் போகவே,
ஏகப்பிரயத்தனம் செய்து
உருண்டு விழுந்த நாட்கள்,


பொன்வண்டினைப்பிடித்து
தீப்பெட்டியிலடைத்து வைத்து
பகலினில் பள்ளிசெல்கையில்
(இன்றோ பள்ளி "செல்" கையில் ;) )
சட்டையில் ஒட்டிச்சென்று
இரவினில் அது இடும்
முட்டையைப்பார்க்கவே,
ஏங்கிக்காத்திருந்த நாட்கள்,

கதவினைப்பிடித்துக்கொண்டே
அம்மா வரும்வரை ஆடியபடி
சாலையைப்பார்த்து சோர்ந்த நாட்கள்,
தாத்தாவின் தோள் ஏறி
பேய்கதை கேட்டு பயந்து
தோளிலேயே தோய்ந்த நாட்கள்,

சிறுவயதில் சஞ்சயிகா திட்டத்தில்
சேமித்து வைத்த சிறுசேமிப்பு,
செட்டியார் கடையில்
சேமிப்பு அட்டையில்
நாளொன்றுக்கு நாலணா காசு
ஆண்டுமுழுக்க சேர்த்து
ஆண்டவர் கோயில் கொடையில்
அம்மாவிற்கு ஜாக்கெட்
எடுத்துக்கொடுத்த நாட்கள்,

மழைபேயும் நாட்களில்
அம்மாவின் முந்தானையில்
அடைகாத்த குஞ்சுபோல்
அடைந்தே வீடுவந்த நாட்கள்,
முதன் முதலாய் தாத்தா
முதியோர் உதவித்தொகைதனில்
வாங்கி ஓட்டிய ஈருருளி,

சத்தை பம்பரம் என்றும்
சீட்டுக்கட்டு என்றும்
கோலி என்றும் கில்லி என்றும்
எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்???

இன்று, பிறக்கையிலேயே
இணைய இணைப்புடன்,
பிறக்கும் குழந்தைக்கு,
காணக்கொடுத்துவைக்கலயே???
கண்கள் பழுதடைந்து,
காலாண்டு படிப்பிற்குள்
கண்ணாடி போட்டு
கால் தடுமாறி,
சுயத்தினை இழந்து
நிஜத்தினையும் இழந்து
ஒன்றும் மூன்றும் என்னவென்றால்
கணினியைக்கொண்டு வா
கணிப்பானை கொண்டுவா
எனும் குழந்தைதான்
நாளை நாட்டைக்காக்குமா???

பிறந்த குழந்தைக்கு புட்டிப்பாலாம்
தாய்ப்பால் கொடுத்தால்
தாய்மைக்கு பெருமை
தாய்க்கும் பெருமை ஆனால்
அழகு கெட்டுவிடுமாம், அம்மணிகள்
சொல்லுகையில் , நாளை
அமெரிக்காவிற்கு அடிமையாக்க
இன்றிலிருந்தே அவனை/ளை
மாற்றுப்பாலுக்கு தயாராக்கும் அன்னையே
இனியேனும் கொடடி உன்
உயிரான குழந்தைக்கு
உன் பாலை உயிராக்கி,

அதிலிருந்து வந்தவர்களே இன்றும்
நம் அனைவராலும் போற்றப்படும்
காந்தி, நேரு, குமரன், சிதம்பரம்,
புட்டிப்பால் குடித்து புத்திசாலியாய்
நாட்டுக்குப்பணிபுரிந்த
நல்லவன் ஒருவனைக்காட்டு,
நாளையே எடுத்து விடுகின்றேன் என் நாக்கை,

ஊட்டடி உன் குழந்தைக்குத்தாய்ப்பாலுடன்
தமிழையும், தாய்நாட்டுப்பற்றினையும்,
இரவினில் நிலவு காட்டி உணவு கொடடி
உன்னை தங்கத்தாம்பாளத்தில் உணவளிக்க
சொல்லவில்லையடி, தகரத்தில் கூட
தாய்ப்பாசத்தினையும் , தாய்மண்பாசத்தையும்
ஊட்டி வளர்த்தால் உயருமே
உன் மதிப்பும் உன் தாய்
மண் மதிப்பும் நாளை பாரில்....






type="text/javascript">&cmt=0&postid=114329491520173804&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது