இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, January 27, 2006

காதல் வலை - பகுதி 11




ஆமாம் அவளின் அந்த மடல் எனக்கும் சிறிது ஆறுதலைத்தந்த மடல்,ஆனால் அவள் அதில் கூறியிருந்த விசயங்கள், அவள் போன முறிந்த உறவில் எந்த அளவு பாதிக்கப்பட்டு வருந்தி இருந்தாள் என்பதை தெளிவாகக்காட்டியது கண்ணாடிபோல்."ஈஸ்வர், நாம நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கோம், அது கெட்டுப்போயிடக்கூடாது ஈஸ்வர்"

"நாம, நல்ல நண்பர்களா இருப்போம், ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சிக்குவோம், எப்போ நமக்குத்தோனுதோ அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்"

மனம் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளியது, "சரி டா செல்லம், உன் இஷ்டப்படியே செய்வோம், ஆனா இப்போ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லேன் ப்ளீஸ்..."
"இல்லடா, அந்த வார்த்தையை நான் இப்போ சொல்லமாட்டேன், உங்க வீட்டுல எங்க வீட்டுல ரெண்டுபக்கமும் அப்பா அம்மா ஒத்துக்கிட்டப்புறம் நீ என் கழுத்துல மூனுமுடிச்சு போடுவ இல்ல? அந்த மேடைல நீ மூணாவது முடிச்சி போடறப்போ உன் காதுல சொல்வேண்டா....."

இப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது அவள் சொன்ன அந்த வார்த்தைகள்தான்...அதன்பின் தினமும் அவளின் வார்த்தைகளே என் தாலாட்டு, இரவினில் உறங்கும்முன் என் சோகத்தினை பகிர்ந்துகொள்வாள். அவளிடமும் உள்ள சோகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத்தெரியவந்தது. எவ்வளவோ பேசினோம், அவள்வேலையும் இல்லாமல் இருந்ததால் அழைக்க அவளிடம் பணம் இல்லை அந்த சமயம் அவளிடம் பேசியது எப்படி? அதுவும் ஒரு இனிமையான சுவாரசியமான சம்பவமே....:) உங்களுக்கு எல்லாம் விசிசி கார்டு என்னும் இந்திய தொலைபேசி அட்டை தெரியும் என்றே நம்புகின்றேன். அந்த அட்டையில் உள்ள எண்ணைப்பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் பொது தொலைபேசியிலிருந்தும் பேசலாம். அது பொது தொலைபேசி கணக்கில் வராது, இந்த அட்டையிலிருந்து பணம் கழித்துக்கொள்ளப்படும்.

தில்லியிலிருந்து அவளுக்கு அந்த தொலைபேசி அட்டையின் எண்ணை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க, அதனைக்குறித்து வைத்துக்கொண்டு இரவில் என் செல் தொலைபேசிக்கும் ஆய்வுச்சாலைக்கும் அழைத்துப்பேசுவாள். மனம் விட்டுப்பேசுவோம். பல விசயங்களைப்பகிர்ந்துகொண்டோம், எத்தனை நாட்கள், எத்தனை இரவுகள்? இந்த பாசம் வேறுவிதமாக இருந்தது. இதுவரை தோழியாக மட்டுமே பார்த்த அவளை என் காதலியாக இல்லை இல்லை மனைவியாக பார்த்து பேசத்துவங்கினேன். எத்தனையோ விடயங்கள், பல திட்டங்கள், இடையில் அவளுக்கு வேலை தேடலுக்காக கல்விக்கு ஆலோசனை என்று பலவும் இருந்தன. என் பல தோழர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். வேலைக்காக விண்ணப்பங்களை நானே அவள் சார்பாக அனுப்பத்துவங்கினேன். இதற்கிடையில் அந்த மேமாதமும் வந்தது, ஊருக்குச்செல்லவேண்டும், நினைக்கவே மனதிற்கு சுகமாக இருந்தது, நான் சென்ற பயணங்கள் எல்லாம் இதுநாள் வரை ஒரு அர்த்தமின்றி தேடல்களுடன் இருந்தன, இந்த பயணம்தான் முதன்முறையாக ஒரு தெளிவான நோக்கத்துடன் அவளை சந்திக்கச்செல்லும் பயணமாக இருந்தது...என் மாது.....சொல்லவே என்ன சுகமாக இருக்கின்றது? தில்லியிலிருந்து அவளுக்குத்தகவலளித்துவிட்டு கிளம்பினேன், எனக்காக செண்ட்ரலில் காத்திருப்பதாகக்கூறியிருந்தாள், வண்டி செண்ட்ரலை நெருங்கியது....மனமெங்கும் ஒரு பதட்டம், கண்கள் அவளைத்தேடினாலும் இதயத்தில் ஒரு ஒளி, அவள் கேட்டிருந்த ஆரக்கிள், விசுவல் பேசிக் மென்பொருட்களுடன் அவளைத்தேடினேன், சமயம் பார்த்து, என் செல்தொலைபேசியிலும் மின்னூட்டு குறைந்துபோக, தவித்த படி தேடினேன், அவள் பிளாட்பாரத்தில் இல்லை......:(
தொடர்வேன்...
type="text/javascript">&cmt=1&postid=113837817573763971&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Dr.Srishiv said...

நன்றிகள் பல்லவி,
நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :) முடிவினை இப்பொழுதே சொல்லிவிட்டால் சுவாரசியம் இருக்காதே? :) நீங்கள் எதிர்பார்க்காத முடிவுகளை கொடுப்பேன் என்பது மட்டுமே இப்போதைக்கு சொல்லிக்கொள்கின்றேன்....:) தங்கள் வலைப்பூ என்ன? தங்களின் மனம் போல வெண்மையாகவே உள்ளது? ஏதேனும் எழுதலாமே? :)
ஸ்ரீஷிவ்...:)

Wednesday, February 01, 2006 11:03:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது