இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, January 11, 2006

காதல் வலை - பகுதி 10





ஆமாம் , அவளுக்கு மனமும் உடலும் சற்று சரியில்லைதான், பின்னர்தான் அவளின் சொந்த கதைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். என்னவோ எனக்கும் ஒரு ஆறுதலாக இருந்தது, அவளிடம் பேசுவது, வாரம் ஒருமுறை பேசுவது போய், தினம் மாலை பேச ஆரம்பித்தேன். அவளுக்காக , நண்பனிடம் செல் தொலைபேசி இரவல் வாங்கி பேசினேன். நிறைய பேசினோம், நிறைய புரிந்துகொண்டோம், ஆனால் அவற்றுள் முதன்மையாக நான் புரிந்துகொண்டது, அவளின் சுருக்கென்ற கோபமும், பொய் சொன்னால் பிடிக்கவே பிடிக்காதென்பதும்.
அதற்கு அவள் தண்டனை தரும் விதமும் வித்தியாசமாக இருக்கும், அவளை அவளே வருத்திக்கொள்வாள். ஒருவாரம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாள், முக்கியமாக என்னுடன் பேசும் பேச்சுக்களில் உயிரிருக்காது. வெறுமனே, நலமா, நலமே தான். இந்த சூழலில்தான் அவளின் பணி முடிந்ததுஅவளின் அலுவலகத்தில். வேறு வேலை கிடைக்கும்வரை வீட்டில் தான் இருக்கவேண்டும். அவளின் மின்னஞ்சல்களைக்கூட வாரம் ஒருமுறைதான் சோதிக்கமுடியும். அந்த சமயத்தில்தான் அவளின் அருமை புரிந்தது, எந்த அளவிற்கு அவளை நான் மிஸ் பன்னுகிறேன் என்று. அவளின் தந்தை அவளை சென்னை சென்று வேலை தேடச்சொல்ல, சென்னை வந்து சேர்ந்தாள் மாது. வேலைதேடுவதை ஒரு வேலையாகக்கொண்ட பல்லாயிரம் பட்டதாரிகளுள் ஒருவளாக ஐக்கியமானாள். தங்கியது அவளின் சித்தப்பா வீட்டில், அங்கிருந்த அவளின் தங்கையையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தாள். ஏனெனில் அவளிடம்தான் இணைய வசதியுடன் கூடிய கணினி இருந்தது காரணம், இரவு வேளைகளில் என்னுடன் ஒரு 30 நிமிடங்கள் பேசுவாள். அதுவே அதிகம், அந்த சமயத்தில்தான் அவளின் தங்கையிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் என் மனதிலிருந்த எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். அப்போது அவள் கூறியது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது, அவளின் தங்கைக்கும் ஒரு காதலன் இருக்கும் செய்தியே அது.

அவனுடன் என்னை அவள் ஒப்பிட்டுக்கொண்டிருக்கும் செய்தியும் அன்றுதான் தெரியவந்தது. மேலும் எதுவும் வேறு கணக்குகள் அங்கு வருவதற்குள், என் மனதிலிருந்த எண்ணத்தினை அவளின் சகோதரியிடம் கேட்டுவிட்டேன் " அனு, மாதுவ நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறேன், நீங்க என்ன நெனைக்கறீங்க? என்னை தப்பா நெனச்சிக்காதீங்க"
" இல்ல ஈஸ்வர், நிச்சயம் உங்களை நான் தப்பா நெனைக்கல, நானும் என்னோட வுட்பீயும் அதைப்பற்றித்தான் போனவாரம் பேசிக்கொண்டிருந்தோம், ரொம்ப சரியா ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்ட நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டா ரொம்ப பொருத்தமா இருக்கும், நீங்க நேர்ல இருந்தா உங்களை கையெடுத்து கும்பிடுவேன் ஈஸ்வர்"

என்ன சொல்வதென்று எனக்குப்புரியவில்லை, எப்படி அவளிடம் தெரிவிப்பது இதை? ஒரே வழி எப்பொழுதும் போல் மடல்தான், முதல்முறையாக என் சொந்தப்புலம்பல்கள் இல்லாத ஒரு மடலை அவள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லைதான். "ஏன் ஈஸ்வர்? ஏன் இப்படி ஒரு மடல் எழுதினீங்க? என்ன இது? ஏன் இப்படி? " அனலிலிட்ட புழுவாக இருந்தது அவளின் மடல், "யோசிங்க ஈஸ்வர், என்ன இது? "என் கருத்தில் நான் உறுதியாக இருந்தேன்....இறுதியாக அவளிடமிருந்து ஒரு மடல்....அதில்.......
அடுத்த பகுதியில் தொடர்வேன்......
type="text/javascript">&cmt=0&postid=113705784627588999&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது