இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, March 25, 2005

வலிக்குதடி...

எத்தனையோ நாட்கள்
எத்தனையோ இரவுகள்
உறங்காமலும் விழிக்காமலும்
வாழாமலும் சாகாமலும்
இருக்கும் வித்தையை எனக்கு
கற்றுக்கொடுக்கத்தான் இந்த
வலி கொடுத்தாயோ???

எத்தனை இரவுகளடி?
தூங்காமல் நீயும் நானும்
இரவுகளை விடியவைத்திருக்கிறோம்??
செல்லமாய் செல்லம் என்றாயடி....
வார்த்தைகள்....வரிகள்....
எத்தனையோ பாடல்கள்...

இரவு முழுதும் பாடுவோமே?
மறந்து போய்விட்டதா?
இல்லை மருத்துவிட்டதா?
மனம் வலிக்க வைக்கின்றாயே இன்று??
ஏதோ ஒரு விஷயம்
சரியாக புரிந்துகொள்ளாமல்
சபிக்கின்றாயே என்னை???
சபிப்பதோடு விட்டிருந்தால்
சயனித்திருப்பேன்.....

என் சயனத்தையும் சலனப்படுத்தி
இன்று சயனம் தொலைத்து.....
சுயத்தை இழந்து சிவம் ஒன்று
சவம் ஆகி நிற்கிறது உன்முன்...

மனது உடைந்து மரணத்தை
எதிர்பார்த்து உன்னை இறுதியாய்
சந்திக்கும் நாளை எதிர்நோக்கி.....
இருக்கும் இந்த சமயமும்....
வலிக்குதடி........
type="text/javascript">&cmt=0&postid=111175752388343336&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது