இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, May 03, 2006

இந்தியாவிலும் ஓரு உலக சாதனை நாயகன்

ஏழு மணி நேரத்தில் 65 கி.மீ., துõரம் ஓடி லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றான் சிறுவன்

புவனேஸ்வர்: ஒரிசாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் புதியா சிங், 65 கி.மீ., துõரம் மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்தான். சிறுவனின் சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

ஒரிசாவை சேர்ந்த புதியா சிங் பிறந்து நான்கு ஆண்டுகள் எட்டு மாதம் தான் ஆகிறது. இந்த வயதில் அத்தனை எளிதில் பிறர் யாரும் செய்யாத சாதனையை செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளான் இந்த சாதனைச் சிறுவன். மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பது சிறுவனின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை செயல்படுத்த நேற்று புதியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரிசாவின் புனித நகரான பூரியில் உள்ள புகழ் பெற்ற ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் நேற்று காலை தனது சாதனை ஓட்டத்தை துவங்கினான். சிறுவனின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ், மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் உடன் ஓடி வந்தனர். ஓட்டப் பந்தய வழி முழுவதும் சாலையில் ஓரங்களில் திரண்டிருந்த மக்கள் புதியாவை கைதட்டி உற்சாகப்படுத்தி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏழு மணி இரண்டு நிமிடங்களில் 65 கி.மீ., துõரத்தை கடந்து புவனேஸ்வர் நகருக்குள் நுழைந்த புதியா தனது ஓட்டத்தை நிறைவு செய்தான். பின்னர் சாதனைச் சிறுவனை கவுரவிக்கும் வகையில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில், லிம்கா சாதனைப் புத்தகத்தின் உதவி ஆசிரியர் அம்ரீன் துõர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது," பூரியிலிருந்து புவனேஸ்வர் வரை புதியாவின் ஓட்டத்தை கவனமாக கண்காணித்தோம். இத்தனை சிறிய வயதில் வேறு யாரும் இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க முடியாது. இது மிகச் சிறந்த சாதனை மட்டுமல்ல அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விஷயம். புதியாவின் பிறந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் செய்த சாதனைகள் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படும். சிறுவனின் சாதனை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும். புதியாவின் சாதனை குறித்த விவரங்கள் லிம்கா ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 2007ம் ஆண்டிற்கான லிம்கா புத்தகத்தில் சிறுவனின் சாதனை இடம் பெறும்,' என்றார்.

பாராட்டு விழாவில் ஒரிசா விளையாட்டு துறை அமைச்சர் டெபாசிஸ் நாயக், காங்கிரஸ் கட்சி எம்.பி., அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதியாவின் தாயார் சுகந்தி சிங் தனது மகனின் சாதனை குறித்து," புதியாவால் ஒரிசாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை கிடைத்துள்ளது. எனது மகனின் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்,' என பெருமிதத்துடன் கூறினார்.
நன்றி : தினமலர் - 03-05-06
type="text/javascript">&cmt=7&postid=114668133604648383&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வீரப்பன்????



எனக்கு வந்த ஒரு முன்னேற்றப்பட்ட மடலின் தமிழாக்கம் இது :
1) மரங்கொத்தி (kingfisher) கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?

விடை : பீரப்பன்

2) பிஸ்லெரி கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?

விடை : நீரப்பன்

3) பேம்பினோ வெர்மிசெலி கம்பெனியின் உரிமையாளர் ஆனால் வீரப்பனை என்னவென்று அழைப்பர்?

விடை : கீரப்பன்(நம்ம ஊரு பாயாசத்தை வடக்குதேசத்தில் கீர் என்று அழைப்பர்)

4) வீரப்பனின் மகள் அவருக்கு எப்படி கடிதம் எழுதியிருப்பார்?

விடை : டியரப்பன்

5) வீரப்பன் தன் தொழிலாளிகளுக்கு ஊக்கத்தொகையாக என்ன கொடுப்பார்?

விடை : VSOP - Veerappan's sandalwood options ,அவர் குழுவில் சேர்ந்த ஐந்துவருடம் கழித்து தாங்கள் சந்தன மரத்தினை வெட்டிக்கொள்ளலாம்.

6) தன் மேலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக என்ன கொடுத்திருப்பார்?

விடை : VTOP - Veerappan's Tuskoptions , தாங்கள் குழுவில் சேரும் சமயம் ஒரு யானைக்குட்டி தங்கள் வசம் கொடுக்கப்படும், அதுவளர்ந்தாலோ அல்லது கடைசியிலோ அதன் தந்தத்தினை வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.

7) வீரப்பனின் மென்பொருள் கம்பெனியின் பெயர் என்ன?

விடை : VIPRO - Veerappan IT products ;)

எப்படி இருக்கின்றது தோழர்களே? :)
ஸ்ரீஷிவ்....:)
type="text/javascript">&cmt=4&postid=114666243047641721&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, May 01, 2006

கானலும் கோணலும்


கானலும் கோணலும்


குளிர் நீராய் நினைத்து
இறங்கினேன் ஒரு குளத்தில்
வெயிலில் பார்த்த எனக்கு
அது ஒரு குளிர்நீர் தடாகமாகவே
தென்பட்டது அன்று,
இறங்கிய பின்னரே தெரிந்தது
அது குளிர் நீரும் அல்ல
குட்டையும் அல்ல,
கானல் என் கண்களுக்கு
கோணலாய் தெரிந்ததே?

கண்களை ஏமாற்றும் ஒரு
கானல் நீரூற்று என்று,
காலம் கடந்தபின் கண்களில்
நமஸ்காரம் தேடினால்?

காலத்தை மதித்தேன்,
பல காயங்களையும் மிதித்தேன்,
கண்மணி உனையும்
கருத்தினில் உறைத்தேன்,

காலமும் கடந்தது
கால்களும் சோர்ந்தன,
கூற்றுவன் வருமுன் எங்கேனும்
ஊற்றுக்கண் தென்படுமா எனத்தேடினேன்,

என்னேர ஓய்விலும்
முன்னேற முயன்றேன்,
பகலை இரவாக்கி அயராமல்
இரவையும் பகலாக்கி உயர்ந்தேன்,

இன்று என் கண்களில்
ஒரு வற்றாத ஜீவநதிதென்பட
ஓடிச்சென்று அதன் மடியில்
அமர்ந்து அள்ளி வாரி
அந்த நீரை முகத்திலிறைத்து
மூன்றுமுறை நிலம் தாழ்ந்தெழுந்தேன்,

கோணல்கள் இன்று
கானல்களாய் மாற
வெற்றிபெற்றவனாய் உங்கள்முன்...

மீண்டும் நிலம் தாழ்ந்து
மண் மகளை மனதார முத்தமிட்டு
பாசத்துடன் கூறும் முதல் வணக்கம்,
என் தாய் தமிழோடு இணைந்த
தாய் தமிழ் வணக்கம்.
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=0&postid=114653973716509528&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது